
சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மீட்புபணிகளில் 6 தீயணைப்பு வாகனங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், 8 ஆம்புலன்ஸ்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 60 பேர் ஈடுபட்டுள்ளனர். அதே போல மாநில பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 90 பேர் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக