திங்கள், 23 ஜூலை, 2018

மோடி மீண்டும் வெளிநாடு ... தலையலங்காரம் புறப்பட்டதே ... ஆபிரிகாவுக்காம்

ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி பயணம்!
மின்னம்பலம்: ருவாண்டா, உகாண்டா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான ஐந்து நாட்கள் சுற்றுப்பயணத்தைப் பிரதமர் மோடி இன்று (ஜூலை 23) தொடங்குகிறார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் 10ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு ஜூலை 25ஆம் தேதி தொடங்குகிறது. வளர்ச்சி, உலகளாவிய ஆட்சி நிர்வாகம், சுகாதாரம் மற்றும் தடுப்பூசி, அமைதி, நிலையான முன்னேற்றம் போன்ற அம்சங்களுடன் இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று (ஜூலை 23) பயணப்படுகிறார். முதலில் இரண்டு நாட்கள் பயணமாக ருவாண்டா செல்லும் மோடி, அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் சகோதரத்துவம் மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் விதமாக ருவாண்டாவிற்கு இந்தியா சார்பில் 200 பசுக்களைப் பரிசாக அளிக்கவுள்ளார்.

பிரதமர் மோடியுடன் உயர்நிலை வர்த்தகக் குழு ஒன்றும் ருவாண்டா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவிருக்கிறது. 24ஆம் தேதி உகாண்டாவுக்கு செல்லும் மோடி, அங்கு வாழும் இந்திய சமுதாயத்தினருடன் உரையாடுகிறார். தொடர்ந்து உகாண்டா நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்றுகிறார்.
பயணத்தின் நிறைவாக 25ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்லும் மோடி, ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெறும் 10ஆவது பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், தென்னாப்பிரிக்க அதிபரையும் சந்தித்து பேசவுள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளார்.

கருத்துகள் இல்லை: