வியாழன், 25 ஜனவரி, 2018

மு.க, முத்து.. பேரனின் திருமணத்துக்கு கூட வரமுடியாத ... கவனிப்பார் இல்லை?



திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து,   தனது மனைவி சிவகாமசுந்தரியோடு திருவாரூரில் தங்கியிருக்கிறார்.   கடந்த 15-ந் தேதி. திடீரென அவருக்கு  உடல்நலக் குறைவு எற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவரை, உடனடியாக தஞ்சைக்கு கொண்டுபோகும்படி மருத்துவர்கள் சொல்ல, அவர் தஞ்சையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். இதைத் தொடர்ந்து உடல்நலம்  தேறிய மு.க.முத்து தற்போது டிஸ்சார்ஜ்  ஆகியிருக்கிறார். முன்னாள் முதல்வர் கலைஞரின் மகனான முத்துவை, கலைஞர் குடும்பத்தினர் கூட கண்டுகொள்ளவில்லை. நேரில் யாரும் வரவுமில்லை.  தீவிர சிகிசைப் பிரிவில் மு.க.முத்து படுத்திருக்க, அவர் மனைவி மட்டும் வெளியே தன்னந்தனியாய் உதவிக்கு கூட ஆளில்லாமல் பரிதவித்துக்கொண்டிருந்ததுதான்  பெரும் சோகம் . 
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவை இளைய முறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தி.மு.க. தலைவர் கலைஞரின்  முதல் மனைவி பத்மாவுக்கு பிறந்தவர்தான் இந்த மு.க. முத்து. அழகிரிக்கு மூத்தவர். 1948ஆம் ஆண்டு பிறந்த மு.க. முத்து ,' பிள்ளையோ பிள்ளை', 'சமையல்காரன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சிவகாமிசுந்தரி என்பவரை இவர் திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்குப் பிறந்தவர்தான் அறிவுநிதி. தற்போது 70 வயதை நெருங்கி விட்ட மு.க. முத்துவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  ஆதரவற்ற நிலையில், மு.க.முத்து அடையாரில்  நண்பர் ஒருவரின் வீட்டில் மனைவியுடன் தஞ்சம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இரு வருடங்களுக்கு முன்பு, தங்களிடம் உள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் தங்கள் மகன் அறிவுநிதி, தங்களைத் துன்புறுத்தி வருவதாக மு.க.முத்துவும் அவரது மனைவியும் போலீசில் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் ஒருமுறை  , உடல் நலக் குறைவு காரணமாக மு.க. முத்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டபோது, தி.மு.க தலைவர் கருணாநிதி, தயாளு அம்மாள் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று  நலம் விசாரித்தனர். விகடன்

கருத்துகள் இல்லை: