சனி, 27 ஜனவரி, 2018

நடிகை சுகன்யாவின் வீட்டு வாடகையை முழுங்கிய நாம் தமிழர் கட்சி அலுவலகம்

Shankar A : நடிகை சுகன்யாவுக்கு சொந்தமான வீடு ஒன்று, சென்னை பெசன்ட் நகர் முதல் மெயின் ரோட்டில் இருக்கிறது.
நாம் தமிழர் இயக்கத்தின் வழக்கறிஞர் தடா சந்திரசேகர் 07.04.2015 அன்று சுகன்யாவின் வீட்டில், வாடகைக்கு குடி போகிறார். ஒப்பந்தத்தி, வீடு, குடியிருக்கும் பயன்பாட்டுக்கு மட்டுமே, வேறு எந்த பயன்பாட்டுக்கும் கிடையாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 2016ல், சட்டப்பேரவை தேர்தலுக்காக, சுகன்யாவின் வீடு, நாம் தமிழர் அலுவலகமாக மாற்றப்படுகிறது. வாசலில், வீட்டை மறைக்கும் அளவுக்கு சீமானின் பேனர்கள் வைக்கப்படுகின்றன. உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு சுகன்யா நோட்டீஸ் அனுப்புகிறார். அவ்வளவுதான். அன்று முதல் வாடகை தருவதை தடா சந்திரசேகர் நிறுத்துகிறார்.
இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இன்று வரை நிலுவையில் இருக்கிறது. வீட்டையும் காலி செய்யவில்லை.
தற்போது தடா சந்திரசேகர் தரப்பில், சுகன்யாவுக்கு சமாதானத் தூது விடப்பட்டுள்ளது. என்ன சமாதானம் என்றால், நிலுவையில் உள்ள வாடகையை கேட்காதீர்கள்.
டம்லர்ஸ்: தம்பி  நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் ,, இதை நீங்க நல்ல புரிஞ்சிகொனும் ..  அப்பல்லாம் வாடகையை அரசே கொடுத்திடும் ஹஆகாஹ்ஹா
வீட்டை காலி செய்து கொடுத்து விடுகிறோம் என்பதே அந்த சமாதானம்.
இதற்கு சுகன்யா மறுப்பு தெரிவித்து விட்டார்.
சுகன்யா, ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர். பிரபலமான நடிகை. அவரையே இந்த பாடு படுத்தும் நாம் தமிழர் கட்சியினர், செல்வாக்கு இல்லாத சாமான்யர்களை என்ன பாடு படுத்துவார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.
இதுதான் மாற்று அரசியலா ? மாற்று அரசியல் பேசறவனும் வாடகை குடுக்க மாட்றான். ஆன்மீக அரசியல் பேசறவனும் வாடகை குடுக்க மாட்றான்.
என்ன மாதிரியான டிசைன் இது ?

கருத்துகள் இல்லை: