திங்கள், 22 ஜனவரி, 2018

ஏமாற்றம் அளிக்கும் எதிர் கட்சிகள்:... இதுவரை கண்டிராத கிரிமினல் அரசியல்வாதிகள்

சுவாதி : தேசிய அளவில் எதிர்கட்சிகள் இருக்கா?? இல்லையா? இல்ல எங்கயாது பார்க்'ல உக்காந்துட்டு பக்கோடா, பானிபூரி சாப்பிட்டு இருக்காங்களானு தெரியல!!..
பண மதிப்பிழப்பின் விளைவுகள், தவறான GST, பொருளாதார சீரழிவு, பெட்ரோல், டீசல், காஸ் எல்லாமே வரலாறு காணாத விலையேற்றம், ஊழல், கிரிமினல் அரசியல், பண வீக்கம், GDP வீழ்ச்சி, விவசாயிகள் தற்கொலை, ஏற்றுமதி வீழ்ச்சி, இறக்குமதி வரலாறு காணாத வளர்ச்சி, வேலை வாய்ப்பு குறைவு, நாட்டில் அதிகரித்து வரும் வன்முறை, சிறு, குறு தொழில் வீழ்ச்சி, ஒரு பக்கம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெருவுக்கு வந்து போராட்டம், EVM (Electronic Voting Machine) பிரச்சனை, காஷ்மீர்ல தினசரி பாகிஸ்தான் தாக்குதல், சீனா நம்ம நாட்டு எல்லைக்குள் நுழைந்தாச்சு, மாநில சுயாட்சி ஒழிப்பு, "Media, RBI, SC, EC ,CAG, CBIனு எல்லா தன்னிச்சயான அமைப்பை தன்னோட கைக்குள் மோடி கொண்டு வந்தாச்சு.. இதை மாதிரி நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கு.. இப்போது மக்கள் தான் தனியாக போராட்டிட்டு இருக்காங்க எதிர் கட்சி சப்போர்ட் இல்லாமல்..

மக்களின் எதிர்ப்பை ஒருங்கிணைத்து, எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து மக்களுடன் சேர்ந்து ஆளும் வர்க்கத்துக்கு எதிராக போராடி வெற்றி பெற்று.. அந்த வெற்றியை வாக்குகளாக மாற்ற தெரியவில்லை என்றால் நீங்கள் அரசியலில் இருப்பது வேஸ்ட். அப்படி செய்தால் தான் நீங்கள் 2019ல் வெற்றி பெற முடியும்.. இல்லன்னா 2019ல் கஷ்டம் தான்.
ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோங்க... வாஜ்பாய் காலத்து பிஜேபி இல்லை இது.. அமிட்ஷா &p; மோடி சாதாரண அரசியல்வாதிகள் இல்லை.. இந்தியா இதுவரை கண்டிராத கிரிமினல் அரசியல்வாதிகள் இவர்கள். அவர்களிடம் உங்களின் மென்மையான (Soft) அரசியல் எடுபடாது. உங்களை தேர்தலில் தோற்க்கடிக்க எப்படிப்பட்ட கிரிமினல்தனம் வேணும்னாலும் செய்வார்கள். நீங்க aggressive'va இல்லனா தோத்து போயிடுவீங்க..
மோடி, அமிட்ஷா போன்ற நாட்டுக்கு தேவையில்லாத ஆணியை புடுங்கி எறிய மக்கள் ரெடி.. நீங்கள் ரெடியானு உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் வேகமாக செயல்பட வேண்டிய நேரமிது🙏.
-சுவாதி, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை: