வியாழன், 25 ஜனவரி, 2018

கமல ஹாசன் : தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை; எழுந்து நிற்பது எனது கடமை.. வசூலை தருவது "பேன்ஸ்" கடமை ?

தினகரன் :சென்னை : சில பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்ல முடியாது, செய்து தான் காட்ட முடியும் என்று நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக் கூடாது என்று கூறிய அவர்,கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதால்தான் இது போன்ற சர்ச்சை ஏற்படுகிறது என்று கூறினார்.தியானத்தில் இருப்பது விஜயேந்திரரின் கடமை என்றும் எழுந்து நிற்பது தனது கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.தமிழகத்தை மேம்படுத்துவதே தமது முதல் நோக்கம் என்று  கூறிய கமல், தமது நோக்கமும் , ரஜினியின் நோக்கமும் தமிழக மக்களை மேம்படுத்துவது தான் என்றும் மக்களுக்கு துணையாக இருப்போம், எது வந்தாலும் எதிர்ப்போம் என்றும் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: