ஞாயிறு, 7 ஜனவரி, 2018

கர்நாடக சங்கீதம் ஒரு களவாடப்பட்ட இசை .... தமிழிசை மூவரை பின்தள்ளிய பார்ப்பனர்கள்

Sankar Ganesh : இளையராஜா, A R ரகுமான் ஆகிய இருவருமே தமிழர்களின் வாழ்வியல் அங்கம்! உலகின் மூத்த மொழியும் செம்மொழியான தமிழ், இசை வளர அனுமதித்தது. சங்க காலம் தொட்டே, தமிழர்கள் இசை வாழ்வியலை கொண்டே வாழ்ந்தனர். யாழ், தவில், நாதஸ்வரம், பறை என உழைக்கும் மக்களின் உருவாக்கத்தில் இசைத் தமிழ் பரவியது.
சீர்காழி முத்தாண்டவர், சீர்காழி அருணாசலகவிராயர், மாரி முத்தா பிள்ளை ஆகிய இசை மும்மூர்த்திகள் கீர்த்தனை, சரணம், பல்லவி அமைப்பை கிபி 15-17 ஆம் நுற்றாண்டில் உருவாக்கினர். அவர்களை பார்த்து கற்ற பார்ப்பனர்கள், தமிழ் இசையை களவாடி தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் மாற்றி கர்நாடக இசை எனும் களவாடப்பட்ட இசையை கொண்டு வந்து இன்று சங்கீத மும்மூர்த்திகள் ஆகிவிட்டனர்.
தியாகராஜரை பற்றி தெரியும் தமிழகத்திற்கு முத்தாண்டவர் பற்றி தெரியாது! அங்கே நிற்கிறார்கள் பார்ப்பனர்கள்.
பார்ப்பன சேவகனாகியிருந்த இராஜ ராஜ சோழன், தேவாரப் பாடல்களை மீட்க சொல்லும்போது எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள் என அறிந்திருப்பீர்கள்.
இசை பற்றி பார்ப்பனர்கள் உருவாக்கிய தடைகளை உடைத்து வீதிக்கு கொண்டுவந்தவர் இளையராஜா என்றால் அத்தடையையெல்லாம் கொளூத்தியவர் A R ரகுமான்!
தமிழரிடமிருந்து பிரித்தெடுத்து இறுகிக் கிடந்த இசையை உருக வைத்தவர்கள் ராஜாவும், ரகுமானும்!
சில வருடங்களூக்கு முன் ரகுமான் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியது. அதில் கலந்து கொண்ட பேசிய பிரபல கர்நாடக இசை பாடகி ஒருவர், ரகுமான் அவர்கள் கர்நாடக இசை முக்கியத்துவம் வாய்ந்த பாடல்களை உருவாக்க வேண்டுமென்றும்; தங்களூக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கும் படியும் கெஞ்சினார்.
பார்ப்பனர் வசமாயிருந்த இசைத்துறையை உழைக்கும் மக்கள் வசமாகி பார்ப்பனர்களே வேலை கேட்டு கெஞ்சுமளவுக்கு கொண்டுவந்த திராவிட இசை அரக்கன் A R ரகுமான்!

இசை போல் அரக்கர் தம் வாழ்தல் வேண்டும்.
டிஸ்கி : எக்கலைக்கும் எதிரி தமிழர் கிடையாது. தமிழிசையிலிருந்து களவாடப்பட்ட இசை தான் கர்நாடக இசை என்பதை பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். பக்தி எனும் ஒரே புள்ளியில் சுழலாமல் காதல், காமம், உழைப்பு, துன்பம் என உழைக்கும் மக்களின் வாழ்வியலோடு கர்நாடக இசை சேர வேண்டும். தெலுங்கிலும் சமஸ்கிருதத்தில் மட்டும் பாடினால் ஈ தான் ஓட்ட முடியுமே தவிர உழைக்கும் மக்களாகிய எம்முடன் கலக்க முடியாது. தமிழில் பாடு!
தமிழ் சாதமல்ல சோறு போடும்

கருத்துகள் இல்லை: