வெள்ளி, 12 ஜனவரி, 2018

மோடி :நான் என்ன தவறு செய்து விட்டேன். ஏன் என்னை அவமதிக்கின்றனர்?" - ... இதோ பதில்கள் ..

பிரதமரே, இதோ உம் கேள்விக்கான பதில்:
1. பணமதிப்பு நீக்கம் மூலம் இந்திய பொருளாதாரம் அழிவுக்கு இட்டு சென்றதற்கும். அதற்கான பொறுப்பை ஏற்காததற்கும்.
2. பல தரப்பட்ட கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள் வாழும் இத்தேசத்தின் பண்மை தன்மையை சாதி, மத குழுவாதம் மூலம் அழித்ததற்காக.
3. இந்து மதத்தின் சனாதன தர்ம கொள்கைகளை அழித்து, சாவர்கரின் இந்துத்துவ கொள்கைகளை திணித்ததற்காக.
4. ஒவ்வொரு நடவடிக்கைகளும் இந்த தேசத்திற்கு துயரையும் அழிவையும் தரும்போது போலி தேசியவாதம் பேசி ஏமாற்றியதற்காக.
5. பெயரளவில் மட்டும் இந்திய அரசாங்கமாகவும். இந்துத்துவ முதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் கடை விரித்தற்காக.
6. ஊடகங்கள் மூலம் தினமும் பரப்பிய பொய் பிரசாரங்களுக்காக.
7. அரசியலமைப்புக்கு எதிராக சர்வாதிகார ஆட்சியையும், தனிமனித சுதந்திரந்துக்கு ஆபத்தான ஆதாரை கட்டாயம் ஆக்கியதற்கும்.
8. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களை பணிய வைத்து மக்களை உண்மைகள் அறிய விடாமல் செய்ததற்காக.
9. பன்முக தன்மைக்கு ஆதரவாக குரல் பேசியோரை அலட்சியம் செய்து அவர்களை உடல் மற்றும் மன அளவில் ஒடுக்க செய்ததற்காக.

10. பகுத்தறிவுக்கு எதிராக இருந்து கொண்டு, படித்தவர்களுக்கும் புத்திசாலிகளுக்கும் எதிராக பேசி வருவதற்காகவும்.
11. கருத்துரிமையை முடக்க எல்லா வகை அருவருப்பான தந்திரங்களையும் கையாண்டதற்காக.
12. 2014 ல் முதல் மனித வள மேம்பாட்டை முடக்கியதற்காக.
13. ஊழல் ஒழிப்பதாக கூறி ஏமாற்றியதற்காக.
14. எதிர்பாராத நேர்மையான கேள்விகளுக்கு பயந்து, ஆட்சி ஏற்று ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்காமல் இருப்பதற்காக.
15. அடிப்படை பிரச்சனைகளை கவனிக்காமல், விளம்பரம் ஒன்றிலே குறியாய் இருப்பதற்காக.
16. "எந்த நாட்டுடனும் கூட்டு சேராத" பாரம்பரியமான வெளியுறவு கொள்கையை சின்னாபின்னம் ஆக்கியதற்காக.
17. ஆணவம், பேராசை, கலவரங்கள் போன்றவை தூண்டும் வகையில் பிரசுரங்களில் பேசி வருவதற்காக.
18. திறமையற்ற மூடர்களை கட்டிக்கொண்டு ஆட்சி நடத்துவதற்காக.
19. வளர்ச்சி உதவாத பழமைவாத பிற்போக்கு கருத்துக்களுக்கு அதி முக்கியத்துவம் தருவதற்காக.
20. வளர்ச்சி என்பதை தவறாக புரிந்து கொண்டு, சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வருவதற்காக.
21. நவீன தாராளமய வணிக (Neoliberal Economic policies)
கொள்கைகளை ஏழை, நடுத்தர மக்கள் மீது திணித்ததற்காக
22. இந்துத்வம், நவீன தாராளமயம் மூலம் இந்தியா மீது போர் தொடுத்து மக்களின் நம்பிக்கையை இழந்ததனால்.
இப்படி எல்லாம் செய்து விட்டு, என்ன செய்து விட்டேன் என கேட்டால்?
நன்றி: Devdan Chaudhuri
தமிழில்: Bhim Prabha Gandhi

கருத்துகள் இல்லை: