இழுவையில் இருக்கும் 0.13 காரணி ஊதிய உயர்வு குறித்து இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தரை நியமிக்க தயார் என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்து ஐகோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
2.57 காரணி ஊதியம் தொடர்பாக மத்தியஸ்தர் முடிவெடுப்பார் என்றும், எந்த தேதியிலிருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை அவரே முடிவெடுப்பார் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க வழக்கறிஞர், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். மக்கள் நலன் கருதி, நீதிமன்ற உத்தரவை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு ஒரு வழி பிறந்துள்ளதாக சி.ஐ.டி.யு கருத்து தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. உறுதியாக போராடிய தொழிலாளர்களுக்கு நன்றி. ஒத்துழைத்த பொதுமக்களுக்கும் நன்றி என மார்க்சிஸ்ட் எம்.பி டி.கே ரங்கராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக