சனி, 13 ஜனவரி, 2018

டி .என் சேஷன்...உறவினர்கள் ஒதுக்கிய நிலையில் தனிமையில் வேதனை

Special Correspondent FB Wing :இந்திய தேர்தல் தலைமை ஆணையராகப் பணியாற்றி முக்கிய சீர்திருத்தங்களை தேர்தல் முறையில் கொண்டு வந்த டி.என்.சேஷன். சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தமது மனைவியுடன் வசித்து வருகிறார்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையில் பிரமாண்டமாக நடந்தது முதல் முதலில் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் தான் இதனை செய்ய தடையாக இருந்து அதிமுகவினருக்கு சிம்ம சொப்பனமாக மாறினார் சேஷன் .இவரது காலத்திலே (1996) அதிமுக வரலாறு காணாத விதமாக வெறும் 7% வாக்குகளை மட்டுமே பெற்று பாராளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தது .
பாலக்காட்டை சேர்ந்தவரான சேஷனுக்கு சொந்த ஊரில் வீடு இருந்தாலும், வயோதிக காலத்தில் கவனித்துக் கொள்ள பிள்ளைகள் இல்லாததாலும், தன் வயதையொத்தவர்களுடன் சேர்ந்து வாழ் விரும்பியே முதியோர் இல்லத்தை நாடிச் சென்றதாக கூறப்படுகிறது.

அண்மையில் குருகுலம் முதியோர் இல்லத்தில் சேஷன் தமது 85 வது பிறந்தநாளைக் தனிமையுடன் கொண்டாடினார். இவரை இவரது உறவினர்களே ஒதுக்கி விட்ட நிலையில் மிகவும் வருத்தமுடன் இருப்பதாக அவரின் குருகுலம் சக வாசிகள் தெரிவித்தனர்
கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.<

கருத்துகள் இல்லை: