புதன், 27 டிசம்பர், 2017

ஃபேஸ்புக்கில் இனி ஆதார் அவசியமா? Facebook ஐ பார்த்து பயப்படும் பாஜக !

மாலைமலர் :ஃபேஸ்புக்கில் புதிதாக கணக்கு துவங்குவோர் தங்களின் உண்மையான பெயரை பயன்படுத்துவதை உறுதி செய்ய ஆதாரில் உள்ள பெயரை பதிவு செய்யக் கோரும் அம்சத்தினை சோதனை செய்து வருகிறது. புதுடெல்லி: இந்தியாவில் ஃபேஸ்புக் கணக்கு துவங்குவோர் தங்களது உண்மையான பெயரை பயன்படுத்துவதை உறுதி செய்ய தங்களது ஆதாரில் உள்ள பெயரையே பதிவு செய்ய கோரும் அம்சத்தை சோதனை செய்து வருகிறது. புதிய அம்சத்தின் மூலம் ஃபேஸ்புக்கில் புதிதாக துவங்கப்படும் கணக்குகளை கண்காணிக்க முடியும் ,ஹேக் செய்யமுடியும் , பயனாளர்களை வேவு பார்க்க முடியும். இந்தியாவில் மட்டும் சுமார் 24.1 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் பயன்படுத்திப்பட்டு வருகிறது. உலகளவில் ஃபேஸ்புக் பயனாளிகள் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. ஃபேஸ்புக் மொபைல் தளத்தில் புதிய கணக்கு துவங்குவோருக்கு ஆதாரில் உள்ள பெயர் ('name as per Aadhaar') என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆதாரில் உங்களது பெயர் என்ன? ஆதாரில் உள்ள பெயரை பயன்படுத்தும் போது நண்பர்களால் உங்களை மிக எளிமையாக கண்டறிய முடியும். ரெடிட் மற்றும் ட்விட்டர் பயனர்களால் முதலில் கண்டறியப்பட்டது. எனினும் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை, ஹேக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் மொபைல் தளத்தில் மட்டும் சில வாடிக்கையாளர்களுக்கு இந்த அம்சம் காணப்பட்டது.

கருத்துகள் இல்லை: