சனி, 30 டிசம்பர், 2017

நம்ம மக்களுக்கு முன்னோர் தான் தெய்வம்! CIFF விருது இயக்குனர் சுரேஷ் சங்கையா

நக்கீரன் :சர்வதேச  திரைப்பட விழா கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.  ஜெர்மன் படங்கள், கொரிய திரைப்படங்கள், இந்தியன் பனோரமா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழ் படங்கள் பிரிவில் ஒரு கிடாயின் கருணை மனு, 8 தோட்டாக்கள், அறம், குரங்கு பொம்மை, கடுகு உள்ளிட்ட  12 படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன. அதில் 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் சிறந்த தமிழ் படத்திற்கான  விருதைப்  பெற்றது. உலகப் படங்கள் என்ற பெயரில் ஹாலிவுட்டை பின்தொடராமல் நம் மண்ணின் தெய்வங்களை, பழக்கவழக்கங்களை அடிப்படையாக வைத்து உண்மையான உலகப்படத்தைக் கொடுத்த படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா அவர்களிடம் பேசினோம்...


>சென்னை திரைப்பட விழா எப்படி நடந்தது? உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...

ரொம்ப புதுசாத்தான் இருந்துச்சு. இப்போ என்றில்லை, நான் படம் பண்றதுக்கு முன்னாடி இருந்தே  ஃபெஸ்டிவல்ஸ் அதிகம்  போனது இல்ல. படத்தை தயாரிப்பு நிறுவனம் தான்  அனுப்புனாங்க . என் படத்துக்கு விருது தரப்போறாங்கனு சொல்றப்ப இந்த ஃபெஸ்டிவல் ரொம்ப ஸ்பெஷலாவே இருந்துச்சு. இன்னும் இதுமாதிரி பல  இடங்களில்  விழாக்கள்  நடக்கணும்  என்பதுதான்  என் விருப்பம். பொதுவா ஃபெஸ்டிவல் படம்னாலே எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. ஆனால்  இங்கே  அப்படி இல்லை.  நல்ல படங்களை  தேர்வு செஞ்சிருந்தாங்க. அதுவும் ஓரளவு பொழுதுபோக்காக  இருப்பது போன்ற படங்களை  தேர்வு செய்திருந்தார்கள்.  அதனால் எனக்கு ரொம்ப சந்தோசமாத்தான் இருந்துச்சு.

ஏற்கனவே  சிங்கப்பூர் திரைப்பட விழாவில் உங்க படம் திரையிடப்பட்டது. அதற்கும்  சென்னை விழாவிற்கும்  வித்தியாசங்கள்  இருந்ததா ? ரசிகர்களின் ரசனை, வரவேற்பு எப்படி இருந்தது?

அங்க மொழி தெரியாதவங்க நிறைய பேர் வந்திருந்தாங்க. அவுங்களே படம் பாக்கும்போது  பயங்கர ரெஸ்பான்ஸ் கொடுத்தாங்க. என் மனதில் என்ன நினைத்து காட்சிகளை அமைத்திருந்தேனோ, அது குறையாமல், மாறாமல் மொழி தெரியாத ரசிகர்களிடமும் சென்றடைந்தது மகிழ்ச்சியாக இருந்தது.  இங்க இருக்குறவங்களுக்கு மொழி தெரியும். இவர்கள்  'வட்டார வழக்க சரியா காமிச்சுருக்கீங்க,  சரியா பயன்படுத்தியிருக்கீங்க என்று  சொன்னாங்க. அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

ஒரு கிடாயின் கருணை மனு" படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் என்னவாயிருந்துச்சு?an>ரொம்ப நல்லாவே இருந்துச்சு. நல்ல ரெஸ்பான்ஸ்தான் இருந்துச்சு. அதே நேரம் வருத்தமும் தெரிவிதார்கள். இந்தப்  படம் தியேட்டர்ல பார்க்க முடியல, வந்ததே தெரியல அப்படினு சொன்னாங்க. அது கொஞ்சம் வருத்தமாதான் இருந்துச்சு

திரைப்பட விழாவில்  மற்ற படங்களை பார்த்தீர்களா?

நான் மற்ற  படங்கள் எதையும்  பாக்கல. அடுத்த படத்துக்கு  ஸ்கிரிப்ட் வேலை   போயிட்டு இருந்ததால பாக்க முடியல.<>ஃபெஸ்டிவல்   ரசிகர்களின் மனநிலைக்கும், வெகுஜன பட  ரசிகர்களின் மனநிலைக்கும் இடைவெளி இருக்கா?இல்லை">இல்லை<;சாத்தியமா அப்படி எதுவுமே"இல்லை

 இதுவந்து கண்டிப்பா சொல்லவேண்டிய விஷயம்தான். ஃபிலிம் ஃபெஸ்டிவல் ரசிகர்கள், சாதாரண ரசிகர்கள் அப்படினு எதுவுமே கிடையாது. எல்லோருமே ஒரே மனநிலைலதான் இருக்காங்க. அவர்களுக்கு  தனியா படம் பண்ணனும், இவர்களுக்கு  தனியா படம் பண்ணனும் என்பதெல்லாம்  இல்லை. நான் அப்படி பிரிச்சு பார்க்கவும் இல்லை. படம் வெளியானபோது திரையரங்குகளில்  என்ன ஆதரவு இருந்துச்சோ, அதே ஆதரவுதான் இங்கேயும் இருந்தது. ஒரு பொதுவான நல்ல படத்தை  எல்லோருமே ஆதரிப்பாங்க. அந்தந்த மண்ணையும் கலாச்சாரத்தையும் அடிப்படையா வச்சு எந்தெந்த படங்கள் வருதோ அதுதான்  உலக சினிமா.>படத்தின் தொடக்கத்தில் வரிசையாக பல  குலதெய்வங்கள் காட்டியிருந்தீங்க அதைப் பற்றியும்,  கொலை சிந்து பாடல் பற்றியும்...

'கொலை சிந்து'  பாட்டுல வர எல்லா வரிகளும் முதல்ல காட்சிகளா  இருந்தது. அது ரொம்ப நீளமா இருக்குனு தோனுச்சு.  அதனால், டைட்டில்  சாங்கா  மாத்தலாம் என்று  நினைத்துக்கொண்டிருந்த போதுதான்   பாடலாசிரியர் வேல்முருகன் படத்திற்குள்  வந்தார். அவரிடம்  தலைப்பு, கதைலாம் சொன்னப்ப அவர்தான் நம்ம நாட்டுப்புற  பாடல்களில்  கொலை சிந்து என்ற  பாடல் வகை இருக்கு. அதை வைத்து  பண்ணலாம் என்று  சொன்னாரு. அதுக்கப்பறம் அத பத்தி தேடினோம். கொஞ்சம் குறைவான தகவல்கள்தான் இருந்தது. நாங்க அத கிட்டத்தட்ட அந்த பாடல்வகை மாதிரியே பண்ணோம்.

குலதெய்வங்கள் சமீப காலமா  அழித்துக்கொண்டு வருகின்றன  முருகன், சிவன் போன்ற பெரிய தெய்வங்களுக்கெல்லாம் பெரிய கோவில்கள் இருக்கும். ஆனா இந்த மாதிரி சிறு தெய்வங்களுக்கெல்லாம் பெரிய கோவில்கள் கிடையாது. பொதுவா நமது மக்களுக்கு  அந்தந்த குலத்தோட முன்னோர்கள் யாராவதுதான் தெய்வமா இருப்பாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் அப்படிதான் நினைக்கிறேன். அதனால்தான் இதை  காட்டவேண்டுமென்று நினைத்தேன்.

உங்களோட அடுத்த படத்துல சமுத்திரக்கனி இருக்கார்னு கேள்விப்பட்டோம்?

இப்போதான் பேசிக்கொண்டு  இருக்கோம். அவர் இப்போ சசிகுமார் சார வச்சு ஒரு படம் பண்றார். கொஞ்சம் தாமதம் ஆகும் போல இருக்கு. எதுவும் உறுதியாகவில்லை.

நல்ல காமெடி, பாட்டு அப்படினு எல்லாருக்கும் பிடித்த மாதிரிதான்   'ஒரு கிடாயின் கருணை மனு' இருந்தது. ஆனாலும் பெரிய ரீச் ஆகவில்லை. இதற்கு என்ன காரணம்?

சரியான விளம்பரம் இல்லாதது தான் காரணம்.  படம் பார்த்த எல்லாருக்கும் பிடிக்குதுல? ஆனாலும்  சரியாகக்  கொண்டுபோய் சேர்க்கப்படவில்லை. படம் பிடிக்காட்டிக்  கூட பரவாயில்ல. இந்தப்  படத்த எங்கே போய் காமிச்சாலும் பாராட்டுறாங்க. அப்படியிருக்குறப்ப விளம்பரத்தை சரியா பண்ணிருக்கலாம். அது எனக்கு வருத்தம் தான்.<>அதீத விளம்பரங்களினால் தரமில்லாத படங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகப் போவதும், அவற்றின் மத்தியில்  விளம்பரமே இல்லாததால் நல்ல படங்கள் காணாமல் போவதும் வேதனை தான். நல்ல படங்களைக் கொடுக்கும் இதுபோன்ற இயக்குனர்களின் வேதனை வெற்றியாக மாறட்டும்.

கமல் குமார்

கருத்துகள் இல்லை: