வியாழன், 28 டிசம்பர், 2017

முத்தலாக் மசோதா பெண்களை பாதுகாக்கிறோம் என்று சொல்வதை ஒரு ....

Parthiban Pakirisamy : முத்தலாக் மசோதா உள்நோக்கம் கொண்டதா ....?!!
RSS கூடாரம் ஒருநாளும் சாமானியனின் அல்லது சிறுபான்மையினரின் நலன்கருதியோ அல்லது குறைந்தபட்சமாக ஒரு துரும்பைக்கூட கனவில் மறந்தும் கிள்ளிப்போடாது என்பது 1925 ல் இருந்து நாம் பார்த்துவருவதே; இந்நிலையில் முத்தலாக் மசோதா என்கிறபெயரில் பெண்களை பாதுகாக்கிறோம் என்று சொல்வதை ஒரு புத்திசுவாதீனமில்லாதவன் கூட ஏற்கமாட்டான் எதிர்த்து கேள்விகள் கேட்பான்!
ஆடுகளை என்றுமே ஓநாய்கள் பாதுகாப்பதில்லை! ஒருவேளை அப்படி பாதுகாக்கிறோம் என்று சொல்லுமேயானால் மிகப்பெரிய கொலைகார சதித்திட்டம் அங்கே அரங்கேறப்போகிறது என்றுதான் பொருளேத்தவிர; பொது சிவில் சட்டத்திற்கான அடித்தமிடுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கல்ல!
ஒரு மதத்தின் மீது கொண்டுவரும் இத்தகைய செயல்பாடுகளை சம்மந்தப்பட்ட மதத்தலைவர்களை அணுகாமல் குறைந்தபட்சம் அவர்களின் ஒட்டுமொத்த எண்ண உணர்வுகளையே கேட்டறியாமல்; சுமார் 20 கோடி மக்கள் வாழும் ஒரு இந்தியத்துணைக்கண்டத்தில் வெறும் நூற்றுக்கும் குறைவான வழக்குகள் இருப்பதை சுட்டிக்காட்டி, இத்தகைய படுபாதக செயலை செய்கிறார்கள் என்றால்; உண்மையில் இவர்கள் பெண்களின் நலனில் அக்கறைகொண்டவர்கள் என்று ஒரு பைத்தியக்காரன் கூட நம்பமாட்டான்.

கருத்துகள் இல்லை: