சனி, 23 செப்டம்பர், 2017

முழு 2G விவகாரம் - திராவிட இயக்கத்தை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும் RSS ஹிந்துத்துவா ,ஜாதிகும்பல் திட்டமிட்டு

Prakash JP :· முழு 2G விவகாரமும், திமுகவின் மேல் தீராத வன்மமும், அரசியலில் இருந்தே திராவிட இயக்கத்தை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும் என்று கருதும் RSS ஹிந்துத்துவா மற்றும் அதின் நிழல் உறுபினர்களால், "அந்த" குறிபிட்ட ஜாதி கும்பல் மற்றும் அதின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களால் மிக மிக ஒருங்கிணைத்து திட்டமிட்டு, சதி வலை பின்னப்பட்ட ஒரு விஷயமாகும்.....
திரும்ப திரும்ப சிலர் 2Gயில் ஊழல் ஊழல் என்று கிளிப்பிள்ளையை போல சொல்லி கொண்டு இருக்கிறார்கள்....(நீண்ட பதிவு....2G விஷயத்தில் முழுமையான விளக்கம் கிடைக்க தயவுசெய்து முழுதும் படிக்கவும்)
ஊழலா அல்லது வருவாய் இழப்பா??

CAG அறிக்கையில் கூட, எந்த ஓர் இடத்திலும் ' ஊழல் ' ( Scam ) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. வருவாய் இழப்பு ( Loss of revenue ) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் ஊக இழப்பு.....presumptive loss என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.....

அரசிற்கான வருவாயை அரசின் கொள்கையின் அடிப்படையில் குறைத்துகொள்வது, வருவாய் இழப்பு அல்ல....

Reserve Bank of India Governor D. Subbarao, who served as Finance Secretary to the Centre during 2007-08 said, “It is correct that while determining policy, the government has to make a balance between welfare maximisation and revenue maximisation. In this case, if there was a sacrifice of some revenue, it cannot be said that the government suffered a loss.”


2Gயில் CAG சொன்ன 1.76 லட்சம் கோடி என்பது இழப்பு... ஊழலல்ல.. அதும் உருவகப்படுத்தப்பட்ட ஒன்று... இல்லாத ஒன்று... ராசாவிடம் இருந்து எந்த சொத்தும், பணமும் கண்டுபிடிக்கவில்லை, பறிமுதல்செய்யவில்லை...

ஆ.ராசாவால், 2Gயில் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று CAG அடித்துவிட்டபோது, இழப்பை கணக்கிட ஆடிட்டர் வினோத் ராய் எடுத்துக்கொண்ட தொகையானது 1 MHzக்கு 3,350 கோடி... அதாவது 52.7 Mhz அலைகற்றைகளை, இந்த தொகைக்கு ஏலம் விட்டிருந்தால், 1.76 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருக்கும், ஆனால் கிடைத்ததோ 12,386 கோடிகள் என்பதுதான் CAGயின் அறிக்கை..

இப்போது 2G நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 380.75 MHz அலைகற்றைக்கு... வினோத் ராயின் கணக்குப்படி 380.75 X 3,350 = 12.75 லட்சம் கோடி கிடைத்திருக்கவேண்டும்... ஆனால், ஏலத்தில் கிடைத்திருப்பதோ வெறும் 1.1 லட்சம் கோடிகள் தான்... அதாவது வெறும் 9% தொகை மட்டும்மே கிடைத்துள்ளது... ஏலத்தின் படி, ஒரு MHz அலைகற்றைக்கு சுமார் 289 கோடிகள் தான் கிடைத்திருகிறது...

CAG கணக்கிட்ட 1 MHzக்கு 3,350 கோடி எங்கே???? ஏலத்தில் கிடைக்கும் 1 MHzக்கு 289 கோடிகள் எங்கே....

ராசா அவர்கள் பின்பற்றிய TRAI வழிகாட்டுதலில், 2001 ஆண்டைய ஸ்பெக்ட்ரம் விலை 1 MHzக்கு 267.51 கோடிகள்...

எனவே, 1.76 லட்சம் கோடி இழப்பு என்பதெல்லாம் மிகபெரிய மோசடி..... ஏமாற்று வேலை....

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்னும் முறையை யார் கொண்டுவந்தது???

மேலும் , நாட்டின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் TRAI, 2G அலைகற்றையை ஏலத்தில்தான் விடவேண்டும் என்று என்று சொல்லியிருகின்றதா???

The Telecom Regulatory Authority of India (TRAI) has said in court that it had never recommended an auction for the 2G spectrum..

தொலைத் தொடர்புக் கொள்கை பற்றிய முடிவுகளை எடுக்க, ' TRAI ' ( Telecom Regulatory Authority of India ) என்று ஒரு குழு உள்ளது. அந்தக் குழு, 1994 இல், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை (  2G Spectrum) ஏலத்திற்கு விட வேண்டுமென முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்தக் கொள்கைக்கு ' 1994 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு தேசியக் கொள்கை ' (  NTP 94 - National Telecom Policy - 1994 ) என்று பெயர். அதன் அடிப்படையில், சில பெரிய நிறுவனங்கள் அதனை ஏலத்துக்கு எடுத்தன. ஆனால், அவை தங்களுக்கு வணிக அடிப்படையில் கட்டுபடியாகவில்லை ( Commercially not viable ) என்று கூறி 1998 இல் அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டன. அதனால், அந்தக் குழு ( TRAI ), 99ஆம் ஆண்டு மீண்டும் கூடி, இனி ஏலத்திற்கு விட வேண்டாம். முதலில் வருகின்றவர்களுக்கு முதலில் ( First come first serve basis ) என்னும் அடிப்படையில் கொடுக்கலாம் என முடிவெடுத்தது. அதனை நாடாளுமன்ற மும்,அன்றைய அமைச்சரவையும் ஏற்றன. புதிய கொள்கைக்கு, ' New NTP 99' என்று பெயர்.

ஏன் ஏலமுறை இல்லை???

TRAI குழு, ஏன் ஏலத்திற்கு விட வேண்டாம் என்று முடிவெடுத்தது? அந்தக் குழுவே கூறும் காரணம் இதுதான், ஓர் அரசு எல்லாவற்றிலும் இலாப, நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது. மக்கள் நலத் திட்டங்களால் ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும் என்பதுதான். ரேஷன் அரிசி, உரம், எரிபொருள் முதலியனவற்றிற்கு அரசு மானியம் வழங்கப் படுகிறது. அரசிற்கு நட்டம்தான். வேண்டாம் என்றோ, ஊழல் என்றோ அதனைக் கூற முடியுமா?

எனவே எந்த ஒரு கொள்கை முடிவையும், அமைச்சராக இருந்த ஆ.ராசா தனித்து எடுக்கவில்லை. அப்படி முடிவெடுக்க எந்த அமைச்சருக்கும் அதிகாரமில்லை. 1999 முதல், அத்துறைக்கு அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் அனைவரும், அக்கொள்கைப்படி, முதலில் வருபவருக்கு முதலில் என்ற அடிப்படையில்தான் உரிமம் கொடுத்தனர். ஆ.ராசாவும் அதனைத்தான் செய்தார்.

டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல..

நடைமுறையை ராசா மாற்றினாரா???

குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல கதையாக இன்னும் சிலர் தங்களின் 2G கோவணம் லட்சம் கோடி துண்டுகளாய் கிழிந்தபின்னும், ராசா தவறே செய்யவில்லையா என்று கேட்கிறார்கள்....

2007 ஆம் ஆண்டின் நிலவரப்படி, தொலைதொடர்பு வழிகாட்டுதல் ஆணையம் ட்ராய்யோ (TRAI), இல்லை, தேசிய தொலை தொடர்ப்பு கொள்கையோ, 2G அலைகட்ற்றையை ஏலம் விடவேண்டும் என்று சொல்லவில்லை....அப்படி அவர்கள் சொல்லியிருந்து, ராசா அவர்கள் அதை மீறி முதலில் வருபவர்க்கு முன் உரிமை என்ற வழிமுறையை கையாண்டு இருந்தால் அது தவறு..ஆனால் அப்படி ஒன்றும் இல்லை..

டெலிகாம் நிருவனங்களிடையே லெவல் பிளேயிங் இருக்கவேண்டும், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைதொடர்பு சேவை கிடைக்கவேண்டும் என்பதால் அதே விலையில் லைசென்சுகள் அளிக்கப்பட்டன...

தொலைதொடர்பு துறையில் முன்னனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு ஸ்பெக்ட்ரம் அளிக்கப்பட்டதா???

தொலைத்தொடர்பில் முன் அனுபவம் இல்லாத நிறுவனகளுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கப்பட்டது - இதில் என்ன தவறு ??? அரசின் டெண்டர் விதிமுறைகளை பின்பற்றும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் உரிமையை அளிக்கலாம்...முன் அனுபவம் கொண்ட நிறுவனகளுக்கு மட்டும் தான் ஸ்பெக்ட்ரம் என்று விதிமுறை உள்ளதா ?? அல்லது ஏற்க்கனவே அவ்வாறு விதிமுறை இருந்து, அதை ராசா மற்றினாரா ????

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன் அனுபவம் கொண்டவர்கள் மட்டும் தான் அந்த துறையில் இருக்கமுடியும் என்றால், வெறும் BSNL மட்டும் தான் இருக்கவேண்டும்...பாரதி மிட்டல், ஹட்ச் எஸ்ஸார், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் இந்திய தொலைதொடர்ப்பு துறையில் இறங்குவதற்கு முன், இந்த துறையில் முன் அனுபவம் இருந்ததா ??? 

டெண்டர் கட்-ஆப் தேதியை மாற்றினாரா???

கட்-ஆப் தேதியை மாற்றினார் - உதாரணத்திற்கு, 100 லட்டு இருக்கிறது, 15ஆம் தேதிக்குள் முதலில் வருபவர்களுக்கு தலா ஒரு டோக்கன் தரப்படும் , அந்த டோக்கனை தந்து ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பத்தாம் தேதியே நூற்றுக்கும் அதிகமானோர் வந்து வரிசையில் நின்று, டோக்கனை பெற்றுகொள்கிரார்கள்....அப்போது என்ன செய்வார்கள்...கவுண்டரை 15ஆம் தேதி வரை திறந்திருப்பார்களா இல்லை 10ஆம் தேதியே, டோக்கன் முடிந்து விட்டது என்று சொல்லி முடிவிடுவார்களா??? அதுதான் இதிலும் நடந்தது...நூறாவது டோக்கனுக்கு மேல் உள்ளவர்களுக்கும், மீண்டும் லட்டு வந்தப்பின் கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.....(More Additional Spectrom)

சரி, டோக்கன் உள்ள 100 பேருக்கும் லட்டு உறுதியானது என்ற பிறகு, 10ஆம் டோக்கன் வைதிருந்தவருக்கு முதலிலும், 3ஆம் டோக்கன் வைத்திருப்பவர்க்கு அடுத்தும் கொடுத்தால் என்ன...அதே போல தான் அந்த கட்-ஆப் தேதிக்குள் விண்ணப்பித்த அனைவருக்கும் அலைகட்ற்றை வழங்கப்பட்டது..இதில் என்ன விதி மீறல் உள்ளது...

ராசாவிடம் ஊழல் பணம் கண்டுபிடிக்கப்பட்டதா??

சரி, அந்த நிறுவனகளிடம் ராசா பணம் பெற்றார் என்றால், இதோ மூன்று வருடங்கள் ஆகிறது, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும் இதுவரை என்ன கண்டுபிடித்து உள்ளார்கள்???? எதை நிருபித்து உள்ளார்கள் ??

வடநாட்டு, ஆரிய ஊடகங்கள் செய்த இடைவிடாத பொய் பிரச்சாரம், சுசாமி, பூஷன் போன்ற நிழல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் சதி, அதற்க்கு சிஏஜி போன்ற அரசியல் சாசன அமைப்புகள் ஒத்துபோதல், எதிர் கட்சிகளின் தொடர் போராட்டம், நாடாளுமன்றத்தை முடக்குவது என்ற செயல்பாடுகள், சுப்ரீம் கோர்ட் புரிந்துகொண்டவிதம் இவை எல்லாம் சேர்த்துதான் இந்த வழக்கை தீர்மானித்தன....

2G - மேலும் சில விளக்கங்கள் - குறைந்தவிலைக்கு ஸ்பெக்டரத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதித்தார்களா???

விளக்கம் :  குறைந்த விலைக்கு 2G லைசென்ஸ் வாங்கிய நிறுவனங்கள், அவற்ற்றை மிகபெரிய விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்தன. அந்த கொள்ளை லாப தொகைக்கு 2G லைசென்சை ராஜா நேரடியாக விற்றிருகவேண்டும் என்று, ஷேர் விற்பனை மற்றும் FDI போன்றவற்றின் அடிப்படை தெரியாமல் பொங்ககூடாது...எதோ சந்தையில் ஒரு பொருளை 10 ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய்க்கு விற்று 90 ரூபாய் லாபம் என்ற ஒரு மொக்கையான விஷயம் அல்ல இது... 2G லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் எதுவும் equaty ஷேர் (ப்ரோமோட்டர் ஷேர்) விற்கவில்லை. முதலீட்டு மூலதனத்தை உயர்த்திக்கொள்ள, சட்டபடியான வெளிநாட்டு நேரடி முதலீடிற்கான வழிமுறையில் ஷேர் விற்பனை செய்து தங்களது முதலீட்டு மூலதனத்தை உயர்த்தி கொண்டுள்ளன. இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஒன்று.

டெலிகாம் FDI அனுமதிக்கப்பட்ட ஒன்று, முதலீடிற்க்காக சட்டபடியாதானே ஷேர் விற்று இருக்கிறார்கள்..

"No sale of promoter's equity has been taken place. This was only (infusion) of an additional capital through FDI. It does not amount to divesting of promoter's equity,"

"companies can raise additional capital which come through FDI by divesting their equity." All such transactions were legal in nature as only transfer of above 49% shares needs regulatory approvals the present law permits an FDI upto 76% in telecom companies.

//the Central Board of Direct Taxes has said Swan and Unitech never sold their licenses to their foreign partners and that the sale of equity was above board....//

//They didn't sell their equities. They expanded the equity of the company and brought in new people. That's not the same thing.//

//"The question was whether it was divestment (sale) of promoter’s equity or dilution of equity by issue of fresh shares... This was examined by the Ministry of Finance.// //“Both were cases of dilution of equity by issue of fresh shares. The Prime Minister wanted to know if it was a case of dilution of equity or divestment.// //“I do not think there was any sale of spectrum. The spectrum was allocated to the company which got licence and the spectrum remained with the company. The company issued fresh shares,” he said.//

http://www.ndtv.com/article/india/2g-spectrum-scam-case-falling-apart-134876

http://twocircles.net/2011jan16/ahluwalia_defends_swan_unitech_stake_sale_after_spectrum_allocation.html

http://www.thehindubusinessline.com/industry-and-economy/article2292572.ece

 http://www.dnaindia.com/india/report_2g-scam-govt-defends-equity-sale-to-foreign-entities_1475166

வங்கிகள் தவறான வகையில் கடன் அளித்தனவா???

விளக்கம் : கட்டுமான நிறுவனங்கள் வங்கியில் தவறான முறையில் கடன் வாங்கி 2G லைசென்ஸ் பெற்றதாய் குற்றம்சாட்டினார்கள்...வங்கிகளும் இதில் சம்பந்தம் இருப்பதாய்  பொங்கினார்கள்.. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் மேற்கூறிய குற்றசாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை, கடன் கொடுக்கப்பட்டது விதிகளுக்கு உட்பட்டதுதான் என்று சிபிஐ சொல்லியிருபதாக செய்தி.

CBI closes probe into banks' role in 2G spectrum scam Sources in the investigating agencies said they had "not found any irregularity in banks giving loans to those companies which got 2G spectrum licences during A Raja's tenure in 2007-2008".

 http://timesofindia.indiatimes.com/india/CBI-closes-probe-into-banks-role-in-2G-spectrum-scam/articleshow/10058553.cms

கம்பனிகள் கிராஸ் ஹோல்டிங் வைத்து திருட்டுதனமாக ஸ்பெக்ட்ரம் பெற்றார்களா????

விளக்கம் : கிராஸ் ஹோல்டிங் வைத்து நிறுவனங்கள் தவறாக 2G லைசென்ஸ் பெற்றதாய் எழுந்த குற்றசாட்டுக்கும் ஆதாரம் இல்லை.. லூப் டெலிகாம்ல் எஸ்ஸார் கிராஸ் ஹோல்டிங் (மறைமுக பங்கு) வைத்து 2G லைசென்ஸ் பெற்றதாய் வந்த குற்றசாட்டும் தவறு..

Essar didn't violate rules: Law ministry CBI's case was that when Essar was a major telecom player, Loop Telecom -- controlled by its associate Khaitan group -- had been allotted spectrum in breach of eligibility conditions.

The MCA took a second look at the Essar-Loop corporate link and reiterated its earlier stand that "the documents of the companies examined do not substantiate 'associate' relationship between Essar group and Khaitan group".

The additional input from law ministry has now left CBI's prosecution department, which weighs evidence to decide if a case is fit for filing of chargesheet, in a dilemma.

http://timesofindia.indiatimes.com/india/Essar-didnt-violate-rules-Law-ministry/articleshow/10058745.cms

இப்போதைய ஸ்பெக்ட்ரம் ஏலம் காண்பிக்கும் உண்மைகள்...

ஆ.ராசாவால், 2Gயில் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று CAG அடித்துவிட்டபோது, அந்த இழப்பை கணக்கிட ஆடிட்டர் வினோத் ராய் எடுத்துக்கொண்ட தொகையானது 1 MHzக்கு 3,350 கோடி... அதாவது 52.7 Mhz அலைகற்றைகளை, இந்த தொகைக்கு ஏலம் விட்டிருந்தால், 1.76 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருக்கும், ஆனால் கிடைத்ததோ 12,386 கோடிகள் என்பதுதான் CAGயின் அறிக்கை..

ஆனால், நடந்த 2G ஏலத்தின் படி, ஒரு MHz அலைகற்றைக்கு சுமார் 289 கோடிகள் தான் கிடைத்திருகிறது... CAG கணக்கிட்ட 1 MHzக்கு 3,350 கோடி எங்கே???? ஏலத்தில் கிடைக்கும் 1 MHzக்கு 289 கோடிகள் எங்கே....

இந்த வித்தியாசத்துக்கு முதலில் விடை சொல்லுங்கள்....

இப்போது 2G ஏலம் நடைபெறுவது மொத்தம் 380.75 MHz அலைகற்றைக்கு... வினோத் ராயின் கணக்குப்படி 380.75 X 3,350 = 12.75 லட்சம் கோடி கிடைத்திருக்கவேண்டும்... ஆனால், ஏலத்தில் கிடைத்திருப்பதோ வெறும் 1.1 லட்சம் கோடிகள் தான்... அதாவது வெறும் 9% தொகை மட்டும்மே கிடைத்துள்ளது... ஏலத்தின் படி, ஒரு MHz அலைகற்றைக்கு சுமார் 289 கோடிகள் தான் கிடைத்திருகிறது...

CAG கணக்கிட்ட 1 MHzக்கு 3,350 கோடி எங்கே???? ஏலத்தில் கிடைக்கும் 1 MHzக்கு 289 கோடிகள் எங்கே.... ராசா அவர்கள் பின்பற்றிய TRAI வழிகாட்டுதலில், 2001 ஆண்டைய ஸ்பெக்ட்ரம் விலை 1 MHzக்கு 267.51 கோடிகள்...

எனவே, 1.76 லட்சம் கோடி இழப்பு என்பதெல்லாம் மிகபெரிய மோசடி..... ஏமாற்று வேலை....

மிக கடுமையாய் உயர்ந்த மொபைல் செல்போன் கட்டணங்கள்.... 

மொபைல் கட்டணத்தை குறைத்த ஆ.ராசா மீது அவதூறான குற்றசாட்டுகளை சுமத்தி, அவரை பழிவாங்கிய மொபைல் நிறுவனங்களின் கார்டல், இப்போது அதிரடியாய் கட்டணங்களை உயர்த்தி வருகிறார்கள்....

ஏர்டெல், வோடாபோன், ரிலையன்ஸ், ஐடியா என எல்லா முன்னணி மொபைல் நிறுவனங்களும் தங்களது கால் & சேவை கட்டணங்களை உயர்த்திவிட்டன...
அதே போல முன்பு 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இணைய பேக்கஜை இப்போது 21 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அதற்கான கட்டணமும் 124 ரூபாயிலிருந்து 195 ரூபாயாக உயர்த்தப்பட்டுவிட்டது..சுமார் 71 ரூபாய் அதிகம், ஆண்டுக்கு 12 பேக்கேஜ்கள் தேவைப்பட்ட இடத்தில், இப்போது 13 பேக்கேஜ்கள் தேவை..,,நிமிடங்களையும் குறைத்துவிட்டார்கள்....

முன்னணி நிறுவனங்களின் தற்போதைய ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் முடிவுக்கு வருவதால், CAG, ஊடகங்கள், "நடுநிலையாளர்களின்" கோரிக்கைபடி கொண்டுவரப்பட்ட புதிய நடைமுறைப்படி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடவேண்டும்... இந்த ஏலத்தால், அந்த நிறுவனங்கள் மிகபெரிய தொகையை ஸ்பெக்ட்ரத்துக்கு செலுத்தவேண்டும்...

அந்த தொகையை, வாடிக்கையாளர்களின் செல்போன் கட்டணங்களை கடுமையாய் உயர்த்துவதன் மூலம் வசூலிக்க அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன....

ஆ.ராசா இருந்த வரை மொபைல் கட்டணம் குறைந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டாய் கட்டணம் உயர்ந்து வருகிறது..... அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாய் மொபைல் பில் அதிகரிக்கபோகிறது..

மக்களுக்கு திண்டாட்டம், பெருமுதலாளிகளுக்கு கொண்டாட்டம்...

2G வழக்கு --- ராசாவின் மடியில் கனமில்லை... வழியில் பயமில்லை...

//எனது நீதிபதி பணி அனுபவத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் அமைச்சர் சாட்சியம் அளிக்க முன்வந்ததில்லை. ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே சாட்சியம் அளிக்க முன்வரும்போது அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த சிபிஐ தயக்கம் காட்டுவது ஏன்? கேள்விகள் எழுப்பும் நடவடிக்கையை தாமதப்படுத்துவது ஏன்? --- 2G வழக்கின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி //

பார்ந்தவரையில் பொதுவாக எந்த வழக்கிலும், பெரும்பாலும் குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர்தான், வாழ்க்கை இழுத்தடிக்க முயல்வார்கள்... ஒத்துழைப்பு தர மறுப்பார்கள்.... அதினால் குற்றம்சாட்டப்பட்ட தரப்பினருக்கு நீதிபதி அடிகடி கண்டனம் தெரிவிப்பார், கண்டிப்பார்.. பல ஆண்டுகாலமாய் இழுத்தடிக்கப்பட்டு வரும் ஜெயா சொத்துகுவிப்பு வழக்கு ஒரு உதாரணம்...

சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பில் சிபிஐ கோர்டில் நடைபெற்றுவரும் 2G வழக்கை, யாரும், பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கை போல, வாய்தா மேல் வாய்தா வாங்கி வருடக்கணக்கில் இழுத்தடிக்கவில்லை, இந்த நீதிபதிதான் விசாரிக்கவேண்டும், இன்னார்தான் சிபிஐயின் வக்கீலாகவும் இருக்கவேண்டும் என்று யாரும் கேட்கவும் இல்லை...இந்த வழக்கிற்கு குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் எல்லா ஒத்துழைப்பையும் அளித்துக்கொண்டுதான் இருகிறார்கள்..

ஆனால், 2G வழக்கை பொறுத்தவரை, இவைகள் எல்லாம் தலைகீழாக நடைபெற்று வருகின்றன... குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா தரப்பினர், எந்த விசாரணைக்கும், கேள்விகளுக்கும் எப்போதும் தயார், சாட்சியாகவும் விசாரணைக்கு தயார் என்று முன்னால் நிற்கின்றனர்... ஆனால், அரசு சிபிஐ தரப்போ, சரிவர ஒத்துழைக்காமல் வாய்தா வாங்கிக்கொண்டும், திரும்ப திரும்ப ஒரே கேள்விகளை வெவ்வேறுவிதங்களில் கேட்டுகொண்டு நீதிமன்ற நேரத்தை வீணடித்துகொண்டும் இருக்கிறார்கள்...

இதினால், 2G வழக்கின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிபிஐ தரப்புக்கு அடிகடி கண்டனம் தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்... பொய்யான தகவல்களில் அடிப்படையில் புனையப்பட்ட இந்த 2G வழக்கில், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், வேறு கேள்விகளும் இல்லாமல், வழக்கை மேற்கொண்டு நகர்த்த சிபிஐ தரப்பு திணறுவதை போல தோன்றுகிறது...

//A special CBI court which is exclusively trying the 2G scam case on Monday reprimanded the public prosecutor in the case for repeating questions by putting it in a "circuitous manner". Irked over the delay in completing the cross-examination, special CBI judge OP Saini directed senior public prosecutor KK Goel to conclude it "expeditiously" so that trial of the case is not delayed.

"The cross-examination started with cut-off date and still we are on cut-off date after so many days. The prayer (of the prosecutor), on the face of it, deserves to be declined, but with all reluctance at my command, the prayer is granted with the direction to complete the cross-examination expeditiously so that the trial is not delayed unnecessarily. It is impressed upon the senior public prosecutor not to repeat the questions by putting the same in different language or in a circuitous manner," the court said.//

http://timesofindia.indiatimes.com/india/Court-pulls-up-2G-case-prosecutor-for-repeating-queries/articleshow/38835366.cms

இப்படிதான் ராடியா டேப்..ராடியா டேப்..அப்படின்னு பரபரப்பா கூவின்னு இருந்தாங்க..கடைசில, அந்த டேப்களில் எந்த கிரிமினால் செயலும் இல்லை என்று விசாரித்த சிபிஐ சொல்லிவிட்டது......அதே போல அந்த டேப்பை ஆதாரமாக எடுத்துகொள்ள கோர்ட்டும் மறுத்துவிட்டது...

//CBI has informed Supreme Court that it has “so far” not found any criminality in the 14 preliminary enquiries registered on the basis of intercepted conversations of corporate lobbyist Niira Radia.//

//ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலை ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிய சிபிஐயின் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.//

http://www.thehindu.com/news/national/radia-tapes-cbi-finds-no-criminality-so-far/article5497794.ece

http://tamil.oneindia.in/news/2013/07/12/india-2g-case-court-dismisses-cbi-plea-radia-cd-on-record-179036.html

2G விவகாரத்தில் வரிசையாக வெளியே வரும் திரை மறைவு சதி செயல்கள்.....Did Joshi influence CAG report and inflate 2G losses?

முதலில் இருந்தே கூறியபடி, முழு 2G விவகாரமும், திமுகவின் மேல் தீராத வன்மமும், அரசியலில் இருந்தே திராவிட இயக்கத்தை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும் என்று கருதும் RSS மற்றும் அதின் நிழல் உறுபினர்களால், "அந்த" குறிபிட்ட ஜாதி கும்பல், அதின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களால் மிக மிக ஒருங்கிணைத்து திட்டமிடப்பட்ட, சதி வலை பின்னப்பட்ட ஒரு விஷயமாகும்.....

1. 2ஜி நஷ்டம் ரூ. 1.76 கோடி என்று திரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடும் முன் வினோத் ராய், பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசியதற்கான ஆதாரங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.

2. மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பே வினோத் ராய், முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தது ஏன்?, இருவரும் என்ன பேசினார்கள்?, நஷ்டத்தை அதிகரித்துக் காட்ட அந்த சந்திப்பில் முடிவெடுத்தார்களா?

3. RSS சார்புடைய முரளி மனோகர் ஜோஷி, ஜெயலிதாவுடன் மிக நெருக்கமான தொடர்புடையவர்...மேலும் இந்த 2G விஷயத்தில் அதிக அக்கரை காட்டும் சு. சாமி, பொதுநல வழக்குகள் தொடரும் பூஷன் கும்பல் போன்றோர்கள் எல்லாம் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள்...யார் கண்டது , 2G வழக்கை விசாரிக்கும் சிபிஐ மற்றும் நீதிபதிகளில் கூட அந்த அமைப்பின் நிழல் உறுப்பினர்கள் இருக்கலாம்

4. ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தை முழு அளவில் ஆய்வு செய்து, கணக்கு வழக்குகளை சரிபார்த்து, ரிப்போர்ட் தயாரித்தவர் , மதிய தணிகை துறையின் மூத்த உயர் அதிகாரி ஆர்.பி.சிங்.

5. ஆனால், சிங் தயாரித்த அந்த அறிக்கையை வெள்ளியிடவர், மதிய தணிகை துறையின் தலைவரான வினோத் ராய்.

6. சிங் ஆராய்ந்து தயாரித்த ஆடிட் அறிக்கையில் இழப்பு தொகையாக இருந்தது, ரூ. 2,645 கோடி தான், அதுவும் மத்திய அரசின் கொள்கை முடிவின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்கப்பட்டிருப்பதால், நிர்ணய நுழைவு கட்டண விலைப்படி ரூ.2,645 கோடிதான் இழப்பு ஏற்பட்டது.

7. இந்த முழு உண்மையையும் மறைத்துவிட்டு, அரசாங்கத்திற்கும், குறிப்பாக திமுக மற்றும் ராஜாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டு அசிங்கபடவேண்டும் என்று திட்டமிட்டு அந்த 2,645 கோடியை, மிக மிக உயர்த்தி ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கட்டு கதை திரிக்கப்பட்டு, அவர்களுடைய ஊடகங்கள் மூலம் முன்கூட்டியே கசியவிடபட்டு தொடர் பொய் பிரச்சாரம் இடைவிடாமல் நடத்தபட்டது..

8. அந்த திரிக்கப்பட்ட அறிக்கையில் கையொப்பம் இட ராயால், சிங் நிர்பந்திகபட்டுள்ளார்...ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தை ஆராய்ந்து ரிப்போர்ட் தயாரித்த ஆர்.பி.சிங்கிடம், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ள விவரமும் வெளியே வந்துவிட்டது. அந்த ரிப்போர்ட்டைத் திருத்தி, மாற்றி எழுதிவிட்டு, அவரை படித்துப் பார்க்க கூட விடாமல், கடைசி பக்கத்தில் மட்டும் அவரச அவசரமாக கையெழுத்து வாங்கியது ஏன்?.


http://www.firstpost.com/india/did-joshi-influence-cag-report-and-inflate-2g-losses-131692.html

http://exitopinionpollsindia.blogspot.com/2011/11/parliament-should-impeached-cag-vinod.html

http://tamil.oneindia.in/news/2011/11/15/2g-scam-top-auditor-vinod-rai-depose-aid0090.html


2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசாவின் கூடுதல் தனி உதவியாளராக பணிபுரிந்த ஆசீர்வாதம் ஆச்சாரி முக்கியமான சாட்சியமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், அலைக்கற்றை வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்கு தொடர்ந்த வரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, பொதுச் செயலர் ஜே.பி. நட்டா ஆகியோர் முன்னிலையில் ஆசீர்வாதம் அக்கட்சியில் இணைந்தார்.

##2G விவகாரத்தில் மிக முக்கிய அரசு தரப்பு சாட்சியான ஆசீர்வாதம் ஆச்சாரி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்...இவர் தொலைதொடர்பு துறையில் கூடுதல் தனி உதவியாளராக பணிபுரிந்தவர்....CAG தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய், பிஜேபியில் சேர்வது எப்போது??????

இது, முழு 2G விவகாரமும், திமுகவின் மேல் தீராத வன்மமும், அரசியலில் இருந்தே திராவிட இயக்கத்தை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும் என்று கருதும் RSS மற்றும் அதின் நிழல் உறுபினர்களால், "அந்த" குறிபிட்ட "ஆதிக்க" கும்பல் மற்றும் அதின் கட்டுபாட்டில் உள்ள ஊடகங்களால் மிக மிக ஒருங்கிணைத்து திட்டமிடப்பட்ட, சதிவலை பின்னப்பட்ட ஒரு விஷயம் என்பதை உறுதிபடுத்துகிறது.....

ராசா போட்டியிடும் நீலகிரி தொகுதியில், கடைசி நேர "திட்டமிட்ட" குளறுபடிகளால் பாஜக வேட்பாளர், அதிமுகவுக்கு ஆதரவாய் போட்டியிடாமல் செய்யப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்...

அது மட்டும் இல்லாமல், 2ஜியில் நஷ்டம் ரூ. 1.76 கோடி என்று திரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடும் முன் CAG தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய், பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசியதற்கான ஆதாரங்களும் உண்டு....மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பே வினோத் ராய், முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தது ஏன்?



2G மற்றும் விவகாரங்கள், UPA ஆட்சியின் மீது களங்கத்தை ஏற்ப்படுத்த பிஜேபி & RSS திட்டமிட்டு உருவாக்கியவைகளா????

"ஆதர்ஷ் கட்டிடம் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் இல்லை, ஆனால், அப்படி இருபதாக, முன்னாள் ராணுவ தளபதி V.K. சிங் தவறான தகவல் அளித்து ஊழல் என்று சிபிஐ விசாரணையை வலிந்து நுழைந்தார்.." இப்போது இப்படி சொல்பவர் முன்னாள் மேஜர். ஜெனரல் A.R. குமார்..

முன்னாள் ராணுவ தளபதி V.K. சிங் இப்போது பிஜேபி MPயாகி மத்திய இணை அமைச்சராய் உள்ளார்..

2G விவகாரத்தில் மிக முக்கிய அரசு தரப்பு சாட்சியான ஆசீர்வாதம் ஆச்சாரி, சு.சாமிக்கு நெருக்கமான இந்த ஆச்சாரி, இப்போது பிஜேபி கட்சியில் சேர்ந்து பொறுப்பில் உள்ளார்..

அதே போல 2Gயில் ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தை முழு அளவில் ஆய்வு செய்து, கணக்கு வழக்குகளை சரிபார்த்து, ரிப்போர்ட் தயாரித்தவர் , மதிய தணிகை துறையின் மூத்த உயர் அதிகாரி ஆர்.பி.சிங்.

சிங் ஆராய்ந்து தயாரித்த ஆடிட் அறிக்கையில் இழப்பு தொகையாக இருந்தது, ரூ. 2,645 கோடி தான், அதுவும் மத்திய அரசின் கொள்கை முடிவின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்கப்பட்டிருப்பதால், நிர்ணய நுழைவு கட்டண விலைப்படி ரூ.2,645 கோடிதான் இழப்பு ஏற்பட்டது.

இந்த முழு உண்மையையும் மறைத்துவிட்டு, அரசாங்கத்திற்கும், குறிப்பாக திமுக மற்றும் ராஜாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டு அசிங்கபடவேண்டும் என்று திட்டமிட்டு அந்த 2,645 கோடியை, மிக மிக உயர்த்தி ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கட்டு கதை திரிக்கப்பட்டு, அவர்களுடைய ஊடகங்கள் மூலம் முன்கூட்டியே கசியவிடபட்டு தொடர் பொய் பிரச்சாரம் இடைவிடாமல் நடத்தபட்டது.

அந்த திரிக்கப்பட்ட அறிக்கையில் கையொப்பம் இட சிஏஜி வினோத் ராயால், ஆர்.பி.சிங் நிர்பந்திகபட்டுள்ளார்... அந்த ரிப்போர்ட்டைத் திருத்தி, மாற்றி எழுதிவிட்டு, அவரை படித்துப் பார்க்க கூட விடாமல், கடைசி பக்கத்தில் மட்டும் அவரச அவசரமாக கையெழுத்து வாங்கியுள்ளனர்..

2ஜி நஷ்டம் ரூ. 1.76 கோடி என்று திரிக்கப்பட்ட அறிக்கை வெளியிடும் முன் வினோத் ராய், பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோஷியை பலமுறை சந்தித்துப் பேசியுள்ளார்..

//2G வழக்கு விசாரணையில் ஆ.ராசா அவர்களின் திறமையான வாதங்களுக்கு பதிலளிக்க முடியாமல், திணறி, பொய்களை பேசிய சிபிஐ வழக்கறிஞர்...//

தினமணி செய்தி..

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடுத்த வழக்கில் அதன் சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவருடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்.

தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆனந்த் குரோவர் ஆஜராகி, "அலைக்கற்றை ஒதுக்கீடுக்காக தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை ஆ.ராசா சரிவர கடைப்பிடிக்கவில்லை. அலைக்கற்றை எவ்வளவு உள்ளது? என்பதை முறைப்படி ஆராயாமல் தன்னிச்சையாக ராசா எடுத்த நடவடிக்கையால்தான் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, "யூனிடெக்' நிறுவனத்துக்கு சாதகமாக உரிமம் வழங்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டு அதற்கு சாதகமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டை மேற்கொள்ள ராசா நடவடிக்கை எடுத்தார்' என்று குறிப்பிட்டார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான ஆ.ராசா, ஆனந்த் குரோவரின் குற்றச்சாட்டுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். "அலைக்கற்றை எவ்வளவு உள்ளது என்பதை அறிந்த பிறகுதான் அதை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சட்டத்தை வளைக்கும் வகையில் தீவிரமாக நீங்கள் வாதிடலாம். ஆனால், நீதிமன்றத்துக்கு உள்ளே கோப்பில் உள்ள விவரத்தை மறைக்கும் வகையில் தவறான தகவலைத் தெரிவித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்காதீர்கள்' என்று ராஜா குறிப்பிட்டார்.

இதையடுத்து, "எனக்கே சட்டம் பற்றி போதிக்க முயற்சிக்கிறீர்களா? நான் ஒரு நேர்மையான வழக்குரைஞர்' என்று ஆனந்த் குரோவர் கூறினார். இதற்குப் பதிலளித்த ராசா, "நீங்கள் பெரிய நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக இருக்கலாம். நானும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்குரைஞர் தொழிலை செய்து வந்தவன். அதற்காக எனக்கு எதிராக நீங்கள் கண்மூடித்தனமாக முன்வைக்கும் பொய்யான தகவலை "சரி' என்று என்னால் எவ்வாறு அனுமதிக்க முடியும். குற்றம்சாட்டப்பட்டுள்ளவன் என்ற முறையில் எனது தரப்பு விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இந்த வழக்கு தொடர்புடைய கோப்பிலேயே ஐந்து இடங்களில் முறைப்படி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு முன்பு அதன் அளவு குறித்து ஆராய்ந்த விவரம் உள்ளது. முறையாக வழக்கின் கோப்பை படிக்காமல் பொய் உரைத்தால் அதை ஏற்க முடியாது' என்றார்.

இதையடுத்து, ஆனந்து குரோவர் "எனக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கக் கூடாது' என்றார்.

இதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி சைனி தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார்.

http://www.dinamani.com/india/2017/feb/21/2%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2653005.html

2G வழக்கு விசாரணையில் கோர்டில் திணறும் சிபிஐ.. அதிஷ்டத்தை நம்புவதாக மூத்த வழக்கறிஞர் பல்டி...

எந்த ஒரு வழக்கிலும் சட்டப்படியும் நீதிபடியும், ஆவணங்கள் அடிப்படையிலும் செயல்பட வேண்டிய, வழக்காட வேண்டிய சிபிஐ வழக்கறிஞர், அதிர்ஷ்டத்தை நம்புகிறார்.. ஆனால் "குற்றம் சாட்டப்பட்ட" ஆ.ராசாவோ சட்டத்தையும், நீதியையும், ஆவணங்களையும் நம்புகிறார்..... திமுக மீது களங்கம் சுமத்த பொய் புரட்டுகளால் புனையப்பட்ட இந்த 2G வழக்கு சிதறும்... ஆ.ராசா வெளியே வருவார்...

//சிபிஐயின் ஆதாரமற்ற விவாதங்களால், கோபமடைந்த நீதிபதி, சைனி கூறியதாவது:

தொலைத் தொடர்பு துறையின் அரசு செயலர், கூடுதல் செயலர், சிறப்பு செயலர், உரிமங்கள் வழங்கும் இயக்குனர், துணை இயக்குனர் என அனைவருமே பதிவு செய்து, ஆவணங்களில் கையெழுத்து போட்டுள்ளனர்; அதைதான், ராஜா ஏற்றுள்ளார். அப்படியானால், இந்த கோர்ட், ஆவணங்களை நம்ப வேண்டுமா அல்லது சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்த பின், கோர்ட்டிற்கு வந்து, 'நான் உடன்படவில்லை; வெறும் கையெழுத்துதான் போட்டேன்' என்ற வாய்மொழி சாட்சியை, நம்ப வேண்டுமா?

அரசு செயலர், அமைச்சரவை செயலருக்குத்தான் கட்டுப்பட்டவர்; அமைச்சருக்கு அடிமை அல்ல. மனப்பூர்வமான ஒப்புதல் இல்லை என்றால், அதையாவது, தன் குறிப்பில் பதிவு செய்திருக்கலாமே; அதை, யாரும் தடுக்க போவதில்லையே. நிர்வாக சட்டத்தை நன்கு படித்துவிட்டு இந்த கோர்ட்டிற்கு உரிய ஆலோசனைகளை வழங்கும் விதத்தில், வாதங்களை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். நீதிபதியின் கிடுக்கிப் பிடி கேள்விகளால் ஆடிப் போன, சி.பி.ஐ., வழக்கறிஞர், குரோவர் பதிலின்றி அமைதி காத்தார்...//

ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டபடி, முழு 2G விவகாரமும், திமுகவின் மேல் தீராத வன்மமும், அரசியலில் இருந்தே திராவிட இயக்கத்தை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும் என்று கருதும் RSS ஹிந்துத்துவா மற்றும் அதின் நிழல் உறுபினர்களால், "அந்த" குறிபிட்ட ஜாதி கும்பல் மற்றும் அதின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களால் மிக மிக ஒருங்கிணைத்து திட்டமிட்டு, சதி வலை பின்னப்பட்ட ஒரு விஷயமாகும்.....

ஊழல் என்றால், இதோ எழு வருடங்கள் ஆகிறது, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் உள்ள இந்த வழக்கில், அனைத்து புலனாய்வு அமைப்புகளும், பலமுறை சோதனைகள் நடத்தி, இதுவரை என்ன கண்டுபிடித்து உள்ளார்கள்???? எதை நிரூபித்து உள்ளார்கள்?? - ஒன்றும் இல்லை....

வடநாட்டு, ஆரிய ஊடகங்கள் செய்த இடைவிடாத பொய் பிரச்சாரம், சு.சாமி, பூஷன், வினோத் ராய் போன்ற நிழல் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் சதி, அதற்கு சிஏஜி போன்ற அரசியல் சாசன அமைப்புகள் ஒத்துபோதல், எதிர் கட்சிகளின் தொடர் போராட்டம், நாடாளுமன்றத்தை முடக்குவது என்ற செயல்பாடுகள், சுப்ரீம் கோர்ட் புரிந்துகொண்டவிதம் இவை எல்லாம் சேர்த்துதான் இந்த வழக்கை தீர்மானித்தன....

2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தவறான முறையில் இழப்பை கணக்கிட்டு, அதை ஊதி பெரிதாக்கிய முன்னாள் CAG வினோத் ராய்க்கு பிஜேபி அரசால் பத்ம விருது வழங்கபட்டது...

2G வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, தனது ஜனதா கட்சியை கலைத்துவிட்டு, பிஜேபியில் இணைத்தார்... 2G விவகாரத்தில் மிக முக்கிய அரசு தரப்பு சாட்சியான ஆசீர்வாதம் ஆச்சாரியும், பிஜேபியில் இணைந்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1716371

கருத்துகள் இல்லை: