வியாழன், 21 செப்டம்பர், 2017

சபரிமாலா : நிச்சயம் மக்கள் இவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஏழைகளின் கல்விக்காகப்
பாடுபடுவதாகச் சொல்லும் எடப்பாடியின் ஆட்சியில்தான் ஏழை மாணவி அனிதா தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் இப்போது நாங்களும் நீட்டை எதிர்க்கிறோம், நீட் விலக்கிற்காகப் போராடினோம் என நீட்டி முழக்கிக்கொண்டிருக்கிறார். இந்த மாதிரி பக்கா கோழைத்தனமும் படுகேவலமான ஆட்சி வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. அனிதா செத்தவுடன் நாடே கொந்தளித்துப் போராடிய போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது பஜனை பாடுகிறார் எடப்பாடி. மேடையில் அண்ணா படம் வைக்காமலேயே அண்ணா பிறந்தநாள் கொண்டாடிய அதிசய மனிதர்கள்தான், நீட்டை எதிர்க்கிறோம் என்கிற அதிசயத்தையும் நிகழ்த்துகிறார்கள். நிச்சயம் மக்கள் இவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்... அதுவும் வெகு விரைவில்''’என கொந்தளித்தார் சபரிமாலா. (மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்) - அ.அருண்பாண்டியன்

கருத்துகள் இல்லை: