செவ்வாய், 11 ஜூலை, 2017

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ரூ 350 கோடி சொத்து குவிப்பு .. விசாரணை .

Special Correspondent FB Wing சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால்
தண்டிக்கப்பட்ட குற்றவாளி மறைந்த ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் ரூ350 கோடி சொத்து குவிப்பு தொடர்பாக தில்லியில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு அவர் இயக்குநராகவும் இருந்து வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அளிக்கும் புகார்கள் இவரைத் தாண்டியே ஜெயலலிதாவுக்குச் செல்ல முடியும் என்ற சூழல் இருந்தது.. தில்லியிலுள்ள வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் வைத்து நடைபெறும் இந்த விசாரணையில் அவரது பெயரில் இருக்கும் சொத்துகள் அனைத்தும் பூங்குன்றனுக்கு சொந்தமானதா? ஜெயலலிதாவுக்கு உரியதா? அல்லது சசிகலா குடும்பத்துக்காக பினாமியாக எழுதி வைக்கப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை: