புதன், 12 ஜூலை, 2017

வருமானவரி பொறியில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி - மகன்- மாமனார்- உறவினர் என மொத்த குடும்பமும்?

Special Correspondent FB ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது
சந்தேகத்திற்குரிய அமைச்சர்கள் மீது அதிகாரப்பூர்வமாக அல்லாமல் போலீசாரை வைத்து ரெய்டு நடத்தினார். இதில் எடப்பாடி தரப்பினரும் அடக்கம். அதன்பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி, எடப்பாடி மகன் மிதுன் மீதும் உறவினர் மொடக்குறிச்சி ராமலிங்கம் மீதும் வழக்குப் பதிவு செய்தார்கள். அது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு ராமலிங்கமும், மிதுனும் கைது செய்யப்பட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு தமிழகத்தில் பெரிய சாலைகள் போடுவது, அரசு கட்டிடங்கள் கட்டுவது, பாலங்கள் கட்டுவது என அனைத்து டெண்டர்களையும் எந்த காண்ட்ராக்டருக்கு தருவதென முடிவு எடப்பாடியின் மாமனார் முருகேசன், இவர்களது உறவினர் மொடக்குறிச்சி ராமலிங்கம் மற்றும் மகன் மிதுன் . இந்த மூவரும்தான் எடப்பாடியின் கஜானா என்கிறார்கள் வருமான வரித்துறையை சேர்ந்த அதிகாரிகள். தற்பொழுது இந்த மூவர் டீமின் பணப்புழக்கத்தைப் பற்றி டெல்லிக்கு தகவல் தெரிவித்துள்ளோம். மத்தியில் இருந்து ஆணை வந்தால் ரெய்டு நடத்துவோம்'' என்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை: