வியாழன், 15 டிசம்பர், 2016

பொன்னையன் :சசிகலாவுக்காக அதிமுக அமைப்பு விதிகள் தளர்த்தப்படும்..

அதிமுக-வின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன்.  செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மனச்சாட்சியாக இருப்பவர்தான் சின்னம்மா சசிகலா. அவர் மாண்புமிகு அம்மாவுடன் 33 ஆண்டுகளாக உற்ற தோழியாக, உடன் பிறவா சகோதரியாக அரசியல் உள்ளிட்ட முக்கிய தருணங்கள் அனைத்திலும் உடனிருந்து உன்னிப்பாக கவனித்து வந்தவர். எனவே, அம்மாவுக்குப் பிறகு அதிமுக-வின் பொதுச்செயலாளராக சின்னம்மாவே ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். செயற்குழு, பொதுக்குழு அனைத்திலும் ஆட்சேபனையற்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். அவருக்காக அதிமுக-வின் விதிகள் தளர்த்தப்படும். அதிமுக-வின் அச்சாணியாக விளங்குபவர் சின்னம்மா சசிகலா” என்று தெரிவித்தார்.மின்னம்பலம்,காம்  அய்யாவுக்கு பெயர் சரியாகத்தான் வச்சிருக்காக

கருத்துகள் இல்லை: