புதன், 14 டிசம்பர், 2016

அப்போலோ கணினி ரகசியங்கள் களவு .. இரகசியங்களை வெளியிட்டால் நாட்டில் பெரும் கலவரம் ஏற்படும்?

அப்போலோ கணினி ரகசியங்கள் களவு ஜெயலதாவிற்கு அப்பல்லோவில் நடந்தது என்ன? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனை கணினி விவரங்களை வசப்படுத்தியுள்ளோம் என ஹேக்கர்ஸ் குழு தெரிவித்துள்ளனர். 'லெஜ்ஜியன்' ஹேக்கர்ஸ் குழு, அப்போலோவில் சர்வரில் ஊடுருவியது பற்றி வாஷிங்டன் போஸ்டுக்கு பேட்டியளித்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கு அப்போலோவில் தரப்பட்ட சிகிச்சை பற்றிய விவரம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் சிகிச்சை பற்றிய தகவல்களை வெளியிட்டால் பெரும் குழுப்பம் ஏற்படும் என லெஜ்ஜியன் குழு பேட்டி அளித்தது. ஏற்கனவே ராகுல்காந்தி, விஜய்மல்லையா டுவிட்டர் கணக்கை முடக்கியவர்கள் தான் இந்த லெஜ்ஜியன் குழுவினர் என தகவல் வெளியாகியுள்ளது. நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: