ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டி என இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் கிரானிக்கல்> ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி: சசிகலாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் சசிகலா நடராஜனை அதிமுக பொதுச்செயலராக நியமிப்பது என்பது மிகவும் தவறானது. ஏனெனில் சசிகலா நடராஜன் பெயரை அப்பதவிக்கு எந்த ஒரு இடத்திலுமே ஜெயலலிதா குறிப்பிடவில்லை.
சசிகலா நடராஜனுக்கு ஒரு கவுன்சிலர் அல்லது எம்.எல்.ஏ. பதவியை கூட ஜெயலலிதா தந்தது இல்லை.
அவர் அரசியலுக்கு தகுதியற்றவர் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே தமக்கு எதிராக சதி செய்தார்; கொல்ல முயற்சித்தார் என்பதற்காகவே ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்தான் சசிகலா.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியதாக ஆங்கில நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக