செவ்வாய், 27 செப்டம்பர், 2016

காஷ்மீர் விடயத்தில் சீனா பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை! பாகிஸ்தான் பொய் அம்பலம்

புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில் தங்களை சீனா ஆதரிப்பதாக பொய் கூறியுள்ளது அம்பலமாகியுள்ளது. பாக்., கூற்றை சீனா மறுத்துள்ளது.;காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடந்து வருவதாகவும், மக்கள் அடக்கப்படுவதாகவும் பாக்., குற்றம்சாட்டி வருகிறது. இதனை சர்வதேச பிரச்னையாக்க முயற்சி செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு அளிக்கும் என அந்நாட்டு பிரதமர் லி கெகியாங் கூறியதாக பாக்., கூறியது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் எனக்கூறியது.இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் மீது வெளிநாடுகள் கண்டனம் தெரிவித்தால், அப்போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும். ஆயுதம் ஏந்தாத மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. காஷ்மீர் மாநில மக்களின் விருப்பப்படி தீர்வு காண வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் யு போரென் கூறியதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு கூறியதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.ஆனால், இதனை சீனா மறுத்துள்ளது.


சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், பாகிஸ்தான் மீடியாக்கள் வெளியிட்ட செய்தி பற்றி எனக்கு தெரியாது. இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாகவும் நிலையாகவும் உள்ளது. காஷ்மீர் பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அமைதியாகவும் முறையாகவும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனக்கூறினார்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: