செவ்வாய், 27 செப்டம்பர், 2016

தேமுதிகவில் வேட்புமனு வாங்க தொண்டர்கள் தயக்கம் ..

பிரேமலதாவை தேமுதிகவின் சென்னை மேயர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்க வேண்டும். செய்வாரா. இவருக்கே நம்பிக்கையில்லை, பின் எப்படி தொண்டர்கள் இவரை நம்பி வருவார்கள். பாராளுமன்ற தேர்தலில் வாங்கிய தர்மஅடியில் இருந்து தலைதூக்குவதற்குள் சட்டமன்ற தேர்தலில் நாயடி பேய் அடி வாங்கியாகிவிட்டது. உள்ளாடசி தேர்தலில் வாங்க போகும் மரண அடியோடு தேமுதிக, டி.ராஜேந்தர், பாக்யராஜ் கட்சி மாதிரி அட்ரஸ் இல்லாமல் போய்விடும். கட்சிக்கு கருமாதி நடத்த வேண்டியதுதான். 
போட்டியிட தயக்கம்: தே.மு.தி.க., அதிர்ச்சி தமிழகம் முழுவதும், தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பியோர், திடீரென பின்வாங்குவதால், அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கு, 21ம் தேதி முதல், அக்கட்சியின் மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 30ம் தேதிக்குள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும் என, தே.மு.தி.க., தலைமை அறிவித்தது. 'பம்ம' துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த, 20ம் தேதி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் தெற்கு மாவட்ட செயலர் பரமசிவம் ஆகியோர், தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தனர்.இதே போல, பல மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளும், கட்சி மாற காத்திருக்கின்றனர். இது தொடர்பான தகவல்கள் கிடைத்ததால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிய கட்சியினர், திடீரென, 'பம்ம' துவங்கி உள்ளனர். யாரும் தயாராக இல்லை இது குறித்து, தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:சட்டசபைதேர்தல் படுதோல்விக்குப் பின், தே.மு.தி.க., கலகலத்து வருகிறது. இருந்தும், 'உள்ளாட்சி தேர்தலில், கட்சி தனித்து போட்டியிடும்' என அறிவித்து, விருப்ப மனுக்களை, கட்சி நிர்வாகம் வாங்க உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே, கட்சி நிர்வாகிகள் பலரும், மாற்று முகாம் தேடி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, கட்சியினர் யாரும் தயாராக இல்லை. இதனால், வேட்பாளர்கள் கிடைப்பது அரிதாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் விருப்ப மனு பெறவே, கட்சியினர் ஆர்வம் காட்டாமல் பின்வாங்குவது, தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் --  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: