வியாழன், 29 செப்டம்பர், 2016

தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்: சென்செக்ஸ் மதிப்பு மதியம் 573 புள்ளிகள் சரிவு

மும்பை, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்றிரவு தாக்குதல் நடத்தியது பற்றிய அறிவிப்பினை தொடர்ந்து இன்று மதியம் பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மதிப்பு 573 புள்ளிகள் அளவில் சரிவை சந்தித்துள்ளது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் மதிப்பு மதியத்தில் 572.89 புள்ளிகள் அல்லது 2.02 சதவீதம் என்ற அளவில் சரிந்து 27,719.92 புள்ளிகளாக உள்ளன.  ரியல் எஸ்டேட், சுகாதாரநலம், மின்சாரம் மற்றும் உலோகம் என்ற வரிசையில் அனைத்து துறைகளிலும் சென்செக்ஸ் மதிப்பு 5.05 சதவீதம் அளவிற்கு சரிவினை சந்தித்துள்ளன. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 186.90 புள்ளிகள் அல்லது 2.13 சதவீதம் அளவிற்கு சரிந்து 8,558.25 புள்ளிகளாக உள்ளன. இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர் என மிக குறிப்பிடத்தக்க மற்றும் நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது நேற்றிரவு இந்திய ராணுவம் தாக்குதல்களை நடத்தியது.  இது பங்கு வர்த்தகத்தின் அனைத்து விற்பனை நிலைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது. சென்செக்சில் முன்னிலை வகிக்கும் 30 நிறுவனங்களான அதானி போர்ட்ஸ், ஐ.சி.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, லூபின், டாடா மோட்டார்ஸ், சன் ஃபார்மா, டாடா ஸ்டீல், கெயில், எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி., டாக்டர் ரெட்டீஸ், லார்சன் மற்றும் டூப்ரோ மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்டவை 4.75 சதவீதம் அளவிற்கு வர்த்தகத்தில் சரிவை சந்தித்துள்ளன.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: