புதன், 20 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டை எதிர்க்கவில்லை; விலங்கு சித்ரவதையையே எதிர்க்கிறோம்...கொள்ளைக்கார Peta கொள்கை விளக்கம்?

 பீட்டா அமைப்பு வெளிச்சத்துக்கு வந்தது. 'உள்நாட்டு ரகமான காளைகளையும், பாரம்பரியத்தையும் முற்றிலும் ஒழித்துக்கட்ட, நடத்தப்பட்ட சர்வதேச சதி இது' என, தமிழக அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குற்றஞ்சாட்டின.இதுகுறித்து, பீட்டா அமைப்பு தன் இணையதளத்தில் அளித்துள்ள விளக்கம்:< ஜல்லிக்கட்டை நாங்கள் எதிர்க்கவில்லை; விலங்குகள் மீதான சித்ரவதையையே எதிர்க்கிறோம்   காளை மாட்டை காட்சி பொருளாக ஏன் சேர்த்தீர்கள், நாயை ஏன் விலக்கினீர்கள்? காட்சி பொருள் என்று சேர்த்துவிட்டால் அதை வீட்டில் வளர்க்க முடியாது. அதற்க்கு பதில் கூறுங்கள்? தமிழக அரசாங்கம் வேண்டிக்கொண்ட, சுப்ரீம் கோர்ட் உறுதிபடித்திய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிக் கொண்ட வழக்கை இன்னும் விசாரிக்க வில்லை, உங்களுடைய வழக்கை மட்டும் ஒரே நாளில் எடுத்துக் கொண்டு தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன, யார் இதன் பின்னணில் உள்ளனர் ? உங்களுக்கு எது இவ்வளவு பணம், அரசாணை எதிர்த்து நீங்கள் வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன ? தீவிர வாதத்தை தடுக்க போராட வேண்டியது தானே எங்களுடைய பாரம்பரியத்தை அழிக்க உனக்கு எவ்ளோ திமிர் இருக்க வேண்டும்,
உன்னால் சுப்ரீம் கோர்ட் க்கு மட்டும் தன போக முடியும், மக்களின் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியாது .. மக்களுக்கு தான் சட்டம், சட்டத்திற்கு மக்கள் அல்ல, நங்கள் மாட்டையும் எங்களின் உணர்ச்சியையும் ஓட விடுவோம், தடுத்து பார், முடிந்தால் ...
<!--more-- கடந்த 2011ல் வெளியிடப்பட்ட, மத்திய அரசு கெஜட் அறிக்கையில், காட்சி விலங்காக, காளைகளைபயன்படுத்த தடை விதிக்கப்பட்டது; இது ஜல்லிக்கட்டுக்கும் பொருந்தும்; இதை சுப்ரீம் கோர்ட், உறுதி செய்தது

* கடந்த 1960ல் கொண்டு வரப்பட்ட, பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திலும், இது வலியுறுத்தப் பட்டு உள்ளது. 'காளைகள் உள்ளிட்ட விலங்குகளை துன்புறுத்துவது, சட்டத்துக்கு விரோதமானது' என்ற சட்டம், 56 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது
* தமிழ்நாடு ஜல்லிக்கட்டுகட்டுப்பாடு தொடர்பான விதிமுறையில், 'வீரர்கள் மற்றும் காளைக்கு இடையே நடக்கும் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதில் காளையை, வீரர்கள் அடக்குவர்' என, கூறப்பட்டு உள்ளது; இது, பிராணி கள் வதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால், இந்த விதிமுறையை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது* உள்நாட்டு காளை இனத்தை அழிக்கும் நோக்கத்திலேயே, நாங்கள் செயல்படுவதாக கூறுவது, முற்றிலும் தவறானது. பால் உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு வீரிய ரக பசுக்கள், உள் நாட்டில் உருவாக்கப்பட்டன; மேலும், வளர்ப்புப் பிராணிகள், அழியக்கூடிய உயிரினங்களாக மாறாது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: