சனி, 23 ஜனவரி, 2016

மரசெக்கு நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய்.....ரசாயனம் கலக்காதது..தீங்கு விளைவிக்காதது

இப்போதெல்லாம் நாள்தோறும் சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது சமையல்
எண்ணெயுமே ‘ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்’ என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, வருவதால் நம்மில் பலருக்கு குழப்பம் அதிகரிப்பதுதான் மிச்சம். இந்தக் குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், இந்த எண்ணெய் நல்லதா, கெட்டதா, கண்டிப்பா தேவையா? என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்..
எண்ணெய் என்பது கொழுப்பு.; இந்த கொழுப்பு ஏன் தேவை? உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க,  செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்ப தற்கு, உள் உறுப்புகளைப் பாதுகாப்பதற்கு… புரதத் திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது.
ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள் என்றால் அதே அளவு கொழுப் பிலோ 9 கலோரிகள்! கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரி யாதது என கொழுப்பில் 2 வகை.
எண்ணெய், நெய், வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு.
இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம். விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல் நலத்துக்கு நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. அன்சாச் சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய் களில் கொழுப்பு படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வனஸ்பதி மட்டுமல்ல… அறை வெப்ப நிலையில் கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.மொத்தத்தில் உடலில் உள்ள செல்கள் ,மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் செல்கள் மற்றும் சுரப்பிகள் (ஹார்மோன்கள் )இயங்க கொழுப்பு மிகவும் முக்கியம் தாவர கொழுப்புகளில் நேரடி கொலஸ்ட்ட்ரல் கிடையாது .தவிர பல விட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது பள்ளி கூடத்தில் படித்ததை நினைவு படுத்தி கொள்ளுங்கள் .
இன்னும் கொஞ்சம் விளக்காக சொல்வதென்றால் உடலை என்றும் இளமையுடனும் பளபளப் பாகவும் புத்துணர் வுடன் வைத்து கொள்ளும் தன்மை தாவர எண்ணைக்கு உண்டு .இயற்கை தாவர எண்ணெய்கள் உடலிலும் ரத்த குழாய் களிலும் கொழுப்பை சேர்க்காது .தொப்பை விழாது பாது காக்கும் .இயற்கையில் கிடைக்கும் கடலை எண்ணெய் ,தேங்கா எண்ணெய் ,வேப்ப எண்ணெய் ,விளக்கென்னை , நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல வைட்ட மின்கள் குறிப்பாக அண்டி ஆக்சி டண்ட்கள் வைட்டமின் ,தாது உப்புகளான இரும்புசத்து ,துத்தநாகம் ,மக்னேசியம் ,செம்பு ,கால்சியம் முதலானவை உள்ளன . இந்த தாது பொருட்கள் முலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட் கள் நம் கை , கால் முட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும் .இவை தான் எண்ணெய் யின் உண்மையான குணங்கள் .
அனால் இன்றைக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை , ரத்தகொதிப்பு ,மாரடைப்பு ,உடல் பருமன், கேன்சர் என்று எல்லாவற்றிற்கும் எண்ணெய் யை குறை சொல்ல தொடங்கி விட்டோம். ஆனால் இதற்கெல்லாம் காரணம் ரீபைண்ட் மற்றும் டபுள் ரீபைண்ட் (Ex : GoldWinner ,Sundrop, Fortune ,SVS ,Porna, Sunland , Saffola , Palmolein )என்று நவீன முறைகள் முலம் கெடுப்பது தான் .இன்றைக்கு புற்றுநோய் ,முட்டுவலி ,போன்ற வற்றுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துவதே காரணம் .எண்ணெய் சுத்திகரிக்கப்பட பயன்படுத்தும் வேதி பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்துபவை .
சமையல் எண்ணெய் களை எபப்டி சுத்திகரிக்க படுகின்றன என்பதை பார்த்தால் நாம் சொன்னதில் உள்ள உண்மை தெரிய வரும் பல உள் நாட்டு கம்பெனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் மூலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவர்கள்.அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளைகளுக்கு இடையே ஏற்படும் .அந்த வெப்பத்தால் இய்ற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் சில அதிசயமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .
இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில் இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தை யும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். இந்தக் காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக மாற்றி விடு கிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கி விடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்க பிளிச்சிங் பவுடர். பின் இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நீக்கி விட்டு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதிய அமிலம் (எண்ணெய்) கிடைக்கும்.
அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதி யாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்தி ருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார் கள் சமையலுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண் ணெயை பயன்படுத்தும் பொழுது சுடு தங்காமல் உருக்கு லைந்து (உருக்குலையும் பொழுது தான் பிசுபிசுப்பு தன்மை பாத்திரங்களில் மற்றும் உங்கள் சமையல் கட்டுகளில் ஒட்டி கொள்கிறது ) உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது. இந்த பிசு பிசுப்பு தன்மை நாம் சாப்பிடும் பண்டங்களிலும் இருப்பதால் நாம் உடல்களில் உள்ள நல்ல செல்களில் இணையந்து அந்த செல்லின் வேலைகளை தடுக்கிறது அதுவே பின் நாட்களில் பல வியாதிகளுக்கு நாம் ஆளாகிறோம் .
இதனால்தான் இப்போதெல்லாம் பதினைந்து வயதிலேயே முடி நரைத்து விடுகிறது முடியின் இயற்கை நிறம் மாறி விடுகிறது. மூட்டுக்களில் தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டு வலி ஏற் படுகிறது அதுமட்டுமில்லாமல் சுத்தி கரிக்கப் பட்ட எண்ணெய்யில் தங்கியுள்ள கந்தக அமிலம் ,மனித உடலில் உள்ள எலும்பை பலவீனம் அடைய செய்து விடும் .
அப்படியானால்… பாரம்பரிய எண்ணெய்தான் நல்லது!
நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், நல்லெண்ணை யையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காய வைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள், உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான ப்ரோடீன்கள் ,வைட்டமின்கள் ,தாது பொருட்கள் ,நார்சத்துக்கள்,குளோரப்பில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர் ,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவை யுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .
செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் சேர்ந்து விட்ட தேவையற்ற கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் .செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய் பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது .செக்கில் ஆட்டிய விளகெண்ணை அனப்படும் ஆமனெக்கு எண்ணெ யில் ரிசிநோலியிக் அசிட் அதிகம் உள்ளது .இந்த அசிட் ஒரு சிறந்த அண்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரி செய்ய கூடியது தவிர குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்ற தன்மை கொண்டது
இந்த எண்ணெய் அழகு பராமரிப்பில் பயன் படுத்தினால் சருமம் அழகாவதோடு ,கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும் .குதிகால் வெடிப்புகள் இருந்தால் தினமும் விளகெண்ணை தடவி வர குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி வெடிப்புகளும் விரைவில் போய்விடும் (நாம் கடைகளில் வாங்கும் பிரான்ச் ஆயில் வேறொன்றும் இல்லை )
செக்கில் அட்டிய நல்லெண்ணெய் நோய் மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் ஈ யும் கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் “லெக்சீதீன்” என்ற பொருளும் உள்ளது எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைக்கு நிகரே இல்லை எனலாம் .அதனாலையே இதற்கு ” குயின் ஆப் ஆயில் ” என்றும் அழைகிறார்கள் மூல தொந்தரவு , மாத விலக்கு தொந்தரவு மூச்சுகுழல் பிரச்சனைகள்,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள் நல்லெண்ணை தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும் .செசாமின் என்ற பொருள் நல்லெண்ணையில் இருப்பதால் வாதம் ,இதய நோய் வராமல் முன் கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து கொள்கிறது .வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு முதலியவற்றை தடுக்கும் பைரோரெசினால் என்ற அமில பொருளும் நல்லெண்ணையில் இருக்கிறது .
அது சரி.. மரசெக்கு எண்ணெய் என்றால் என்ன ?
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு)இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி .செக்கானது மரத்தலோ ,கல்லாலோ செய்யபட்டிருக்கும் .செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்க படுகிறது.ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர் தற் பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் மூலம் இயக்க படுகிறது .பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்
செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க ) சேர்த்து ஆட்டுவது வழக்கம் சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குக ளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும் .மரசெக்கில் கருபட்டி யுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவளவாக வெப்பம் ஏறாது .அபப்டியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சம்மாக்கள் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது .இப்படி மர செக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்கை .இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான் .
மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும் அனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத் திற்கு கெட்டு போகாமலும் இருக்கும் ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் …அதன் ருசி கால கால காலத் திற்கும் மறக்காது .இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும்.குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்
டாக்டர்.செந்தில் வசந்த்    aanthaireporter.com

கருத்துகள் இல்லை: