இப்படிப்பட்ட போர்க்குணமிக்க போராளியான ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை (17-01-2016) அன்று தனது நண்பரின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக போராடுபவர்களை எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடக்கி, ஒடுக்கி, அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது என்பதற்கு நம் கண் முன் நிற்கும் உதாரணம் தான் ரோகித் வெமுலா.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முசாபர் நகர் குறித்த ஆவணப் படத்தை டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் திரையிட்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி காலிகளைக் கண்டித்தும், யாகூப் மேமன் தூக்கைக் கண்டித்தும், ரோகித் வெமுலா, தோந்தா பிரசாந்த், விஜய்குமார், சேசு செமுடுகுண்டா மற்றும் சுன்கன்னா ஆகிய 5 மாணவர்களும் முன்னணியாக இருந்து அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு எதிராக இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காலிகள் என்று தமது முகநூலில் சாடியிருக்கிறான் அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்து ஏ.பி.வி.பி நிர்வாகி சுசீல் குமார்.
இதனைக் கண்டித்து இந்த 5 மாணவர்களும் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அதிகாரி முன்னிலையில் சுசீல் குமாரை அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் மன்னிப்புக் கோர வைத்திருக்கின்றனர். பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய சுசீல் குமார், மறுநாள் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா என்ற அமைப்பில் உள்ள தனது சகோதரனுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் சுமார் 40 பேர் திரண்டு வந்து தங்கள் இருவரையும் தாக்கியதாகப் பொய்ப்புகார் அளித்திருக்கிறான். இதை நிரூபிப்பதற்கு இவர்கள் வேண்டுமென்றே மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளனர்.
அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை ஒடுக்குவது தொடர்பாக பா.ஜ.க, ஏ.பி.வி.பி, மனித வளத்துறை அமைச்சகம், பல்கலைக் கழகம் இடையேயான கடிதப் பரிமாற்றம்
இந்த நாடகங்களின் அரங்கேற்றத்திற்குப் பிறகு உள்ளூர் பா.ஜ.க பிரமுகரான ராமச்சந்திர ராவின் அழுத்தத்தின் பேரில் அப்போதைய பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.பி.சர்மா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பேராசிரியர் அலோக் பாண்டேயின் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்.
இந்தக் குழு விசாரித்து அளித்த அறிக்கையில், இப்பிரச்சினை சுசீல் குமார் மன்னிப்புக் கடிதம் கொடுத்த போதே எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடித்துக் கொள்ளப்பட்டது என்றும் சுசீல் குமாரின் உடலில் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாகம் விசாரணைக்குழு அறிக்கையை நிராகரித்து விட்டு 5 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக் கழக மாணவர்கள் போராடத் தொடங்கியவுடன், அப்போதைய துணை வேந்தர் ஆர்.பி.சர்மா வேறு வழியின்றி அம்மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்து விட்டு, அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பலை சமாதானப்படுத்தும் வகையில் மற்றொரு விசாரணைக் கமிட்டியையும் நியமித்தார். அதோடு ஜூன் மாதம் முதல் இம்மாணவர்களுக்கு வர வேண்டிய கல்வி உதவித் தொகை பல்கலைக்கழக நிர்வாகத்தால் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க, அங்கிருந்த பார்ப்பனக் கும்பல் மத்திய மனித வளத்துறை அமைச்சகத்துக்கு ஒரு மொட்டைக் கடிதாசியைப் போட்டு அதன் வாயிலாக ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து இம்மாணவர் வட்டத்தை முடக்க முயற்சி செய்ததும், அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதுமான ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் பார்ப்பனக் கும்பல் பணிய நேரிட்டதும் நினைவிலிருக்கலாம். அதே போல இங்கும் தெலுங்கானா மாநில பா.ஜ.க எம்.பி.யும், மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா, அரசு முத்திரை கொண்ட தனது அலுவலக கடிதத் தலைப்பில் ஹைதராபாத் மத்திய பல்கலையில் ஏ.பி.வி.பி.-ன் சதி செல்லுபடியாகாத கதையை, தேசத்தின் பாதுகாப்பிற்கு எழுந்த பிரச்சினையாக சித்தரித்து ஒரு கடிதத்தை மத்திய ’மனித’ வளத்துறை அமைச்சர், ’போலி சான்றிதழ் புகழ்’ ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ளார்.
உடனடியாக களத்தில் இறங்கிய மனித வளத்துறையின் பார்ப்பனக் கும்பல், இதற்கு விளக்கமளிக்குமாறு செப். 3 அன்று ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது. இப்பிரச்சினை குறித்து அப்போதைய நிலையை விளக்கி பல்கலைக்கழகம் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் திருப்தி அடையாத மத்திய மனித வளத்துறை அமைச்சகம் பண்டாரு தத்தாத்ரேயாவின் புகாரின் அடிப்படையில் அந்த மாணவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ச்சியாக செப்டெம்பர் 24, அக்டோபர் 6, 20 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் கடிதங்கள் அனுப்பி அழுத்தம் கொடுத்தது.
இந்நிலையில் துணை வேந்தராக இருந்த ஆர்.பி.சர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காவிக் கூட்டத்தின் ஆசி பெற்ற அப்பாராவ் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் அடிமை அப்பாராவ் பதவியேற்றதும், எவ்வித விசரணையும் இன்றி இந்த 5 மாணவர்களையும் விடுதியில் இருந்து வெளியேற்ற கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்ட இம்மாணவர்கள் கடுங்குளிரில் விடுதிக்கு வெளியே பல்கலை வளாகத்திற்குள்ளேயே தொடர்ச்சியாகத் தங்கி இவ்வுத்தரவிற்கு எதிராகத் தமது போராட்டத்தை நடத்திய இம்மாணவர்கள் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி துணைவேந்தருக்கு பலமுறை கடிதம் அனுப்பியிருக்கின்றனர். அவர்களது அனைத்து கடிதங்களையும் நிராகரித்தார் அப்பாராவ்.
கடந்த டிசம்பர் 30 அன்று தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து யூ.ஜி.சி.யின் முன்னாள் தலைவர் ’தொரட்’டிடம், தாங்கள் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட 10 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர் இந்த மாணவர்கள். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் தங்களை விடுதியில் தங்க அனுமதிக்காத அப்பாராவிற்கு ரோகித் எழுதிய கடைசிக் கடிதத்தில் ”தலித் மாணவர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டது பொய்ப்புகார் என்று தெரிந்தும் எங்கள் மீது நடவடிக்கை எடுத்ததை வைத்தே உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி எங்களை படிப்படியாகக் கொல்வதற்குப் பதில், தலித் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அவர்களுக்கு தாம்ப்புக் கயிறோ, 10 கிராம் சோடியம் அசைடு விஷத்தையோ கொடுத்துவிடுங்கள் அல்லது ஒரேடியாக கருணைக் கொலை செய்து விடுங்கள்” என்று எழுதியிருக்கிறார். மத்தியில் ஆளும் பார்ப்பன பாஜக அரசின் நேரடி அழுத்தம், அப்பாராவ் என்ற அடிமையின் வாயிலாக போராளிகளை எந்த அளவிற்கு உளவியல் ரீதியில் பாதித்திருக்கிறது என்பதை இக்கடிதத்தின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடியும்.
கருணைக் கொலை செய்து விடும்படி ரோகித் துணைவேந்தருக்கு எழுதிய கடிதம்
“சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. “
”எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம்”
பார்ப்பன
சாதி வெறி ஓநாய்களின் தொடர்ச்சியான உளவியல் தாக்குதல் ஒரு சமூகப்
போராளியை, ஒரு விஞ்ஞானியை, தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தில் இருந்து
உயர்கல்வி பயில ஒரு பெருங்கனவோடு வந்திருந்த ஒரு மாணவனைக் கொன்றுவிட்டது.
இது இன்று நேற்று நடக்கும் விசயமா ?.. 2000 ஆண்டுகளாக இந்திய சமூகம் பார்த்துப் பார்த்து பழகிப் போன விசயம் தான். அது ஏகலைவன் ஆகட்டும், சம்பூகன் ஆகட்டும், அல்லது நந்தன் ஆகட்டும், பார்ப்பனிய விசத்தால் கொல்லப்பட்ட சூத்திரர்களும், சண்டாளர்களும் – பின்னாளில் பார்ப்பனர் கருணையால் இறைவனடி சேர்ந்தவர்களாக சித்தரிக்கப்பட்டதை வாசித்து புளகாங்கிதமடையும் அடிமைச் சமூகத்தில் தினமும் இது போன்ற ஆயிரக்கணக்கான ஏகலைவன்கள் கொல்லப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்
“எந்த
திசையில் திரும்பினாலும், சாதி என்ற கொடூரம் உங்கள் பாதையில்
குறுக்கிடுகிறது. இந்த` கொடூரத்தை கொல்லாமல், அரசியல் சீர்திருத்தங்களோ,
பொருளாதார சீர்திருத்தங்களோ சாத்தியமில்லை” – அம்பேத்கர் (படம்
இணையத்திலிருந்து)
****
மாணவர்
எழுச்சியைக் கண்டு மிரண்டிருக்கும் அதிகாரவர்க்கம், போலீசு எடுபிடிகளைக்
கொண்டு அவசர அவசரமாக ரோகித் வெமுலாவின் உடலை எரித்துள்ளது
பார்ப்பனிய சனாதன தர்மத்தையும், ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்கும் தங்களது ’சேவை’யையும் எதிர்த்தால், ஒன்று கொன்றொழிக்கப்படுவீர்கள் அல்லது உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தூண்டப் படுவீர்கள் என்பது தான் கோவிந்த் பன்சாரே தொடங்கி ரோஹித் வெமுலா வரை நடத்தப்பட்ட கொலைகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உலகிற்கு உணர்த்த விரும்புப் பாடம்.
மோடி அரசு பதவியேற்ற பின் தொடர்ச்சியாகக் கொண்டு வரும் பல்வேறு மக்கள் விரோத சட்டதிருத்தங்களும், பொருளாதார சீர்திருத்தங்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், எதிர்ப்பே காட்டாத ஒரு மழுங்கிப் போன தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் இந்தக் கும்பலுக்கு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக புரட்சிகரமான அணியினரான மாணவர்களிடையே குறிப்பாக உயர்கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவர்களிடையே தனக்கு எதிரான கருத்துக்கள் தோன்றக் கூடாது என்பதிலும், அப்படித் தோன்றினால் அதன் சுவடு தெரியாமல் அழித்து விட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல். அதன் வெளிப்பாடு தான் “யூ.ஜி.சியை ஆக்கிரமிப்போம்” இயக்க மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், எஃப்.டி.ஐ.ஐ மாணவர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் மீது விதிக்கப்பட்ட தடை, மற்றும் தற்போது அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது உளவியல் ரீதியாக தொடுக்கப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல்கள் போன்றவை.
ஏகலைவன்
2.0-ன் கதை “இந்தத் தடவை ஒன்னோட உயிரே வேண்டும். இந்தா கயிற்றைப் பிடி” –
ஹைதராபாத் பல்கலைக் கழக நிர்வாகம். (படம் இணையத்திலிருந்து)
“வி.ஐ.பி
புகார்” மீது மனுநீதியை நிலைநாட்டிய ஹைதராபாத் பல்கலைக் கழகம் –
“ஏ.பி.வி.பி பசங்களோட வாழ்க்கையை அச்சுறுத்தும்படி பி.எச்.டி ஆய்வு
செய்யும் தலித் நீதானா?” (படம் இணையத்திலிருந்து)
– கதிர் படம் : ஓவியர் முகிலன் vinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக