ஞாயிறு, 17 ஜனவரி, 2016

சுப்ரமணியம் சுவாமி: நடிகர் அமிர்கான் பாகிஸ்தான் உளவாளி ...ஐ எஸ் ஐ யுடன் இணைந்து.......

'பாலிவுட் நடிகர் அமீர் கான், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யுடன் இணைந்து செயல்படுகிறார். அவரது திரைப்படத்தை பிரபலப்படுத்த அனைத்து வேலைகளையும் ஐ.எஸ்.ஐ., செய்கிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பகீர் புகாரை தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், சில மாதங்களுக்கு முன், இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும்; தன் மனைவி, இந்தியாவை விட்டு வெளியேற விரும்புவதாகவும் கூறினார். அவரது இந்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளதாவது: நடிகர் அமீர் கானின் அறிக்கைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யுடன் இணைந்து செயல்படுகிறார். சு.சுவாமியின் மகள் (இப்போ முஸ்லிம் )சுகாசினியின் கணவர் பிள்ளைகள் எல்லாம் முஸ்லிம்கள் .சு.சுவாமியின் மனைவி கிறிஸ்தவர் 
அவர் நடிக்கும் திரைப்படத்தை பிரபலப்படுத்த, அனைத்து வேலைகளையும் ஐ.எஸ்.ஐ., செய்கிறது. இதுதொடர்பாக அவர், இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தை, இதற்கு மேல் விரிவாக பேச விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜ., பொதுச் செயலர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்கியா கூறுகையில், ''இந்து அமைப்புகளின் போராட்டங்களால், ஷாரூக் கான் நடித்த தில்வாலே படம் தோல்வி அடைந்தது. இதே போன்ற போராட்டம், அமீர் கான் நடித்து, விரைவில் வெளியாகவுள்ள, 'டங்கல்' திரைப் படத்துக்கு எதிராகவும் நடக்கும்,'' என்றார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: