செவ்வாய், 19 ஜனவரி, 2016

துபாயில் காணாமல்போன தொழிலதிபர் அய்யப்பன் பிணம் கடலில் கரை ஒதுங்கியது...

இந்தியாவைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் எழுதுபொருள் வர்த்தகத்தை
செய்தபடி, துபாயில் உள்ள முஹைஸ்னா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவியும் இரு குழந்தைகளும் தாய்நாடான சென்று விட்டனர். கடந்த 15-ம் தேதி நடைபெற்ற முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துவந்த அய்யப்பன்(65) கடந்த 13-ம் தேதி திடீரென மாயமானார். கைபேசியை அவர் எடுத்துச் செல்லாததால் அய்யப்பனின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், புஜிரா நகரில் உள்ள டிபா கடற்பகுதியில் கடந்த வியாழக்கிழமை அவரது பிரேதம் மிதப்பதாக தெரியவந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே கடற்கரையோரம் அவரது காரும் நின்றிருந்ததால் இது தற்கொலையா? அல்லது விபத்துசார்ந்த மரணமா?
என்ற இருவேறு கோணத்தில் விசாரித்துவரும் போலீசார், பிரேதப் பரிசோதனை முடிவு கிடைத்த பின்னரே இந்த மரணத்தின் பின்னணி தொடர்பாக தெரியவரும் என கூறுகின்றனர் maalaimalar.com

கருத்துகள் இல்லை: