திங்கள், 24 மார்ச், 2014

கருமம் கொமட்டிக்கிட்டு வருது ! ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை! கோச்சடையான் வெற்றிக்காக / வசூலுக்காக !


இது போன்ற விளம்பர ஸ்டன்ட்டுகளை நிச்சயமாக ரஜனி ஊக்குவிக்கிறார் அவர் ஒரு காரிய கிறுக்கன் ,இது ஒரு சமுக விரோத நடவடிக்கையாகும் MGR முதலாக கொண்டு சினிமாக்காரர்கள் தமிழ்நாட்டை நாசமாக்கி கொண்டே வருகிறார்கள்  
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் புது சாதனைப் படைக்க வேண்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். ரஜினி மூன்று வேடங்களில்
நடித்துள்ள, இந்தியாவின் முதல் நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பப் படம் கோச்சடையான். ரஜினி மகள் சவுந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை, ட்ரைலர் மார்ச் 9-ம் தேதி வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை வரவேற்கவும், வெற்றி பெறச் செய்யவும் ரசிகர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள், இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் திருப்பதி திருமலைக்கு நடைபயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர். கோச்சடையான் வசூலில் புதிய சாதனை படைக்க ரஜினி ரசிகர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரை! ஏப்ரல் 2-ம் தேதி சோளிங்கர் நகரிலிருந்து ஏராளமான ரசிகர்கள் குழுவாக இந்த நடைபயணத்தைத் தொடங்குகிறார்கள். வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றப் பொருளாளரும், சோளிங்கர் ரஜினி மன்றத் தலைவருமான என் ரவி தலைமையில் இந்த பாதயாத்திரை தொடங்குகிறது.
tamil.oneindia.in 

கருத்துகள் இல்லை: