சனி, 1 பிப்ரவரி, 2014

MGR., சோபன்பாபு, சசிகலா பற்றி ஜெயலலிதா கூறியதை நாங்கள் பேச அனுமதிப்பார்களா? மு.க.ஸ்டாலின் கேள்வி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். சனிக்கிழமை மற்றும் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக பொருளாளரும், திமுக சட்டமன்ற கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் திமுக தலைவர் கலைஞர் பற்றி ஆளும் கட்சியினர் அவதூறாக பேசுவதற்கு அனுமதி அளித்ததோடு, அவை குறிப்பிலும் இடம்பெற்றிருப்பதாக கூறிய அவர், கலைஞரை பற்றிய அவதூறு கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கும்படி துரைமுருகன் பேசியதை ஏற்காததோடு, அவரது பேச்சை அவை குறிப்பில் சேர்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
/> சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர்,  அதிமுக உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய பேச்சை அவை குறிப்பிலே பதிவு செய்யக் கூடிய சூழ்நிலையில் சட்டமன்றம் நடக்கும் என்று சொன்னால், இன்றைக்கு முதல் அமைச்சராக இருக்கக் கூடிய அம்மையார் ஜெயலலிதா அவர்களுடைய உடன்பிறவா சகோதரியாக இருக்கக் கூடிய சசிகலா அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தார்களையும் பலமுறை கட்சியை விட்டு நீக்கி, அவர்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை, என் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய சூழ்நிலையில் அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கிறது என்று முதலமைச்சராக இருக்கக் கூடிய ஜெயலலிதா அவர்களே பட்டவர்த்தனமாக, பகிரங்கமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். முதல்ல ஸ்டாலின் அவர்களே உங்கள் பேச்சில் இலக்கணப்பிழை தாராளமாக இருக்கிறது , அதென்ன இருக்கக்கூடிய இருக்கக்கூடிய ? முதலமைச்சராக இருக்கும் என்று சொல்லவேண்டிய இடங்களில் எல்லாம் இருக்க கூடிய ? சகோதரியாக இருக்க கூடிய ! யாராவது ஸ்டாலினுக்கு அடிப்படை தமிழ் இலக்கணத்தை சொல்லி கொடுங்களேன் 
இப்போது மீண்டும் சசிகலா அவர்களை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதுபற்றி அவையிலே பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தருவாரா?
அதேபோல் முதல் அமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைக்கு ஒரு பேட்டி தருகிறபோது, நடிகர் சோபன்பாபுவோடு 7 ஆண்டு காலம் கோயிங் ஸ்டெடி நடத்தியிருக்கிறேன் என்று அவரே பட்டவர்த்தனமாக பேட்டி தந்திருக்கிறார். இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பதற்கு அல்லது நாங்கள் அதை பதிவு செய்வதற்கு சபாநாயகர் அனுமதி தருவாரா?

அதேபோல் முதல் அமைச்சராக இருந்த மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர். அவர்கள், செயல்பட முடியாத முதல் அமைச்சராக இருக்கிறார் என்று அன்றைக்கு பிரதமராக இருந்த திரு. ராஜீவ்காந்தி அவர்களுக்கு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கடிதம் எழுதி, அது பத்திரிகையில் ஆதாரங்களோடு வெளியிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பதற்கு அல்லது நாங்கள் அதை பதவு செய்வதற்கு சபாநாயகர் அனுமதி தருவாரா?
இதைவிட கொடுமை இன்னொன்று, எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்த நேரத்தில் அம்மையார் ஜானகி அவர்கள், மோரிலே விஷத்தை கலந்து எம்.ஜி.ஆர். அவர்களுக்கு கொடுத்திருக்கிறார் என்று ஜெயலலிதா அவர்களே சென்னை தியாகராயநகர் பனகல் பார்க் பகுதி பொதுக்கூட்டத்தில் பேசி அது பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. எனவே இதுகுறித்து விவாதிக்க அல்லது அவையிலே பதிவு செய்ய சபாநாயகர் இடம் தருவாரா?
ஆகவே இவைற்றைப்பற்றியெல்லாம் நாங்கள் பேசுவதற்கு, அவையிலே முற்பட்ட நேரத்தில், சபாநாயகர் திமுக உறுப்பினர்களை எல்லாம் அவையில் இருந்து வெளியேற்றியது மட்டுமல்ல, எங்கள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கரை இந்த கூட்டத்தொடர் முழுவதும் வரக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். எனவே இதைக் கண்டிக்கக் கூடிய வகையில் இந்தக் கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கிறது என்றார்.  
nakkheeran.in

கருத்துகள் இல்லை: