
இதற்காக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடமும் ஒப்புதலைப் பெற்று
தேமுதிகவுடன் பேச்சு நடத்தி வந்தார் வாசன். ஆனால் திமுகவை பகைத்துக் கொண்டு
ராஜ்யசபா தேர்தலில் ஜி.கே.வாசன் நிற்க கூடாது என்பதில் முனைப்பு
காட்டினாராம் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
லோக்சபா தேர்தலில் எப்படியும் திமுக காங்கிரஸுடன்
வந்துவிடும்..அதனால்தான் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு
இடையூறாக இருக்க கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தில் ப.சிதம்பரம்
வாதிட்டாராம்..
ஆனால் இது ப.சிதம்பரம் நமக்கு பறிக்கும் குழிதான் என்று உணர்ந்து
கொண்ட ஜி.கே.வாசனோ, என்னை ராஜ்யசபா வேட்பாளராக அறிவியுங்கள்.. லோக்சபா
தேர்தலில் தேமுதிகவை நான் கூட்டணிக்கு கொண்டு வருகிறேன் என்று
மல்லுக்கட்டினாராம்.
ஆனால் கடைசியில் ப.சிதம்பரத்தின் பேச்சு தான் வென்றிருக்கிறது. நேற்று
பகல் வரை காங்கிரஸ் மேலிடத்துக்கு சிக்னல் காத்திருந்து கடைசியில் எதுவும்
நடைபெறாமல் போக விரக்தியடைந்து போனார் ஜி.கே.வாசன்.
இப்படி தொடர்ந்தும் தமக்கு குழிபறிப்புகள் தொடர்ந்தால் லோக்சபா
தேர்தலின் போது தனிக் கட்சி தொடங்கிவிடுவதுதான் என்ற முடிவில் உறுதியாக
இருக்கிறாராம் ஜி.கே. வாசன்.
உதயமாகிறது த.மா.கா?
கடந்த ஓராண்டுகாலமாகவே ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் மீண்டும் தமிழ் மாநில
காங்கிரஸ் கட்சியை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால்
வாசன்தான் மறுத்து வந்தார். இப்போது ஜி.கே.வாசனும் தனிக்கட்சி ரூட்டுக்கு
தயாராகிக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக