தகவல் அறிந்து கார்களில் விரைந்து வந்த போலீசார் மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். அப்போது சிலர், போலீஸ் கார்களை தீயிட்டு கொளுத்தினர். இதனால் பதற்றம் அதிகரித்தது. இதுகுறித்து சிங்கப்பூர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் ஹெம்ஸ்ஷைர் சாலைகளில் இரவு 9.23 மணிக்கு திடீரென மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
சட்ட திட்டங்கள் கடுமையாக அமல்படுத்தபடும், மக்கள் ஒழுங்குமுறையாக நடந்து கொள்ளும் சிங்கப்பூரில் திடீர் மோதலில் போலீசார் வாகனங்கள் எரிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக