சனி, 3 செப்டம்பர், 2011

ஸ்ரீ ல சு கட்சியின் 60வது தேசிய மாநாடு!இணைந்து நின்று நாம் முன்னேறுவோம்



படம்: சுதத்மலவீர
இணைந்து நின்று நாம் முன்னேறுவோம்; சுதந்திரக்கட்சி உலகில் எந்தவொரு கட்சிக்கும் சளைத்ததல்ல – ஜனாதிபதி நாட்டு மக்களின் ஆதரவு இருக்கும்வரை எத்தகைய சக்திகளாலும் எம்மைத் தோற்கடிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த 60 வருடகால வரலாற்றைப் பாடமாகக் கொண்டு எதிர்வரும் 60 வருடத்திலும் வெற்றிகரமாக முன்செல்லும் என தெரிவித்த ஜனாதிபதி, சகல அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சகல இன, மத மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் கட்சியாக எதிர்காலத்திலும் செயற்படும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு வெளிப்படையான கட்சி. எச் சந்தர்ப்பத்திலும் நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுக் காத மக்கள் கட்சியாக தொடர்ந்தும் பலம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: