சனி, 3 செப்டம்பர், 2011

கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்வதே எமது கொள்கை

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா லக்பிம ஆங்கிலப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அதிகாரப் பகிர்வு, உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல் என்பன பற்றி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகங்களுக்கு தமிழ் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்வதற்காக அந்தப் பேட்டியின் மொழியாக்கம் இங்கு தரப்படுகிறது.
ஊடகங்களில் இருந்தே ஆரம்பிப்போம். யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் பயத்துடனேயே வாழ்கிறார்கள். உங்கள் வழியில் குறுக்கிடும் எவரையும் விட்டுவைக்காத ஒரு பயங்கரமான ஆள் நீங்கள் என்று யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் பலர் கருதுகிறார்கள்…
இந்தக் குற்றச்சாட்டுக்களில் ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை. அவை உண்மையாக இருந்தால் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு பத்திரிகையும் இருக்கப்போவதில்லை. புலிகள் இருந்தபோது அவர்கள் ஊடகங்களை ஒடுக்கினார்கள். ஆனால், நாங்கள் அதை எப்போதும் செய்ததில்லை. இனிமேலும் செய்யமாட்டோம்.

கருத்துகள் இல்லை: