வியாழன், 1 செப்டம்பர், 2011

மரக்கறி பழங்கள் பரிமாற்றத்துக்கு பிளாஸ்டிக் கூடை அவசியம்

மரக்கறி மற்றும் பழங்களை ஓரிடத்திலிருத்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் போது பிளாஸ்டிக் பாத்திரங்கள் அல்லது கூடைகளில் வைத்தே கொண்டு செல்லப்படவேண்டும் என்பது இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மரக்கறி மற்றும் பழங்களை சாக்குகளில் எடுத்துச் செல்லும் போது 30 முதல் 35 சதவீதம் சேதமடைவதாகவும் இதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்கவே பிளாஸ்டிக் பாத்திரங்களில் மரக்கறி மற்றும் பழங்களை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: