புதன், 31 ஆகஸ்ட், 2011

K.N.நேருவை சந்திக்க அழகிரிக்கு அனுமதி மறுப்பு


கடலூர் : நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் நேரு, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி ஆகியோரை சந்திக்க மத்திய அமைச்சர்கள் அழகிரி, நெப்போலியன் ஆகியோர் நேற்று காலை கடலூர் வந்தனர். மத்திய அமைச்சர்களுடன் மதுரை துணை மேயர் மன்னனும் உடன் வந்திருந்தார்.

பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த மத்திய அமைச்சர் அழகிரி நிருபர்களிடம் கூறியது: முன்னாள் அமைச்சர் நேருவை சந்திக்க எனக்கு அனுமதி அளிக்கவில்லை. மதுரை 3வது வட்ட செயலாளர் ஓச்சுபாலுவை மட்டுமே சந்தித்தேன். திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதுதான் அதிமுகவின் 100 நாள், 150 நாள் சாதனையாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தோடு ஜெயலலிதா இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது பொய் வழக்குகளை திமுக சந்தித்து வருகிறது. மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். இவ்வாறு அழகிரி கூறினார்.

கருத்துகள் இல்லை: