வியாழன், 16 ஜூன், 2011

திருமாவளவன்: EVKS இளங்கோவன் வார்த்தையை அளந்து பேச வேண்டும்

வரம்பு மீறி அளவுக்கு அதிமாக பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் வார்த்தையை அநளந்து பேச வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டித்துள்ளார்.

சிதம்பரம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக குறித்தும், திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் அளவுக்கு அதிகமாகப் பேசுகிறார். அவர் வார்த்தையை அளந்து பேச வேண்டும்.

திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டணி தொடர்கிறது. வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றார் அவர்.

திமுகவின் ஊழலால்தான் சட்டசபைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று கூறிய இளங்கோவன், கருணாநிதி முதலில் தனது மகளுக்கு அறிவுரை கூற வேண்டும். அவரது கூடா நட்பால்தான் இன்று கனிமொழி சிறையில் இருக்கிறார் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
English summary
VCK leader Thirumavalavan has condemned Former Minister EVKS Elangovan for blasting DMK and its leader Karunanidhi. He slammed Elangovan that, He is talking too much. He should stop his nonsesne speech.

கருத்துகள் இல்லை: