சனி, 18 ஜூன், 2011

விஜயகாந்த் வளர்வதைவிட சரத்குமாரை வளரவிடுவோம்,admk

சட்டமன்ற தேர்தல் சமயத்தில், கூட்டணி விஷயத்தில் தே.மு.தி.க இழுத்தடிச்சதுக்குப் பதிலடியா இப்ப ஜெ சைடில் இழுத்தடிக்கிறாங்களோன்னு விஜயகாந்த் வட்டாரம் நினைக்குது. ஜெ.வோ விஜயகாந்த் வளர்வதைவிட, சரத்குமாரை தன் கட்சி பக்கம் வச்சிக்கிட்டு அவரை தட்டிக்கொடுக்கலாம்னு நினைக் கிறாராம். புதிய சபாநாயகரை வாழ்த்தி ஒவ்வொரு கட்சியும் பேசியதே, அப்ப சரத்குமாரையும் பேச அனுமதிக்கணும்னு சட்டப்பேரவைச் செயலாளர்கிட்டே ஜெ. சொல்லியிருக்கிறார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு சரத்குமார் தலைவரா இருந்தாலும், அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்னு ஜெயிச்சதால அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகத்தான் கணக்கில் வருவார். அ.தி.மு.க. சார்பில் ஜெ.தான் சபாநாயகரை வாழ்த்திப் பேச வேண் டியவர், அதனால அதே கட்சி எம்.எல். ஏ.வான இன்னொருவரை பேச அனு மதிப்பது மரபில்லைன்னு பேரவைச் செயலாளர் சொன்னபோதும், சரத்துக் கும் பேச அனுமதி கொடுக்கணும்னு ஜெ. சொல்லிட்டாராம். விஜயகாந்த் துக்கு அப்பாயிண்ட்மெண்ட் லேட்டா வதையும் சரத்துக்கு வலிய வாய்ப்பு தரப்படுவதையும் அ.தி.மு.க. வட்டா ரத்தில் அர்த்தத்தோடு பேசிக்கிறாங்க.''

கருத்துகள் இல்லை: