வியாழன், 16 ஜூன், 2011

வக்கீல் சதீஷ்குமாரின் கொலைக்கு கண்டனம்.வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: வக்கீல் சதீஷ்குமாரின் கொலைக்கு கண்டனம்

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் சங்கர சுப்புவின் மகனும், பயிற்சி வக்கீலுமான சதீஷ் குமதார் கடந்த 7ஆம் தேதி திடீர் என்று காணாமல் போனார். அண்ணாநகர் (மேற்கு) தங்கம் காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்களில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
கடந்த 13.06.2011 அன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் ஐசிஎப் ஏரி பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது. பிரேத பிரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வக்கீல் சதீஷ்குமாரின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் இன்று ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் நடந்த அவசர பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் சதீஷ் குமாரின் கொலைக்கு சங்கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நேர்மையாக விரைவாக நடத்த கேட்டும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கேட்டும், வக்கீல்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் நீதிமன்ற புறக்கணிப்பால் ஐகோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டன. இந்த கோர்ட்டு புறக்கணிப்பில் பெண் வக்கீல்கள் சங்கமும் பங்கேற்றது.

கருத்துகள் இல்லை: