புதன், 15 ஜூன், 2011

மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்!

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதைகள் அமைப்பதற்கான வேளைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கடந்த காலத்தில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது அப்பாதைகள் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.

இதேவேளை ரயில் பாதைகளுக்கான தண்டவாலங்களும் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் தீவுப்பகுதிக்குள் முதல் கட்டமாக மன்னார் தோட்டவெளி கிராமத்தில் பயணிகள் தரிப்பிடம் மற்றும் ரயில் தரிப்பிடம் ஆகியவை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கில் ரயில் சேவையினை மேற்கொள்ளுவதற்காக போக்குவரத்து அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: