புதன், 17 நவம்பர், 2010

நஞ்சருந்திய நான்கு மாணவிகள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி : யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்.வலிகாமம் கல்வி வலய பாடசாலையொன்றைச் சேர்ந்த நான்கு மாணவிகள் நச்சுத்தன்மை கொண்ட பதார்த்தத்தை உட்கொண்டதால் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையைச் சேர்ந்த க.பொ.த சாதாரண மாணவிகளை நேற்று முன்தினம் சம்பவம் ஒன்று தொடர்பாக அதிபர் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து நேற்று பாடசாலைக்கு வரும்போது தம்முடன் எடுத்து வந்த மென் பானத்துடன் பாடசாலையில் இருந்த சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை கொண்ட திரவத்தைக் கலந்து உட்கொண்டுள்ளனர். இதனால் மயக்கமடைந்தனர்.
இதனைக் கண்ட ஏனைய மாணவர்கள் அதிபர், ஆசிரியர் உதவியுடன் சங்கானை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இச் சம்பவம் குறித்து யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை: