சனி, 20 நவம்பர், 2010

நாடாளுமன்றத்தில் அமளி,ஸ்பெக்ட்ரம்-எதியூரப்பா ஊழல்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் பெரும் அமளி நிலவியது. இதையடுத்து வரும் திங்கள்கிழமை வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைக் கிளப்பி பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவைகளை நடத்த முடியவில்லை.

இந் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாடாளுமன்றக் கூட்டம் சுமூகமாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் புதிய நிபந்தனையை விதித்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதை மத்திய அரசு ஏற்க மறுப்பதால் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.

இன்றும் இரு அவைகளிலும் 6வது நாளாக அமளி தொடர்ந்தது. மக்களவை இன்று காலை கூடியதும் பாஜக சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கூட்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பதிலடியாக நில ஊழலில் ஈடுபட்ட கர்நாடக பாஜக முதல்வரை நீ்க்க வேண்டும் என்று கோரினர். எதியூரப்பாவின் போஸ்டர்களை உயர்த்தியபடி கோஷமிட்டனர்.

அவர்களுடன் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் நிறுவனருமான தேவே கெளடாவும் சேர்ந்து கொண்டார். அவரும் எதியூரப்பாவின் போஸ்டரை பிடித்தப்படி நின்று கோஷமிட்டார்.

இதனால் பெரும் அமளி நிலவியது. சபாநாயகர் மீராகுமார் காங்கிரஸ் எம்.பிக்களையும், பாஜக எம்.பிக்களையும் அமைதியாக இருக்குமாறு கோரினார். ஆனால் எம்.பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டப்படி இருந்தனர். இதனால் அவையை பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக மீராகுமார் அறிவித்தார்.

12 மணிக்கு சபை கூடியதும், மீண்டும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அமளி ஏற்பட்டது. பாஜக, காங்கிரஸ் எம்பிக்கள் பரஸ்பரம் ஸ்பெக்ட்ரம் ஊழல், எதியூரப்பா அரசின் நில மோசடி குறித்து குரல் எழுப்பியதால் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவையை திங்கள்கிழமை வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதே போல ராஜ்யசபாவிலும் பாஜக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களிடையே போட்டி கோஷத்தால் பெரும் அமளி நிலவியது.

பாஜக, அதிமுக எம்.பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று கூட்டக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷமிட்டதால் அவையை துணை ஜனாதிபதியும் சபாநாயகருமான ஹமீத் அன்சாரி பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

ஆனால், அவை மீண்டும் கூடியதும் பாஜக, அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பதிவு செய்தது: 20 Nov 2010 6:49 am
எவண்டா இந்த மால்மதி ? டேய் மரியாதைய இதோட நிறுத்திக்க இல்ல மவனே உனக்கு ...... காங்கிரஸ் ஆட்சி அது இதுன்னு ஒரே காமெடி தான் பண்ணுற போ , நீ எந்த ஊரு தம்பி கீழ் பாக்கமா ?

பதிவு செய்தவர்: bsnl
பதிவு செய்தது: 20 Nov 2010 4:46 am
BSNL cellகஸ்டமர் கேர் தொடர்பு கொண்டு பேசி விட்டாலோ,தகவல் தெரிந்து கொண்டு விட்டாலோ, ,தங்களது குறைகளை சரிசெய்து விட்டாலோ,GPRSBALANCEதெரிந்துகொண்டு விட்டாலோ1000000000000000000000000பரிசு
பதிவு செய்தவர்: மால்மதி
பதிவு செய்தது: 20 Nov 2010 1:22 am
தட்ஸ்தமிழ் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் ,எப்படியாவது தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவருவதுதான் என் லட்சியம்.இது பொறுக்காத எலிகள் என் பெயரை பலவாறு திரித்து எழுதுகிறார்கள்,ஆகவே என் கருத்துக்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள்
பதிவு செய்தவர்: மால்மதி
பதிவு செய்தது: 20 Nov 2010 3:05 am
(முன்னாள் அரிச்சந்திரன்): தட்ஸ் தமிழ் தயவு செய்து என்னுடைய பெயரை நன் மட்டுமே பயன்படுத்தும் வகையில் செய்ய முடியாதா? மேலே உள்ள கருத்து என்னுடையதே அல்ல .. என்னுடைய பெயர் களங்கப் படுகிறதே !!!
பதிவு செய்தவர்: தம்பி
பதிவு செய்தது: 20 Nov 2010 6:46 am
சும்மா காமடி பண்ணாத ராசா

பதிவு செய்தவர்: நிர்மல் 1
பதிவு செய்தது: 19 Nov 2010 11:19 pm
மக்களுக்கு விளக்கவும் ஒரு வீட்டை விற்கிறோம்.2001 ரூபாய் 10 லட்சம். .அத்த இடம் சென்னை திநகர் போல நல்ல வளர்ச்சி அடையும் இடம். சந்தை மதிப்பு 2001 ரூபாய் 10 லட்சம் வாங்கியது இன்று ரூபாய் நான்கு கோடி .நீ அதை எப்படி விற்பாய் .எல்லா தரகர் இடம் கூறி விளம்பரம் கொடுத்து .நாலு கோடி மேல மிக அதிகம் யாரு கேட்கிறார்களோ அவர்களுக்கு நீ விற்ப அப்படி தானே நீ புத்தி சாலிதானே பள்ளி கூடம் படிகவிட்டாலும்
பதிவு செய்தவர்: நிர்மல் 2
பதிவு செய்தது: 19 Nov 2010 11:20 pm
ஆனா சோனியா கருணாந்தி அந்த வீட்ட எப்படி வீற்று உள்ளனர் என்றால் ரூபாய் 10 லட்சம் விற்று உள்ளனர் .ராஜா என்ற பொம்மை மூலம். அப்படி விற்பனை செய்ததனால் சோனியா கருணாந்தி என்ன லாபம் .மிக குறைத்த விலை கொடுத்து வாங்கியவன் ரூபாய் 2 கோடி சோனியா கருணாநதி கொடுத்து உள்ளான் ஆமா நாலு கோடி சொத்து அவனுக்கு 10 லட்சம் கிடைத்து இருக்குல.
பதிவு செய்தவர்: நிறமல் 3
பதிவு செய்தது: 19 Nov 2010 11:21 pm
அதாவது...
பதிவு செய்தவர்: பிரமல் 3
பதிவு செய்தது: 19 Nov 2010 11:22 pm
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் சந்தை விலையாக ஜூன்2001-ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை நிர்ணயம் செய்வதோடு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001-ம் ஆண்டில் 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால் 2007 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால் 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்ததால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தனியார் நிறுவனங்கள் லாபம் அரசு நஷ்டம்

பதிவு செய்தவர்: நிஷாந்தன்
பதிவு செய்தது: 19 Nov 2010 10:50 pm
கிட்டதட்ட இரண்டு லட்சம் கோடி காணாமல் போயுள்ளதாம் ,இந்த தொகை நாட்டின் ஒருவருட வருமானத்தின் நான்கில் ஒரு பங்கு,உண்மையில் ஊழல் நடந்திருந்தால் தொலைபேசி கட்டணம் உயர்ந்திருக்க வேண்டும்,நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் ,இந்த ஊழல் விஷயம் சுப்பிரமணிய சுவாமிக்கு தெரியும் போது கட்டாயம் அமரிக்காவுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
பதிவு செய்தவர்: நிஷாந்தன்
பதிவு செய்தது: 19 Nov 2010 10:50 pm
அமரிக்காவுக்கு தெரிந்து இருந்தால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஒபாமா இந்தியாவுக்கு வந்து அமரிக்காவில் வேலை வாய்ப்பை உருவாக்கப் பாடுபடுகிறார் ? ஆக எதிர்கட்சிகள் கூவுவதைப்போல எந்த ஊழலும் நடக்கவில்லை ,அல்லது நடந்த ஊழல் மிகச் சிறியது ,அதுவும் இல்லை என்றால் இந்தப் பெரிய ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எதோ ஒருவகையில் சாமானிய மக்களுக்கு போய் சேர்ந்துள்ளது ,
பதிவு செய்தவர்: பிரவீனா
பதிவு செய்தது: 19 Nov 2010 10:51 pm
அதாவது நாட்டில் பொருளாதாரம் நன்றாக இருந்தால் தொலைபேசிக் கட்டணம் உயராமல் இருந்தால் ஊழல் நடந்திருக்காது என்று அறிவு மிக்க பொருளாதரா மேதை நிஷாந்தன் அடித்து சொல்கிறார். Friends try to understand. நானும் நிஷாந்தனும் கலைஞர் மற்றும் ராஜாவின் மலத்தை விரும்பி உண்கிறோம். அதனால் எங்களுக்கு அறிவு வளர்ந்து ஒபாமா இந்தியா வந்ததால் இந்தியாவில் ஊழலே இல்லை என்ற உண்மை தெரிகிறது. நீங்களும் சற்று ராஜாவின் மலத்தை ருசித்தீர்கள் என்றால் உங்களுக்கும் இந்த எளிமையான விளக்கம் விளங்கும்.
பதிவு செய்தவர்: RAS
பதிவு செய்தது: 19 Nov 2010 11:05 pm
நிசாந்தன் ஆர் யு இந்தியன் ????????

பதிவு செய்தவர்: அரி சந்திரன்
பதிவு செய்தது: 19 Nov 2010 10:08 pm
நான் எப்போதும் அரி சந்திரன் தான். மால் மதி என்பவன் போலி. அவனை சைலேந்திர பாபுவிடம் சொல்லி என்கவுண்டர் பண்ணனும். பிறருக்கு பயந்து நான் என்பேரை மாத்த நான் எலி அல்ல. அரி சந்திரன் எப்போதும் அரி சந்திரன் தான். டாய் மால் மதி கைல மாட்டுன கிமா தான்.
பதிவு செய்தவர்: கல்லாப்பெட்டி சிங்காரம்
பதிவு செய்தது: 19 Nov 2010 11:18 pm
டேய் அரி சந்திரன்,மால் மதி அப்பிடிங்கிற பேர தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வைச்சுட்டு நீ செத்து போய்டு ..அப்பத்தான் வருங்கால சந்ததியினர் அதை படிச்சு தெரிஞ்சுக்குவாங்க..பரதேசி ஏதோ பேர்ல கமெண்ட் எழுதுனமா இல்ல படிச்சோமான்னு மூடிட்டு போவானா? அதை விட்டு ஸ்கூல் பையன் மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணுற...
பதிவு செய்தவர்: மால்மதி
பதிவு செய்தது: 20 Nov 2010 3:05 am
(முன்னாள் அரிச்சந்திரன்): தட்ஸ் தமிழ் தயவு செய்து என்னுடைய பெயரை நன் மட்டுமே பயன்படுத்தும் வகையில் செய்ய முடியாதா? மேலே உள்ள கருத்து என்னுடையதே அல்ல .. என்னுடைய பெயர் களங்கப் படுகிறதே !!!

பதிவு செய்தவர்: bsnl
பதிவு செய்தது: 19 Nov 2010 8:32 pm
BSNL cellகஸ்டமர் கேர் தொடர்பு கொண்டு பேசி விட்டாலோ,தகவல் தெரிந்து கொண்டு விட்டாலோ, ,தங்களது குறைகளை சரிசெய்து விட்டாலோ,GPRSBALANCEதெரிந்துகொண்டு விட்டாலோ1000000000000000000000000பரிசு

பதிவு செய்தவர்: nachikutti
பதிவு செய்தது: 19 Nov 2010 8:26 pm
ஏண்டி அனுசுயா உன்னை தூக்கிப்போட்டு மிதிசிப்புடுவேன்.

பதிவு செய்தவர்: வண்டு murugan
பதிவு செய்தது: 19 Nov 2010 7:51 pm
PM's Secretary: "அய்யா..சிங்கு அய்யா, என்னங்கய்யா ஒங்களயும் ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமா விசாரிக்க சிபிஐ-லருந்து ஆளுங்க வந்திருக்காய்ங்க?.." ... பிரதமர்: "அட.. அத ஏன்யா கேக்குற?.. இந்த பதவி போன மந்திரி ராசாகிட்ட நீதிபதி கேட்டாரு."ஸ்பெகட்ரம ஊழல்ல சம்பாரிச்ச பணத்தை எங்க வெச்சிருக்கீக?"ன்னு கேட்டாரு.. (தொடரும் )
பதிவு செய்தவர்: வண்டு murugan
பதிவு செய்தது: 19 Nov 2010 7:53 pm
அட.. அதுக்கு இந்தாளு ராசா என்ன சொன்னாரு, தெரியுமா?.. அய்யா.. நீதிபதி அவர்களே!.. நான் சம்பாரிச்ச அம்புட்டுப் பணத்தையும் இந்த சிங்கு அய்யாகிட்டதான் கொடுத்து வெச்சிருக்கேன்" அப்புடின்னு சொல்லிட்டாரு.. (தொடரும் )
பதிவு செய்தவர்: வண்டு murugan
பதிவு செய்தது: 19 Nov 2010 7:56 pm
அட.. நாங்க அரசியலுக்காவ எத்தனையோ பொய்களைச் சொல்லிருக்கோம்.. ஆனா இந்தாளு ராசா, ஒரே ஒரு வார்த்தையால என்னையும் இப்ப கோர்டுக்கு இழுத்துட்டாரய்யா.. கோர்ட்டுக்கு இழுத்துட்டாரு.. (தொடரும் )
பதிவு செய்தவர்: வண்டு murugan
பதிவு செய்தது: 19 Nov 2010 7:57 pm
இப்ப நீதிபதி என்ன சொல்லிட்டாரு தெரியுமா?.. "அட.. நீங்க எல்லாருமே ச்சேர்ந்துதான் கொள்ளையடிச்சிருக்கீகளா.. அப்ப உங்க எல்லாரையுமே சிபிஐ விசாரிக்கோணும்-ன்னு ஜட்சமெண்ட் எழுதிட்டாருய்யா.. ஜட்ஜ்மெண்ட் எழுதிட்டாரு"..

பதிவு செய்தவர்: Anushuya
பதிவு செய்தது: 19 Nov 2010 6:00 pm
Mummy will return last mummy return killed Maran, this time all the MK family. Come May and take MK family to deep hell fire.

கருத்துகள் இல்லை: