புதன், 25 ஆகஸ்ட், 2010

வட்டக்கச்சியில் கணவன் தாக்கியதனால் விரக்தியடைந்த மனைவி தற்கொலை

மது போதையில் வீடு வந்த கணவன்  உணவு தயாரிக்க தாமதமாகியதால் மனைவியை அடித்து துன்புறுத்தியதையடுத்து ஆத்திரமும் விரக்தியுற்ற ஒரு பிள்ளையின் தாயான இளம் மனைவி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்பரிதாப சம்பவம் கிளிநொச்சி  பொலிஸ்  பிரிவிலுள்ள  வட்டகச்சி   மாயவனூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.  கடந்த சனிக்கிழமையன்று மாலை இ டம்பெற்ற  இச்சம்பவத்தில்  ஜெகதீபன்  தயந்தினி (வயது 21) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்.

இவரது மரண விசாரணையை கிளிநொச்சி திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் கே. திருலோகமூர்த்தி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில்  வைத்து மேற்கொண்டார்.  சடல பரிசோதனையை வைத்திய அதிகாரி டாக்டர் இரத்தினம் சிவானந்தன் மேற்கொண்டார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் சுகததாச சாட்சியத்தை ஆஜர் செய்து நெறிப்படுத்தினார்.  மரணமான பெண்ணின் கணவர் பாலசுப்பிரமணியம் ஜெகதீபன் (வயது 26)  தாயார்  திருமதி தேவராசா செல்வராணி (வயது  மாமியான பாலசுப்பிரமணியம் பாலேஸ்வ ரி(வயது 59) ஆகியோர் மரண விசாரணையின்போது சாட்சியமளித்தனர்.
விசாரணை முடிவில் தற்கொலை மரணம் என மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கினார்

கருத்துகள் இல்லை: