வியாழன், 26 ஆகஸ்ட், 2010

தயா மற்றும் ஜோர்ஜ் மாஸ்ட்டரின் விசாரணைகள் நிறைவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ட்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்ட்டர் தொடர்பான விசாரணைகள் இன்றுடன் நிறை வடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதுடன் இவர்கள் இருவர் தொடர்பாகவும் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதியிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆலோசனை கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி நடைபெறுமெனவும் கொழும்பு மெஜிஸ்ரேட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: