வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மாணவன் மரணத்தில் சந்தேகம்: பெற்றோர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை - திருச்சி ரோட்டில் உள்ள சுதர்சன் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கரம்பங்குடியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்ற மாணவர் 2ம் வருட பொறியியல் படிப்பு படித்து வருகிறார். சாகுல் ஹமீது வழக்கம் போல் நேற்று கல்லூரிக்கு வந்துவிட்டு, வீட்டுக்குச் செல்லும் போது, தலைக்கு பின்னால் காயம் ஏற்பட்டிருந்தது.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சக மாணவன், சாகுல் ஹமீது பெற்றோருக்கு இந்த தகவலை தெரிவித்தார். இதையடுத்து சாகுல் ஹமீதை பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி சாகுல் ஹமீது இறந்தான். இந்த மாணவனுக்கு எப்படி காயம் ஏற்பட்டது. எப்படி இறந்தான் என்று தெரியாததால், சாகுல் ஹமீது உறவினர்கள் கரம்பங்குடியில் சுமார் 3 மணி நேரத்துக்கம் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாகுல் ஹமீது உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: