வியாழன், 26 ஆகஸ்ட், 2010

த்ரிஷா, சார்மி, மதுஷாலினி,காம்னா என்று நடிகைகளின் லிஸ்ட் நீளுகிறது.இந்த நடிகைகள்

டென்ஷனில் இருக்கிறது திரையுலகம்.இன்னும் யார் யார் பெயர்கள் எல்லாம் வெளிவரப் போகிறதோ என்று பயந்து கிடக்கிறது.
காரணம்,ஹைதராபாத்தில் பிடிபட்ட போதை ஆசாமிகள்.தெலுங்கில் பிரபல நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் இருவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட,அவர்களுடன் நைஜீரிய ஆசாமி ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது லேப்டாப்பில் பல நடிகர், நடிகைகளின், வி.ஐ.பி. மகன்களின் தொலைபேசி எண்கள். த்ரிஷா, சார்மி, மதுஷாலினி,காம்னா என்று நடிகைகளின் லிஸ்ட் நீளுகிறது.இந்த நடிகைகள் கடுமையாக இதை மறுத்திருக்கிறார்கள்.
‘‘சமீப காலமாகவே திரையுலகில் ராத்திரி பார்ட்டிகளும் ரகசிய விருந்துகளும் அதிகமாகிவிட்டன. இந்த போதை பயங்கரத்துக்கு இதுதான் அடிப்படை காரணம்’’ என்கிறார் திரையுலக மூத்த இயக்குநர் ஒருவர்.
சென்னையில் இந்த பார்ட்டிகளை வைத்தால் தெரிந்துவிடும் என்பதால், ஹைதராபாத்தில் வைக்கிறார்களாம்.வில்லியாகவும் நாயகியாகவும் கலக்கிய ஒருமூத்த நடிகை ஹைதராபாத்தில் கொடுக்கும் பார்ட்டிகளுக்குச் செல்ல இளைய தலைமுறை நடிகைகளிடையே போட்டி நடக்குமாம். காரணம், அங்கு நடக்கும் ‘விசேஷ’ உபசரிப்புதான் என்கிறார்கள். இந்த பார்ட்டிகளில் மதுவைத் தாண்டியும் போதை இருக்குமாம்.
சமீபத்தில் மின்னல்போல் வந்த நடிகை கொடுத்த இரவு விருந்தில் ‘உற்சாகம்’ கரைபுரண்டு ஓடியதாம். இதில் சினிமா உலகத்தினர் சிலர்தான் கலந்துகொண்டார்களாம்.மற்றபடி முழுவதும் நடிகையின் ஆண் நண்பர்கள்தானாம்.இத்தனை பேரையும் எப்படி சமாளிக்கிறார் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
ஓட்டல்களில் நடக்கும் பார்ட்டிகளைவிட பண்ணை வீடுகளில் நடக்கும் பார்ட்டிகள்தான் திரையுலகின் இளைய தலைமுறையினரிடம் பிரபலமாம். வாரிசு நடிகர்கள் சிலர் இந்த பண்ணை பார்ட்டிகளுக்குத்தான் வருவார்களாம். ஓட்டல்களுக்கு ‘நோ’ சொல்லிவிடுவார்களாம்.
இப்படி கதை கதையாய் வெளிவரும் சங்கதிகளைக் கேட்டு அதிர்ச்சியாக இருக்கிறது.
‘‘மதுவும் நடனமும்தான் இருக்கும் என்று நினைத்தால் போதை வஸ்துகளும் கலந்திருக்கும் போல.திரையுலகினர் தங்கள் இரவு பார்ட்டிகளை குறைத்துக்கொள்வது நல்லது’’என்கிறார் அந்த மூத்த இயக்குநர்.பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்..
 போதை விவகாரத்தில் உங்களை தொடர்புபடுத்தி செய்தி வருகிறதே.
‘‘நான் கமல் சாரோடு மன்மதன் அம்பு ஷுட்டிங்கில் கொடைக்கானல்ல இருந்தேன். இந்தத் தகவலை என் குடும்ப நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு நான் ஷாக் ஆயிட்டேன். அம்மாவை கான்டாக்ட் பண்ணி வக்கீல் மூலமா பதில் சொல்ல ஏற்பாடு செய்துட்டேன்.
நீக்ரோக்களுடன் நீங்கள் உள்ள போட்டோக்கள் நெட்டில் பரவுகிறதே...?
‘‘கைது செய்யப்பட்ட நபரை யார் என்றே தெரியாது. வீணாக என் பெயரை இதில் இழுத்துவிட்டுருக்காங்க.அந்த போட்டோக்களில் என்னுடன் இருக்கிறது சிட்னி. என் காஸ்ட்யூம் டிசைனர். பெரிய டிசைனர் அவர். எனக்கு மட்டுமல்ல இண்டஸ்ட்ரியில் பெரிய ஸ்டார்களுக்கும்,டி.வி. நிறுவனங்களுக்கும்அவர்தான் டிசைனர்.அவரைப் போய் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தறாங்க.அவர் மரியாதைக்குரியவர்.எங்க ஃபேமிலியில் ஒருத்தர் மாதிரி
 நீங்க பார்ட்டிக்கு போயிருக்கீங்களா...?
‘‘பார்ட்டிக்கு போயிருக்கேன். ஆனா நீங்க நினைக்கிற மாதிரியான இந்த பார்ட்டி கிடையாது அது.சினிமாவில் முக்கியமான வி.வி.ஐ.பி.கள் கலந்துக்குற பார்ட்டி அது.
 இதில் உங்க பெயரை இழுக்க என்ன காரணம்...?
‘‘அதுதான் எனக்கும் தெரியல. ஒருவேளை தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகள்லயும் பேசப்படுகிற மாதிரி பிரபலமாக இருக்குறதால என் புகழைக் கெடுக்க இப்படி செய்றாங்களான்னு தெரியல. எதையும் என்னால உறுதியா சொல்லமுடியாது.
 உங்களோட அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
‘‘நான் இந்த முறை சும்மா விடமாட்டேன். எதற்கெடுத்தாலும் என் பெயரை இழுக்குறாங்க.இதுவரை நான் பொறுமையாக இருந்துட்டேன்.இனி அப்படியில்ல. என் மேலே அவதூறு கிளப்பினவங்களை கோர்ட் மூலமா சந்திப்பேன்.
- தேனிகண்ணன்

கருத்துகள் இல்லை: