சனி, 28 ஆகஸ்ட், 2010

கலைஞர், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதோடு

சென்னை : ""கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதோடு, அதில் இடம் பெறாத பல புதிய திட்டங்களையும் உருவாக்கி, மக்களின் பாராட்டுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. ஒவ்வொரு குடும்பமும், அரசின் நலத்திட்டப் பலன்களில் ஏதாவது ஒன்றை பெற்று மகிழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது, அரசுக்கு கிடைத்திருக்கும் நற்சான்றிதழ்,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார்.

இரண்டு நாள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு, முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. இதில், துணை முதல்வர் ஸ்டாலின், அனைத்து துறை அமைச்சர்கள், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, காவல்துறை உயரதிகாரிகள், அனைத்து துறை செயலர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் பேசியதாவது: கடந்த தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதுடன், அதில் இடம் பெறாத பல புதிய திட்டங்களையும் உருவாக்கி, மக்களின் மனமார்ந்த பாராட்டுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த பணிகள் மேலும் தொடர வேண்டும். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, "டிவி', எரிவாயு இணைப்புடன் அடுப்புகள், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் போன்றவற்றை எப்படி இவர்களால் தொடர்ந்து செயல்படுத்த முடியுமென சந்தேகம் எழுப்பியோரை புறந்தள்ளி, மக்கள் பணியே மகேசன் பணி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு, அந்த திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறோம்.

ஆதி திராவிடர் சமுதாய மேம்பாட்டில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. "டிவி' வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் "டிவி'கள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டு, இதுவரை ஒரு கோடியே 35 லட்சத்து 86 ஆயிரம் குடும்பங்களுக்கு "டிவி'கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலக்கை நிறைவேற்றிட, மாவட்ட கலெக்டர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள 21 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில் ஒரு பயனாளிக்கு 75 ஆயிரம் ரூபாய் மானியத்துடன், 2,250 கோடி ரூபாய் செலவில் 3 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டி தர அரசு திட்டமிட்டுள்ளது. 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளிலும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தை, வெற்றிகரமாக செயல்படுத்திட கலெக்டர்கள் இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 3 லட்சம் வீடுகளையும் கட்டி முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசு 33 ஆயிரத்து 750 ரூபாயும், தமிழக அரசு 26 ஆயிரத்து 250 ரூபாயும் சேர்த்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில், தமிழக அரசு வழங்கும் நிதி 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக சேர்த்து இனி 41 ஆயிரத்து 250 ரூபாயாக வழங்கப்படும். இனி, ஒவ்வொரு வீடும் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 19ம் தேதி வரை பதிவு செய்த ஒரு கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 439 குடும்பங்களில் இருந்து, ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 81 ஏழை மக்களுக்கு, 470 கோடியே 99 லட்ச ரூபாய் செலவில், உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளை செய்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்களால், மனிதவளக் குறியீட்டில் நாம் முன்னிலையில் இருக்கிறோம். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், ஏதாவது ஒரு நலத்திட்ட உதவியை பெற்று மகிழ்ந்துள்ளது என்பது, இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கும் நற்சான்றிதழ். இவ்வாறு முதல்வர் பேசினார்.

எனது சிந்தையில் இருப்பது...: கூட்டத்தில் கருணாநிதி குறிப்பிட்டதாவது: எனது சிந்தையில் எப்போதும் நிறைந்திருப்பது மக்கள் நலப் பணிகள் மட்டும் தான். ஒவ்வொரு நொடிப்பொழுதையும் மக்கள் நலனுக்காகவே நான் செலவழித்து வருகிறேன். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், கிராமவாசியானாலும், நகரவாசியானாலும் அவர் எல்லா வசதி, வாய்ப்புகளையும் பெற்று வாழ வேண்டும். அவர்கள் அப்படி வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான், அரசின் குறிக்கோள். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டார்.

thiru - chennai,இந்தியா
2010-08-28 17:06:49 IST
செல்வி கோதை நாயகி அவர்களே , நம்ம தலைவர் மக்கள் நலம் , மக்கள் நலம் என்று சொல்லுவார் , தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் , அவரை போல சிறந்த சுய நல குடும்ப தலைவர் உலகில் யாரும் இல்லை , பிறரை மிருகம் கூறும் முன் உங்களை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து கொள்ளவும் . நம்ம தலைவர் வருமானம் , சென்னை வரும் போது எப்படி இருந்தது ? , இப்போது தலைவர் குடும்ப வருமானம் எவோளவு ? எல்லாம் அவர் உழைத்து சம்பாதிததுதான ? யோசித்து பார்க்கவும் ....
வீரகணபதி - chennai,இந்தியா
2010-08-28 16:41:43 IST
செல்வி கோதை நாயகி அவர்களின் கருத்து முற்றிலும் சரியே. யோசித்துப்பார்த்தால் கலைஞர் தவிர உலகில் வேறு எந்த ஒரு தலைவரும் தான் சார்ந்த சமூகத்திற்கு இந்த அளவிற்கு உழைக்கவில்லை. மகாத்மா காந்தியை விட அதிக அளவில் மக்கள் தொண்டாற்றி வரும் கலைஞரை இனி "வாழும் மகாத்மா" கலைஞர் என்று அழைக்க வேண்டும். வாழும் மகாத்மா கலைஞர் வாழ்க....
ச.Vasudevan - Chennai,இந்தியா
2010-08-28 16:38:07 IST
Kudos to Mr.Kai Piallay. Please continue your sarcasm. We all like it....
சுவாமிநாதன் - சென்னை,இந்தியா
2010-08-28 16:34:12 IST
எனக்கு கிப்ளிங் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. I"God Of Copybook Headings" In the Carboniferous Epoch we were promised abundance for all, By robbing selected Peter to pay for collective Paul; But, though we had plenty of money, there was nothing our money could buy, And the Gods of the Copybook Headings said: "If you don't work you die." கிப்ளிங் ஒருவேளை முக வை நினைத்து தான் எழுதினாரோ என்னவோ? வங்கி கடன் இலவசம்...யார் காசு? டிபோசிட் பண்ணினவன் காசு... உழுபவனுக்கே நிலம் சொந்தம், பஸ் வோட்டுபவனுக்கு பஸ் சொந்தம். டிரைன் வோட்டுபவனுக்கு டிரைன் சொந்தம். Kipplings conveys this wonderfully by saying that "By robbing selected Peter to pay for collective Paul" MK robs the working class/tax payers money to distributs to his immediate family in the form of freebies to the socity at large. Soon, all the voters may each be given 1000Rs. bundles. So that every one will have money in their hand but no one will till the land, no one to stich garments, no one to pull the vegetable cart, no one to cook and eventually all of us to die...
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-08-28 16:24:10 IST
தங்களது இந்த சீரிய தொண்டை அங்கீகரித்து தங்களுக்கு எப்போது "பாரத் ரத்னா" விருது கிடைக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன்....
கார்தீசன் - ஜித்தா,சவுதி அரேபியா
2010-08-28 15:54:30 IST
என்னதான் வாய் கிழிய வசனம் பேசினாலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நீங்கள் அடிக்கும் இலவச அறிவிப்பு மட்டுமே வெற்றியை கொடுக்கும் எனபது நிருபணமாகிவிட்டது, அதனால் பொதுமக்களுக்கு மூன்று வேலையும் இலவசமாக உணவு ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் என்று அறிவியுங்கள், எவன் வீட்டு பணம், நீங்கள் தாராளமாக செயல்படுத்த முடியும், இதை மட்டும் அறிவியுங்கள், 234 மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் நீங்கள்தான் அரசியல்வாதி, மீதியுள்ளவர்களை, மக்களே விரட்டி விடுவார்கள். போங்கடா நீங்களும் ஒங்களோட வெங்காய அரசியலும், பழைய காலத்து மன்னர்களை போல உங்களது குடும்பமும் இருந்தது என்று எழுதும் காலம் நெருங்கிவிட்டது....
கார்த்திக் - நேவ்தேல்ஹி,இந்தியா
2010-08-28 15:32:23 IST
இப்ப வீடு, டிவி, மோட்டார், காஸ் எல்லாம் கொடுத்து வீட்டை ரெடி பண்ணியாச்சு, அடுத்து ஆட்சிக்கு வந்த குடும்பம் நடத்த ஆரம்பித்துவிடுவார்கள் என் மக்கா, சம்பாதிக்கும் தொழில் எல்லாம் இவர்கள் கையில் பிச்சை எடுக்கும் பத்திரம் மட்டும் நம் கையிலா? எழுந்திரி. தயாரா இரு ........ ஓடு................ தமிழ்நாட்டை விட்டு ...................... இப்படிக்கு மானமுள்ள தமிழன்....
கே.பாலசுப்ரமணியன் - உடுமலைப்பேட்டை,இந்தியா
2010-08-28 15:06:50 IST
நிறைய பேருக்குப் புரியவேயில்லை, அதனால்தான் இவளவு காட்டமான கருத்துக்கள். மஞ்சள் துண்டுக்காரரின் வார்த்தைகளை மற்றவர்களுடையதைப் போல் சாதாரணமாய் எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழில் மக்கள் என்றால் பெற்ற பிள்ளைகள் என்று ஒரு பொருள் உண்டு என்பது தெரியாதா? மாநிலத்தைப் பற்றி என்றைக்கு அவர் கவலைப்பட்டார்? பிள்ளைக்கோ பெண்ணுக்கோ பேரனுக்கோ ஏதும் பிரச்சனை அல்லது உடனே டெல்லிக்கு விமானம் ஏறும் இவர் மாநிலத்துக்காக சென்னையைத் தாண்டுவாரா?...
najimu - kl,இந்தியா
2010-08-28 14:49:16 IST
மோசமான கவர்மன்ட்...
சுரேஷ் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-28 14:48:09 IST
இப்படி ஒரு கட்சி இருந்தால் எப்படி இருக்கும்:- கட்சின் பெயர்: APJAK (APJ . Abdul kalam ) கொள்கைகள் : 1 . MP & MLA தேர்தல்ல நிக்கிற யாருக்கும் எந்த ஒரு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அவர்கள் பயறிலோ அல்லது உறவினர்கள் பயறிலோ இருக்க கூடாது, அப்படி இருப்பது தெரிந்தால் அதை அரசாங்கமே பறிமுதல் செய்து கொள்ளலாம். 2 . MP & MLA கல் மற்றும் அவர்கள் குடுபத்தினர் அரசு பஸ்-ல் மட்டுமே பயணம் செய்யவேண்டும். 3 . MP & MLA கள் மற்றும் அவர்கள் குடுபத்தினர் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும். 4 . MP & MLA யாரும் கட்-அவுட்,பேனர் வைக்க கூடாது....
sathis - riyadh,சவுதி அரேபியா
2010-08-28 14:29:44 IST
கலைஞர் சொன்னதில் என்ன தவறு இருக்குறது , ,, இன்னும் நம்முளுடைய கிராமங்களில் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் நெறைய உள்ளனர் ,அவர்கள் இந்த இலவச திட்டங்களின் மூலம் பயன் பெற்று கொண்டு உள்ளனர் ,...
தி க - dubai,இந்தியா
2010-08-28 14:15:44 IST
அவரே அவரை பற்றி புகழ்கிறார், நமக்கு ஆட்சி மாற்றம் கண்டிப்பா வேண்டும் இல்லவசத்தை எத்தனை நாளுக்கு அனுபவிக்க முடியும்,அவரும் அவரோட குடும்பவும் தான் நல்லா இருக்காங்கள்,கண்டிப்பா அம்மா ஆட்சி வேண்டும்...
மணி - சென்னை,இந்தியா
2010-08-28 13:50:56 IST
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்கிற பெயரில் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தமிழக அரசு கட்டணத் தொகையாக (பிரிமியம்) முதலாண்டில் கொடுத்திருப்பது ரூ. 628.20 கோடி. ஆனால், பல்வேறு அறுவைச் சிகிச்சைகளுக்காக அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளின் சார்பாக மருத்துவமனைகளுக்குக் கட்டணமாகக் கொடுத்திருப்பதோ வெறும் ரூ. 415.43 கோடிதான். மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ. 200 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது தனியார் காப்பீட்டு நிறுவனம். இரண்டாவது ஆண்டுக்கு, அரசு அந்தத் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒதுக்கியிருக்கும் கட்டணத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ. 750 கோடி. இப்படி கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களின் வரிப்பணத்திலிருந்து தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு வாரி வழங்கும் அரசு, அதை அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்துவதில் செலவிட்டால் அதனால் நிரந்தரமாகப் பயன் கிடைக்குமே...
kurisil - thuththtukkudi,இந்தியா
2010-08-28 13:47:06 IST
அம்மா கோதைநாயகி அவர்களே நீங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறீர்களா. எப்படியோ உங்கள் கடிதம் கைப்புள்ள கடிதத்தை விட நகைச்சுவையாக இருக்கிறது. நல்லா சிரிக்க வைத்ததற்கு நன்றி...
மணி - சென்னை,இந்தியா
2010-08-28 13:27:19 IST
சன் - madurai,சரிதான். உலகில் எந்த தலைவனும் மக்கள் நலனுக்காக இந்த அளவு உழைத்திருக்க மட்டார்.சொன்னவற்றை மட்டுமல்ல,சொல்லாதவற்றையும் நிறைவேற்றுவது யார்?இலங்கைத் தமிழர்களை அழிக்க உதவுவோம் என்று சொன்னோமா?தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கைப் படைக்கு ஆயுதம் வழங்கி இன்னும் 500பேரைக் கொல்ல உதவுவோம் எனச்சொன்னோமா?கிடைத்துக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச காவிரி,பெரியார் நீரையும் வராமல் பார்த்துக்கொள்வோம் எனச்சொன்னோமா?400 கோடி தமிழ்நாடு கேபிள் கார்போரஷனை மூடி லாபம் பார்ப்போம் எனச்சொன்னோமா? யாருக்கு நீங்கள் ஓட்டுப் போட்டாலும்,அவர்களை மிரட்டி,பணம் கொடுத்து எங்கள் கட்சிக்கு வர வைப்போம் எனச்சொன்னோமா? ஊழலுக்காக வெளியேற்றப் பட்ட அமைச்சர் பூங்கோதையை மீண்டும் மந்திரியாக்கி அழகுபார்ப்போம் எனச்சொன்னோமா?கோவை குண்டுவெடிப்பு சூத்திரதாரியை விடுதலை செய்து பெங்களூரிலும் அவர் 'பணி' தொடர உதவுவோம் எனச்சொன்னோமா? ஜெ.வை எதற்க்கெல்லாம் குறைகூறி ஆட்சியைப் பிடித்தோமோ, அதைவிடக் கேவலமாக ஆட்சி செய்ய எங்களால் மட்டுமே முடியும் எனக் காட்டிக்கொண்டிருக்கிறோம் இது போதாதா?கூடியவிரைவில் தமிழகமே,தமிழனே இருக்கமுடியாமல் செய்ய எங்களாலேயே முடியும்.இப்படிக்கு மஞ்சத்துண்டு. .....
ravi - UAE,இந்தியா
2010-08-28 13:25:35 IST
Mr madurai வெளி உலகிற்க்குவா எல்லாம் இலவசமாக கிடேக்கும் என்று இருக்காதே உழைத்து வாழு ,தமிழக அரசே மக்களை சோம்பேறி ஆக்காதே....
பொன்னி - தோஹா,கத்தார்
2010-08-28 13:15:49 IST
நீங்கள் இதுவரை மக்களுக்கு அளித்த திட்டங்கள் மக்களுக்கு போய் சேர்ந்ததா என அறிந்து கொள்ள ஒரு மாநாடு நடத்துங்க.. இந்த திட்டத்தில் பயன் அடையாதவர்கள் அனைவரும் வந்து தங்களை பதிவு செய்து உங்களையும் காரி துப்பிட்டு போவர்கள்..போடங்.. வயசு ஆச்சே தவிர உனக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாது தூ தேறி...
ராஜா - Coimbatore,இந்தியா
2010-08-28 12:57:30 IST
இலவசமாக கொடுப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அது சாதனையல்ல. அடிப்படை தேவைகளை தண்ணிர், வேலை வைப்பு, வறுமை ஒழிப்பு, பிச்சைக்காரர் ஒழிப்பு, மின்சார தேவை எல்லாவற்கும் இருப்பிடம் விலைவாசி கட்டுப்பாடு சாலை வசதிகள் போன்றவற்றில் இன்னும் பல வருடங்கள் மற்ற நாடுகளை விட பின் தங்கியுள்ளோம். எல்லாவற்கும் தெரியும் கருணாநிதி எந்த காரியத்தையும் சுய நல எண்ணத்தில்தான் செய்வர். பல கோடிகள் பல வழிகளில் சம்பாதித்த பின் கடைசி காலத்தில் அந்த சொத்து பல வழிகளில் போய் விடுமோ என்ற பயத்தில் மக்கள் பணத்தில் நல்லது செய்வது போல் நடிக்கிறார்....
Anitha - M,யுனைடெட் கிங்டம்
2010-08-28 12:53:41 IST
கைப்புள்ள,இன்னைக்கு உங்க comedy superooo super....கலக்கிடீங்க போங்க....அதுலயும் ரெண்டாவது comment இருக்கே,chanceless man...இவ்ளோ கலேபரத்துலையும் மணியை மறக்காம கோழி கூடைக்குள்ள ஒழிய சொல்லிட்டு தப்பிச்சு போறீங்களே...உங்க கடமை உணர்ச்சியை நான் பாராட்டுறேன்,உங்க ரெண்டாவது கமெண்ட்-ல இன்னும் ஒரே ஒரு வரி add பண்ணிருந்தீங்கனா இன்னும் supera இருந்திருக்கும்,அதாங்க சொம்படிசானுங்க எல்லாம் துரத்தும் போது வடிவேலு style ஒரு பாட்டு பாடி இருக்கனும் "உயிரே உயிரே,தப்பிச்சு எப்டியாவது ஓடி விடு,வருதே மூதேவி வருதே" அப்டின்னு பாடிகிட்டு ஓடிபோய் பஸ்ல இடத்தை பிடிங்க.....தினமலரோட புகழுக்கு நீங்களும் காரணம்.....நெறைய எதிர்பார்கிறோம்....உங்கள் பணி தொடர்க......
அந்தோனி - சென்னை,இந்தியா
2010-08-28 12:35:28 IST
எது மக்கள் நலதிட்டம்? இவர் மேற்கூறிய அனைத்துமே மக்களை பிச்சைகாரர்கள் ஆக்கும் திட்டங்கள். மக்களை சொந்த காலில் நிற்க விடுங்கள். அவர்களுக்கு கல்வி மட்டும் இலவசமாக கொடுங்கள் முதல்வர் அவர்களே....
adalarasan - chennai,இந்தியா
2010-08-28 12:32:43 IST
போகிற போக்கை,பார்த்தால், இவருக்கு இந்தியாவின் தந்தை என்று [காந்திக்கு ,பதில் ]பட்டம் கொடுத்துவிடுவார்கள் ,போல் இருக்கிறது! ஆமாம் ,இந்தியா,முழவதிர்கும்,எலேக்ட்சனுக்கு ,பணம் கொடுக்க இவரால் முடியும்! ஆடலரசன் ,...
சாமி - MUSCAT,ஓமன்
2010-08-28 12:24:09 IST
இலவசம் மட்டுமே பெருமை அடித்துக்கொள்ளும் நம் முக வாழ்க, இந்த இலவசங்களை மட்டுமே நம்பி ஓட்டுக்களை போடும் தமிழ் நாட்டு மக்களும்,தமிழ் நாடு அரசும் நாசமா போகட்டும்....
அப்பாவி - Bangalore,இந்தியா
2010-08-28 12:22:55 IST
ஐயா, நீங்க ரொம்ப நல்லவரு.... என்ன தமிழ்நாடுதான் நாசமா போகும். உங்க வீடும் குடும்ப நபர்களும் நல்ல சந்தோசமா இருப்பாங்க அந்த அளவுக்கு நீங்க அவர்களுக்கு நல்லது பண்ணி வெச்சிருங்க....
குமரேசன் - சேலம்,இந்தியா
2010-08-28 12:19:53 IST
சரி விடுங்க முதல்வரே நீங்க சொல்றது உங்க மக்களை மட்டும் தானே (கருணாநிதி சொந்தங்களை மட்டும்) நீங்கள் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்...
2010-08-28 12:17:51 IST
தொடரட்டும் மக்கள் நலத்திட்டம் . வாழ்க கலைஞர் .....
GODWIN - tamilnadu,இந்தியா
2010-08-28 11:40:39 IST
திரு.கலைஞர் எந்த நல்ல திட்டத்தை செய்தாலும் அதை குறை கூறுவதும் அதை ஆதரித்து கருத்து பதிவு செய்வோரை விமர்சித்து இங்கு எழுதுவதும் சில பேருக்கு வாடிக்கைஆகிவிட்டது.செல்வி.கோதை தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.அடுத்த முறையும் கலைஞருடைய ஆட்சி தமிழகத்தில் மலரும்.இன்னும் பல நல்ல திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைக்கும்....
சன் - madurai,இந்தியா
2010-08-28 10:55:57 IST
மனசாட்சி கொஞ்சமும் இல்லாமல் கலைஞரின் மக்கள் நலத்தொண்டை கீழ்த்தரமாக விமர்சித்து சிலர் கருத்து பதிவு செய்கின்றனர். இவர்கள் ஒன்று மனசாட்சி இல்லாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது மிருகங்கள் மனித உருவில் நடமாட வேண்டும். உலகில் எந்த தலைவனும் மக்கள் நலனுக்காக இந்த அளவு உழைத்திருக்க மட்டார். காந்தியை விட பல மடங்கு அதிகம் மக்கள் சேவை செய்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுபவர் கலைஞர். நாளைய உலகம் கலைஞரை போற்றும் வாழ்த்தும். வாழ்க பல்லாண்டு கலைஞர்.......
vittoba - chennai,இந்தியா
2010-08-28 10:51:24 IST
yes your children are happy...
mano - nz,நிக்கர்குவா
2010-08-28 10:45:34 IST
தமிழ்நாட்டில், தற்போதைய அரசின் மக்கள் நல திட்டங்களை அணிபவிக்காதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.... அய்யா, எல்லாவற்றையும் இலவசமா கொடுக்கிறார் என்று சொல்கிறார்கள்.... அப்படி பெற வேண்டிய நிலையில் இங்கு சிலர் இன்னும் இருக்கிறார்கள்..... அந்த சில பேராவது பயன் பெறட்டுமே.....! தொழில் வளர்ச்சி அடைத்து, மக்கள் வாழ்க்கைதரம் வளர்ச்சி அடைத்த பிறகு, இந்த இலவசங்கள் இல்லாமல் போக கூடும்..... இலவசங்கள் தேவை இல்லை என மக்களே கூறும் நிலை வரலாம்...... தற்பொழுது உள்ள சூழ்நிலையில், இந்த இலவசங்களை மறுப்பவர் யாருமே இல்லை...... எந்த விதத்தில் பார்த்தாலும், அய்யா அரசு மக்களுக்கு நன்மை செய்யும் அரசு தான் என்பதை மறுப்பதற்கு இல்லை......!. தமிழ் நாடு மக்களின் வாழ்க்கை தரம் உயர, இவரை தவிர வேறு அரசியல் கட்சிகள் என்ன திட்டங்கள் வைத்துள்ளனர்......? எதனை கட்சிகள், ஆட்சிக்கு வந்த பின், சொன்னதை செய்தார்கள்.....? அய்யா அரசில், மக்களின் வாழ்க்கைதரம் உயர பல்வேறு திட்டங்கள் உள்ளன..... நிதானமாக யோசித்துபாருங்கள்..... உண்மை புரியம்.......
SVG - NJ,யூ.எஸ்.ஏ
2010-08-28 10:39:19 IST
கைப்புள்ள கருத்துக்கள் நகைசுவையும் கருத்தும் எளிமையும் கலந்தது. சரியான யதார்த்தவாதி....
எஸ் குப்புசாமி - சென்னை,இந்தியா
2010-08-28 10:37:42 IST
எனக்கு என்னும் இலவச டிவி யே கிடைக்கலே. எல்லாம் குடுத்து முடிஞ்சா? யாருக்கிட்டே போய் எவ்வளவு அழணும்? எம்புட்டு நேரம் அழணும்?...
காரல் மார்க்ஸ் - trichy,இந்தியா
2010-08-28 10:36:12 IST
ஆமாம் கஜ கஜ வென்று...
c.ramasamy - tup,இந்தியா
2010-08-28 10:33:21 IST
அய்யா...நீங்கள் சொல்வது ஒரு சில மக்கள்தான் makilchiyaai இருக்கிறார்கள்....இன்னும் நிறையபேர் ரேசன் கார்டு கிடைக்காமல்....காப்பீடு திட்டம்...மற்றும் காஸ் அடுப்பு ....டிவி ...நிலம் மற்றும் வீட்டுமனைப்பட்டா ...எதுவும் கிடைக்காமல் இன்னும் ஏமார்ற்றத்துடன் உள்ளனர்....அதற்குள் நீங்களே மக்கள் ஹேப்பியாக உள்ளனர் என்று கூறுகிறீர்கள்.....உங்களுக்கு நீங்களே தம்ப்பட்டம் அடித்துக்கொள்ளுங்கள்....ஒவ்வெரு குடும்பமும் உங்கள் திட்டங்களை அனுபவிக்க முடியாமல் இல்லை...இல்லை ..கிடைக்காமல் வாழ்கின்றன....அதுமட்டுமல்ல உங்களுடைய எந்த திட்டத்தையும் நானோ என்குடும்பமோ இதுவரை பயன்படுத்தவுமில்லை....சொல்லப்போனால் எதுவும் கிடைக்கவில்லை....என்னைப்போல் இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர்....நீங்களே ஒரு வட்டத்தை ஏற்படுத்தி...அந்த வட்டத்திக்குள் நீங்களே பாராட்டு வழங்கியுள்ளீர்கள் வட்டத்தைவிட்டு வெளியே வந்து பாருங்கள்...உங்களுக்கே புரியும்....i...
ram - Saudi,இந்தியா
2010-08-28 10:29:44 IST
whatever he is done is really appreciable and whatever the Chief Minister of Gujarat has done is blamable. There is no way to get rid of this man and his family. They have been well rooted and they know all the ways to get into powers again. |People need not vote. They will win by voting by themselves as they praise themselves for their achievements. Till the people are unaware and not ready for a civil war against these culprits and criminals no one can save. people themselves have now become criminals no moral values no discipline no culture then how can we expect a good government...
patham - chennai,இந்தியா
2010-08-28 10:08:24 IST
கைப்புள்ள உங்கள் கருத்தை நன் தவறாமல் படித்து ரசிக்கிறேன் நன்றி. திரு. கைப்புள்ள அவர்களே உங்களிடம் நன் இன்னும் அதிகமாக எதிர்பார்கிறேன் அது உங்களால் மட்டுமே முடியும்! தொடரட்டும் உங்கள் எழுத்து பயணம்.........
Maha - chennai,இந்தியா
2010-08-28 10:02:58 IST
தயவுசெய்து திருத்தி வாசிக்கவும்...மக்கள் என்று அவர் சொன்னது தமிழ் நாட்டு மக்களை அல்ல ...தனது மக்களை......
மல்லு - சென்னை,இந்தியா
2010-08-28 09:48:18 IST
அம்மா செல்வி கோதை நாயகி, நீங்கள் என்ன திமுக அடிவருடியா ?உங்களின் பதவி என்ன ?கழக தொண்டர? இல்லை உங்களின் குடும்பத்துடன் தான் வாழ்கிறீர்கள? ஏன்னா குடும்ப பெண்களுக்கு இன்றைய காலகட்டத்தில் இருக்கும் விலைவாசி மற்றும் வாழ்க்கை சிக்கல் என்ன வென்று நன்றாக தெரியும் , என்று ஐநூறு ரூபாய் நோட்டுகள் மக்கள் பலகத்தில் புழங்க ஆரம்பித்து விட்டக்களோ அன்றி தெரிந்து கொள்ளலாம் நாடு மோசமான நிலைமையில் உள்ளது விலைவாசி கட்டுபாட்டில் இல்லை மற்றும் வேலை வைப்பு குறைவு, என்று , ஏன் ஈரானில் சாதாரண கோழி முட்டை பத்தாயிரம் ரியல் அதற்காக அது பநகர நாடு கிடையாது , பதிலாக அங்கீ பஞ்சம் விரித்து ஆடுகிறது என்று அர்த்தம் . அதுபோல என்று இந்திய சாதாரண மக்கள் கூட பால் பக்கெட் வாங்க காய்கறி வாங்க ஐநூறு ரூபாய் நோட்டுகள் பழக ஆரம்பித்ததின் அடையாளமே நாடு மோசமான நிலைமைக்கு பூய் கொண்டிருகிறது என்று அர்த்தம். பார்த்து உணர்ந்து ஒட்டு போடுங்கள். ௦௦...
Mohammed ali - Trichy,இந்தியா
2010-08-28 09:46:04 IST
Whatever development happening in TN for the last 40 years, all the credits goes to DMK only. I belong to Tiruchy, and I live in KSA. For the last 4 years Trichy has seen unbelievable development in every area. Roads, Bridges, infrastructures, facilities railways airport you name it. Can anybody deny this? In contrast, In Jayas rule, (her 1st tenure after MGRs death), I happened to visit Chennai I saw several level crossings along the beach road leading to Secretariat, I thought may be new train service started to Secretariat. Alas, I was shocked when I came to know that. It is not for any train. It is to close the road for "JJ express" to pass. This is not only on beach road, several other road had such gates. And, this roads will be blocked for hours until "JJ Express" passes. And, she will choose only one of these roads for security reason. And that too during peak hours. And the poor public has to wait until she passes. Height of arrogance. Holy shit, even American president has not done such a thing. We are living in a democratic country (big joke). Here, in KSA when the King and Prince, while they use public roads. You never feel anything. Just they stop the traffic at specified area at specified time. Not more than 5 – 10 minutes. Public servants are chosen by public to serve public, not to treat the public as 'slaves'. I am writing this, for the General public to think. If you have conscience, never ever give her another chance. She and her friend Sasi will ruin the state for sure....
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-08-28 09:27:44 IST
செல்வி கோதை நாயகி - Madurai,இந்தியா அவர்களே தாத்தாவுக்கு சொம்பு அடிச்சது போதும். உலகில் எந்த தலைவனும் இந்த மாதிரி இலவசத்த கொடுத்து மக்களை முட்டாளா ஆக்குனத கேள்விபட்டது உண்டா! எவன் கேட்டான் இலவசம் ! யாரு வீட்டு பணம்! இவ்ளோ பேசுறிங்களே விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு,கொலை,கொள்ளை, லஞ்சம், அராஜகம் இதபத்தி கொஞ்சம் பேசலாமே! விலைவாசி 2 வருசத்துல 4 மடங்கு ஏறிபோச்சி அதவிட்டுபுட்டு சும்மா கூப்பாடு போடாதிங்க.அதவிட பெரிய காமெடி இவர போயி காந்திக்கு சரியா ஒப்பிட்டு பேசுறிங்களே உங்கள மாதிரி ஆளுங்க இருக்குறவரைக்கும் இந்த பெருசுக்கு ஒரே கொண்டாட்டம்தான் போங்க போயி தண்ணி குடிங்க வயிதெரிச்சல கிளப்பாதிங்க சொல்லிட்டேன்....
மனிதன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-28 09:18:11 IST
ஹலோ செல்வி கோத நாயகி இது யாருடைய பணம் ரொம்ப பேசாதே இவனெல்லாம் ஒரு தலைவன் அவனுக்காக நீ கூவுற யோசித்து பேசவும்...
மணி - சென்னை,இந்தியா
2010-08-28 09:12:12 IST
'காந்தி' யை விட பல மடங்கு அதிகம் மக்கள் சேவை செய்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுபவர் கலைஞர் என்ற சூப்பர் ஜோக்குக்கு நன்றி ! செல்வி போதை நாயகி - madurai,இந்தியா .அவர்களே (அது யார் காந்தி? மஞ்சத்துண்டு மதுரை மருமகளா?)....
சுகர் தேவ் - tuticorin,இந்தியா
2010-08-28 08:42:15 IST
உன் குடும்ப நலனுக்க நீ இவ்ளோ வருஷம் உலசது போ(தாதா). தமில்நடுஅ சுடுகாட ஆகம போக மாட்டியா. காமராஜர் தி real king maker.... No one can never be like a honest man like him...........
செல்வி கோதை நாயகி - Madurai,இந்தியா
2010-08-28 07:48:12 IST
மனசாட்சி கொஞ்சமும் இல்லாமல் கலைஞரின் மக்கள் நலத்தொண்டை கீழ்த்தரமாக விமர்சித்து சிலர் கருத்து பதிவு செய்கின்றனர். இவர்கள் ஒன்று மனசாட்சி இல்லாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது மிருகங்கள் மனித உருவில் நடமாட வேண்டும். உலகில் எந்த தலைவனும் மக்கள் நலனுக்காக இந்த அளவு உழைத்திருக்க மட்டார். காந்தியை விட பல மடங்கு அதிகம் மக்கள் சேவை செய்து ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுபவர் கலைஞர். நாளைய உலகம் கலைஞரை போற்றும் வாழ்த்தும். வாழ்க பல்லாண்டு கலைஞர்....
Anu - TN,இந்தியா
2010-08-28 07:43:29 IST
Please stop voting for this guy and his relatives.. They have cheated Tamil people in the name of rationalism and Tamil pride for so long. Tamil Nadu really needs some fresh politicians who will encourage people to become more global and dynamics rather than look like fools by talking Tamil Pride, Dravidam etc....
பிரபா - chennai,இந்தியா
2010-08-28 07:37:37 IST
கடன் வாங்கி ஊரு முழுக்க ஒசிய அள்ளி வீசிக்கிட்டு இருக்கிற ஊதாரி முதல்வரை தமிழ் நாட்டில் தான் பார்க்க முடியும். இலவசம் கொடுப்பது எல்லாம் ஒரு சாதனையா??...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-08-28 06:58:50 IST
கூட்டத்தில் கருணாநிதி குறிப்பிட்டதாவது: எனது சிந்தையில் எப்போதும் நிறைந்திருப்பது எப்படி கொள்ளையடிப்பது மட்டும் தான். ஒவ்வொரு நொடிப்பொழுதையும் கொள்ளையடிபதிலேயும், மக்கள் வரி பணத்தை வீணடிப்பதிலும் நான் செலவழித்து வருகிறேன். எங்கள் குடும்பம் 100 வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான், அரசின் குறிக்கோள். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டார். அய்யா திருக்குவளை தீ சக்தி, நீங்கள் சொல்லும் ஹாப்பி மக்கள் உங்கள் குடும்ப மக்களா? தற்பெருமை, தனக்கு தானே பாராட்டி கொள்வது உங்கள் ஒருவரால் தான் முடியும். மக்கள் சொல்லவேண்டியதை, நீங்கள் சொல்லுகிறீர்கள், இதை சொல்லுவதற்கு முன் உங்கள் கட்சியின் மீது மக்கள் எவ்வளவு வெறுப்பாக உள்ளார்கள் என்று விசாரித்துவிட்டு பிறகு பேசுங்கள்....
2010-08-28 06:35:12 IST
ஆமாம்! உங்க மக்கள் அனைவரையும் மந்திரி ஆக்கி விட்டீர்கள். சொத்துக்கள் பிரிச்சி கொடுதுடிங்க. மக்கு புள்ள வாத்தியார வந்த கதைய ஒரு புள்ள மத்திய மந்திரியா ஆகி ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாகிட்டியும் மந்திரி என்கிற அடையாளம். பின்ன உங்க மக்கள் உங்கள பாராட்ட மாட்டாங்களா. ஏன்னா அவங்க உங்களால அவ்வளவு பலன் அடைந்து இருக்காங்க. பத்தாதற்கு சினிமா முதல் அனைத்து இண்டஷ்ட்ரியிலும் உங்க பேர புள்ளைகளோட ராஜ்ஜியம். ஆசியாவிலேயே பணக்கார குடும்பம். கூடிய விரைவில் உலக பணக்கார இடம் கிடைக்கும் வரும் தேர்தலில் ஜெயித்தால். பின்ன உங்க மக்கள் உங்களை பாராட்டாம இருப்பாங்களா....
Subra - Chennai,இந்தியா
2010-08-28 04:42:13 IST
give them job .dont give them free...if it goes old they will forget you...People will remember and appreciate only a steady income to the family. Color tv will go bad if a high voltage or a low voltage or a lightning strikes..So act smart..Dont think Tamil nadu people are fools..They are planning to make you fool soon.So better be careful....
ravi - abudhabi,இந்தியா
2010-08-28 04:38:49 IST
இந்த ஆண்டின் மிக சிறந்த காமடியாக கலைஞர் சொன்ன இந்த காமடி தான் என்று தினமலர் ஆசிரியரிடம் கேட்டுக்கொள்கிறேன்...
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-08-28 03:29:26 IST
அய்யா மக்களுக்கு தேவை இலவசம் அல்ல,ஏன் இதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை,மாநாட்டிற்கு வந்துள்ள ஒரு ஒரு கலக்டர் உங்கள் மாவட்டத்தில் என்ன பிரச்சனை,தண்ணீ,சாலை,மருத்துவம்,கல்வி,விவசாயம்,கொலை,கொள்ளை,இவற்றை தீர்க்க எப்படி செயலாம் என்று கேட்டு எல்லா பிரச்சனையும் தீர்த்து,மாதா மாதம் கூப்பிட்டு கலைக்டரிடம் கேளுங்க,ரூபாய் 2000 கில் வருமானம் உள்ள குடும்பம் கணக்கு எடுத்து அவர்களுக்கு வேலை வாய்பு கொடுங்க,மழை நீரை சேமித்து எப்படி விவசாயம்,குடிநீர் ஆகலாம் அதுக்கு வலி கண்டுபிடிங்க,நம் தமிழகத்திற்கு எவ்வளவு நெல் தேவை,அதை பராமரிக்க உணவு கிடங்கு,நச்சு கொல்லி கலக்காமல் எப்படி விவசாயம் செய்வது அதுக்கு ஒரு வலி சொல்லுங்க. ஏன் அய்யா எவ்ளோ பிரச்சனை இருக்கு:அதை எல்லாம் மறைத்துவிட்டு என்னமோ மக்கள் சந்தோசமா இருகாங்க,முன்று வேலை சாப்பிடிரங்க,என்னையா கதை?????? உங்கள் ஆட்சி வந்ததில் இருந்துதான் அரசு அலுவலகங்களில் வேலை நடப்பது இல்லை,லஞ்சம்,மக்கள் சோம்பேறி ஆக்கிட்டிங்க,பெண்கள் எல்லாம் சன் டிவியிலும்,கலைஞர் டிவியிலும்,ஜெயா டிவியுலும் சீரியல் பார்த்து நம் பண்பாடு கலாச்சாரம் எல்லாத்தையும் தொல்லைதுவிட்டு நிகிரங்க அய்யா? AC ROOMIL ரெஸ்ட் எடுத்து,சினிமாவுக்கு திரைகதை எழுதுவதை நிரிதிவிட்டு,தமிழ்நாடு முன்னேற நல்ல திட்டம் கொண்டுவாங்க....
ரமேஷ் - சென்னை,இந்தியா
2010-08-28 03:23:35 IST
ஐயா... இதல்லாம் உதவாது , 21 -- 100 ரூபா கட்டு நீங்க எப்ப உண்டியில போடுவீங்க (தேர்தல் comissionukku )...
தமிழன் - USA,யூ.எஸ்.ஏ
2010-08-28 02:50:51 IST
சார், நீங்க ரேம்போ கரெக்டா சொனீங்க. எல்லா கிராமத்திலும் நல்ல ரோடு இருக்கு, 24 மணி நேரம் கரண்ட் இருக்கு, அவங்க குடிக்க நல்ல குடிநீர் கிடைக்குது, எலாரும் ரொம்போ செல்வ செழிப்பா இருக்காங்க. மதுரை, திருச்சி, திருநெல்வேலி ல சென்னை போலவே நெறைய பாலங்கள் இருக்கு, எல்லா வயலும் பசுமையா இருக்கு. எல்லா விவசாயி யும் ஒரு tractor ஒரு லேப்டாப் வச்சிருக்காங்க. சென்னை ல எங்க பாத்தாலும் எச்சில் இல்லவே இல்லை எங்கு சென்றாலும் சந்தன வாசம்.... நல்லா கனவு கண்டேன் யாருப்பா என்ன எழுப்பினது? உங்க குறிக்கோளும் கரிக்கோலும் இருக்கட்டும் இது எபோ நடக்கும் ? 2 வருசதிலா ? இல்ல 20 வருசதிலா ? மக்களே இனிமேல் ஒரு அக்ரீமென்ட் போடனும் 2 வருஷத்தில் நான் சொன்ன எதையும் செய்யலேன்னா எனோட கட்சி இன்மேல் இருக்காதுன்னு. வார்த்தை ஜாலம் நம்ப நாங்க ஒனும் முனா கூனா இல்ல ........
திருநாவுகரசு - madurai,இந்தியா
2010-08-28 02:50:35 IST
உங்களின் சாதனைகளில் சிலவற்றை விட்டு விடீர்களே (1) இலங்கை தமிழர்களை நட்டாற்றில் விட்டது (2) ஊரையெல்லாம் வளைத்து அதை உங்களது சொந்த பந்தங்கள் உரிமையாக்கி கொண்டது (3) ஓட்டுக்கு பணம், பிரியாணி, குவாட்டர், ஓட்டு இயந்திரம் கொளறுபடி என்று புதிய பார்முலாவை அரங்கேற்றியது, (4) மாநகராட்சி தேர்தலில் பட்ட பகலிலே ரவுடிகளை வைத்து எதிர் கட்சிகளை அடித்தது (5) உலக புகழ் ச்பெக்ட்ரும் ஊழலை மூடி மறைக்க முயற்சி செய்தது (6) ஊரெங்கும் மணல் கொள்ளை அடித்தது (7) யாரவது! எங்காவது! திமுக அரசை குறை கூறினால் அவர்களை நைய புடைவது (8) டாஸ் மாக் ஊழியர்களை ஓட ஓட விரட்டியது (9) ஹொகேனகல் திட்டத்தை ஊற்றி மூடியது ((10) நாள்தோறும் தனக்கு பாராட்டு விழா எடுத்து கொண்டாடி கொள்வது என்று இன்னும் ஆயிரம் சொல்லி கொண்டு போகலாம், இதையெல்லாம் உங்களின் மீடியாவை வைத்து ஒரு மாயை உருவாக்கு வீர்கள். மக்கள் உங்களை பற்றி கசப்பாக பேசுகிறார்கள் என்பதை தேர்தலில் தான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். மறுபடியும் திமுக ஆட்சி என்று நினைத்தாலே அடி வயிறு இப்பவே கதி கலங்குது....
சுப்பிரமணியம் - raleigh,யூ.எஸ்.ஏ
2010-08-28 02:36:41 IST
Unless and until people wake up from Ignorance, these type of politicians will even sell India.......
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-28 02:19:16 IST
அயயாயையோ..., நான் இன்னிக்கு இங்க இருந்து பின்னங்கால் பிடரில பட தெறிச்சு ஓடிடுறேன். நம்ம சொம்புங்க நல்ல நாள்லயே சொம்படிச்சு செவிப்பறைய கிளிச்சுபுடுவாணுக. இன்னிக்கு துண்டார் வேற இவளோ புள்ளியையும் விவரத்தையும் அள்ளி வீசி இருக்காரு. கேக்கவா வேணும்? சொம்புமாறியே சைஸ்ல பெரிசா இருக்கிற வெண்கல பானைய தூக்கிட்டு வந்துடுவானுகளே. மக்களே தயவு செஞ்சு இன்னிக்கு ஒரு நாள், எல்லோரும் வீட்ட பூட்டி சாவிய இடுப்புல சொருகிட்டு, ஒரு மப்சல் பஸ்ஸ புடிச்சு வேற எங்கியாச்சும் ஓடி போய்டுங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில இந்த சொம்புங்க எல்லாவனும் வந்திடுவாணுக. சும்மா சொம்பு சத்தம் டங்... டங்... னு ஊரு பூரா போட்டு காத கிளிச்சிடுவாணுக. அயயையோ ஒடுங்க ஒடுங்க... தூரத்துல மொத சொம்போட தல தெரியிது.... வந்துட்டானுக.... டே டே மணி, இந்தா நீ இந்த கோழி கூடைக்குள்ள ஒளிஞ்சுக்கோ. யே... ஆத்தா இந்தா நீ சீக்கிரமா போய் பஸ்ல எனக்கொரு சீட் போட்டு வை. நான் இந்த மாட்ட எல்லாம் புடிச்சு கட்டிட்டு வந்திடுறேன். ஊரே கலேபரபட்டு, கைப்புள்ள மாட்டை புடிக்க ஓடுகிறான். சொம்புகள் ஊரை நெருங்குகின்றன. ஊரு என்ன ஆனது? நாளை தெரிந்து கொள்ளுங்கள்....

கருத்துகள் இல்லை: