வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

தமிழ் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில்- புளொட் சித்தார்த்தன்!

தமிழ் அரசியல் கட்சிகளின் ஒன்றியமான தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் ஆறாவது அமர்வு வவுனியாவில் நடைபெறவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற 5ஆவது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர 8 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் எதிர்வரும் 11ஆம் திகதி (செப்) 6ஆவது அரங்கம் இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை: