வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியமர்த்த திட்டம


யாழ்பாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தவும் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவும் எம்.எப்.சி.டி. என்ற அமைப்பு முன்வந்துள்ளது. மேற்படி அமைப்;பு 100 வீடுகளைப் புதிதாக அமைக்கவும் 100 வீடுகளை புனரமைப்புச் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இது தவிர தொழில் நுட்ப அறிவை வழங்கவும், தொழிற்பயிற்சிகளை வழங்கவும் முஸ்லிம் வீதியில் உள்ள உஸ்மனியா கல்லூரியை புனரமக்கவும் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட தொகைப் பணத்தை திரட்டியுள்ளதுடன் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்துள்ளது. அரசின் உதவிகளை மட்டும் நம்பி இராது இயன்றவரை இவ்வாறான பொது நிதியம் ஒன்றினுடாக மீள் குடியேற்றப் பணியை துரிதப் படுத்த அது முயற்சிப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: