வியாழன், 26 ஆகஸ்ட், 2010

சண் சீ கப்பல் அகதிகளுக்கு இலங்கையில் உள்ள உறவினர்களுடன் தொடர்புகொள்ள அனுமதி

எம் வி சண் சீ கப்பலில், கனடாவை சென்றடைந்த 492 அகதிகளுக்கும் நேற்று முதல் இலங்கையில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசி மூலம் உரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் கடந்த 3 மாதங்களாக இலங்கையில் உள்ள தமது உறவினர்களுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை.
எனினும் அதிகாரிகள், இந்த வாய்ப்பை வழங்கி அகதிகள் இலங்கையில் உள்ள உறவினர்களுடன் பேசுவதை ஒட்டுக்கேட்கக்கூடும் என அச்சத்தை கனடாவில் உள்ள தமிழ்தரப்புகள், வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: